49 திருமணம்
தன்மயாவின் கழுத்தில் அந்த சங்கிலியை அமுதன் அணிவித்ததை பார்த்து, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"என்ன செய்துவிட்டீர்கள் அமுதே...! இந்த சங்கிலி எதற்காக இங்கு வைக்கப்பட்டிருக்கிறதோ...! அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் எனக்கு அணிவித்துவிட்டீர்களே...!" என்றாள் தன்மயா பதற்றத்துடன்.
"அது எந்த ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருந்தால் தான் என்ன? எப்படி இருந்தாலும் அது உன்னிடம் தானே வரப்போகிறது?" என்றான் சாதாரணமாய்.
"அதை நாம் எப்படி கூற முடியும்?"
அதைப்பற்றி தெளிவு பெற, தன் பெற்றோரை பார்த்த அமுதன், அவர்களும், அவனது தங்கையும் அதிர்ச்சியோடு நின்றதை கண்டான். எதற்காக அவர்கள் அந்த நிலைக்கு சென்றார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. என்ன தவறு நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை.
அன்பிற்கினியாள் தன் கண்களை மூடி, அந்த சங்கிலியை உமையம்மையின் கழுத்தில் இருந்து அவிழ்ப்பதற்கு முன் தான் வேண்டிக் கொண்டதை எண்ணிப் பார்த்தார்.
*என் மகனுக்கு தாம் இரண்டாவது வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். அவன் தன்மயாவை மனதார காதலிக்கிறான். அவளுக்கு அவனை மணம் முடித்து வைப்பது சரியா, தவறா என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவன் விருப்பத்தின் படி நடந்து கொள்கிறோம். அவன் உயிரோடு இருக்கிறான். அதுவே எங்களுக்கு போதுமானது. அதனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், இந்த திருமணத்தை நிகழ்த்துவது என்று முடிவெடுத்து இருக்கிறோம், தாயே! இந்த நிமிடம் முதல் அவர்களது வாழ்வு தங்கள் பொறுப்பு. அவர்களை நல்வழியில் இட்டுச் செல்லுங்கள். எந்த வழி அவர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்குமோ அந்தப் பாதையில் அவர்களை இட்டு செல்லுங்கள். அவர்கள் தங்களின் பிள்ளைகள். அவர்களை தங்களின் நிழலில் இருத்தி, அவர்களுக்கு எது நல்லதோ, அதை தேர்ந்தெடுக்க வையுங்கள்...!*
![](https://img.wattpad.com/cover/359982763-288-k478558.jpg)
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!