வரம்-22

1.9K 77 2
                                    

ரேஷ்மா சென்று விட மீரா விஜயை முறைத்தாள். "மீரு மா எதுக்கு முறைக்கிறிங்க" என்று விஜய் கேட்க

"உன் கிட்ட கொஞ்சம் பேசனும் கார்டன் வரியா" என்று மீரா சொல்ல போலாமே என்று விஜய் அவள் பின்னால் செல்ல மீரா யாரும் இல்லா இடத்திற்க்கு அழைத்து சென்றாள்.

"சொல்லு மீரு" என்று விஜய் கேட்க
மீரா அவனை அணைத்துக் கொண்டாள். இதை எதிர் பார்காத விஜய் சிலையாக நிற்க அவன் கைகள் அவனை அறியாமலே அவளை அணைத்தது. அவன் சட்டை ஈரமாவதை உணர்ந்த விஜய் மீராவை நிமிர்த்தி பார்க்க அவள் அழுதுக் கொண்டிருந்தாள்.

மீரா முகத்தை விஜய் கையில் ஏந்தி "மீரு எதுக்கு டா அழுகற" என்று விஜய் அவள் கண்ணீரை துடைத்தவாறு கேட்க

"நா உன் மேல கோவமா இருக்கன் பேசாத போடா " என்று மீரா அவன் கையை தட்டி விட்டு திரும்பி நின்றுக் கொண்டாள். அவளை பின்னிருந்து அணைத்தவன்

"எதர்கென்று தெரிந்தால் தங்களை சமாதானம் செய்ய வசதியாக இருக்கும்" என்று விஜய் நாடக பானியில் கூற மீராவிற்க்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்துக் கொண்டே அவள் அவனை பார்த்தவாறு திரும்ப அவன் இடையோடு கை போட்டு கட்டிக் கொண்டான்.

மீரா அவன் கழுதோடு கை போட்டு கட்டிக் கொண்டு "எனக்கு அந்த ரேஷ்மாவ பிடிக்கல விஜி வந்ததும் என் புருஷனையே கட்டி புடிக்கிறா நீயும் இளிக்கிர " என்று அவன் கன்னத்தில் வலிக்காமல் ஒரு அடி அடித்தாள்.

"அவ பன்னதுக்கு நா என்ன டி பன்றது" என்று விஜய் பாவமாக கேட்க மீரா அவன் கன்னம் கிள்ளி

"நீ ஒன்னும் பன்ன வேணா வா உள்ள போலாம்" என்று அவள் விடுபட அவளை இழுத்து அதே போல் நிற்க வைத்து "இப்படியே போனா எப்படி" என்று விஜய் அவள் இதழை பார்த்து கேட்க அவன் பார்வையை உணர்ந்த மீரா விடுபட முயற்சிக்க தோற்று போனாள். விஜய் அவள் இதழ் நோக்கி குனிய இவ்வளவு நேரம் பார்வையாளராய் இருந்த கார்த்தி

"மீரா" என்று அழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்றான். அவன் சத்தம் கேட்டு இருவரும் விலகி நிற்க விஜய் அவனை பார்வையாலே எறித்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து மீரா சிரித்துக் கொண்டு கார்த்தியிடம்

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now