கொஞ்சி பேசட வேனா
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா
மழ சாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவுல இருந்தா தான
பெரும் காதல் கூடுதடாஎன்று மீரா கைபேசி அவள் தூக்கத்தை கலைக்க அதை யார் என்றும் பாராமல் எடுத்து காதில் வைத்து "ஹல்லோ" என்று கூற
"ஏய் மீரு தூங்கிட்டியா" என்று விஜய் கேட்க அதில் கடுப்பான மீரா
"டேய் தூங்கிட்டு இருந்தவள கால் பன்னி எழுப்பி விட்டுட்டு தூங்கிட்டியான்னு கேட்கற " என்று கோவமாக கேட்க
"என்னது டேய்யா என்னடி மரியாத குறையுது " என்று விஜய் கேட்க
"ஆமா டா என்ன டா பன்னுவ" என்று மீரா விடாபிடியாய் பேச
"நேர்ல இல்லங்கற தைரியதுல்ல பேசறியா நேர்ல வந்தன் அவ்வளவு தான்" என்று மிரட்ட
"நேர்ல வந்தாலும் நா இப்படி தான் டா பேசுவன் என்ன டா பன்னுவ"
"வேனா டி வாய விடாத நா நேர்ல வந்துட்டா அப்பறம் உனக்கு தான் பிரச்சன " என்று எச்சரிக்க
"டைம் பார்த்தியா பன்னிரண்டு மணி இப்ப போய் எப்படி வருவ காமெடி பன்னாம போய் தூங்கு டா" என்று மீரா கூற
"வந்துட்டா என்ன தர"
"நீ பஸ்ட் வா அப்பறம் யோசிக்கலாம் "
"யோசிக்றது எல்லாம் இல்ல நா என்ன கேட்டாலும் செய்யனும் சரியா"
"சரி" என்று வீராப்பாக சொல்ல
"சரி கண்ண மூடு இன்னும் டூ மினிட்ஸ்ல வரன் "
"என்ன டூ மினிட்ஸ்லயா" என்று மீரா அதிர்ச்சியாக கேட்க
"ஆமா வாய் பேசாம கண்ண மூடு டி " என்று மிரட்ட மீரா கண்ணை மூடி அமர்ந்தாள். அவள் பால்கனியில் ஒழிந்துக் கொண்டிருந்த விஜய் சென்று அவள் முன் நின்று