வரம்-34

1.8K 69 2
                                    

மீரா கண்களில் கண்ணீர் வர விஜய் அதை கண்டு பதறி "மீரு என்ன ஆச்சி டி எதுக்கு அழுகற" என்று கூறிக் கொண்டே விஜய் அவள் அருகில் செல்ல அவனை தடுத்தவள் "உன்ன நா அடிச்சனே எதுக்குன்னு யோசிச்சியா விஜி" என்று கேட்க

விஜய் அதன் பிறகு தான் யோசித்தான் மீரா அவனை அடித்ததற்கான காரணத்தை கேட்க மறந்ததை "ஆமா மீரு நீ ஏன் அடிச்ச நீ அடிச்சதும் நீ என்ன நம்பலையோன்னு ரொம்ப பயந்துட்டன் தெரியுமா" என்று அவன் கூற

"ஆமா பின்ன அவ நம்ம ரூம்க்கு வர அளவுக்கு நீ கேர்லஸ்ஸா இருந்து இருக்க அதுக்காக தான் நா உன்ன அடிச்சன்" என்று மீரா கோவம் பாதி அழுகை பாதியாக கூற

"மீரு ப்லீஸ் டி கோவம் கூட பட்டுக்கோ டி ஆனா அழுகாத டி என்னால உன் கண்ல இருந்து கண்ணீர் வரத பார்க்க முடியல" என்று விஜய் மீராவை அணைத்துக் கொள்ள மீரா எதும் பேசாமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். மீரா அழுவதை நிறுத்தி விட்டு அந்த அணைப்பை ரசித்துக் கொண்டிருந்தாள். கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் விலகினர்.

விஜய் சென்று கதவை திறக்க மீரா அவனுக்கு பின்னால் நின்றிருந்தாள் கதவுக்கு பின்னால் தியா நின்றிருந்தாள். தியா விஜயை ஒரு மாதிரி பார்க்க விஜய் "தியா மா ஏன் இப்படி பார்க்கற" என்று கேட்க

"டவலோட என்ன டா பன்ற ரெடி ஆகி கீழ வா" என்று தியா கூற

அப்பொழுது தான் மீராவும் விஜயை கவனித்தாள். குளித்து முடித்து ஈர தலையுடன் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிருந்தான். ஆங்காங்கே தண்ணீர் துளிகள் உடற்பயிர்ச்சி செய்து அளவாக உடலமைப்பு என்று கம்பீரமாக இருந்தான். தியாவை அனுப்பி வைத்தவன் கதவை சாற்றி விட்டு மீராவை பார்க்க மீரா விஜயை கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

விஜய் மீராவின் இடையை பிடித்து இழுத்து அவனை ஒட்டியவாறு நிற்க வைக்க மீரா விஜயின் தீண்டலில் தன்னிலை வந்தவள் "விஜி விடு டா" என்று மெல்லிய குரலில் கூற "ம்ஹூம்" என்று விஜய் கூறி மீரா கழுத்து வலைவில் முகம் புதைத்தான். இப்பொழுது கலைத்தது விஜயின் கைப்பேசி  அதை எடுத்து பார்த்தவன் அழைப்பை ஏற்று "ஏன் டா கொஞ்ச நேரம் கூட என்ன என் பொண்டாட்டி கூட இருக்க விட மாட்டிங்களா டா வை டா போன" என்று விஜய் அழைப்பை துண்டிக்க மீரா கதவருகில் சென்று கதவை திறந்து நா கீழ வெய்ட் பன்றன் சீக்கிரம் வா" என்று கூறி விட்டு ஓடி விட்டாள்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now