9 தன்மையாவின் தவிப்பு
*தலைவனைப் பிரிந்த தலைவி பசலை நோயால்(1) வாடினாள்* என்று சங்க இலக்கியத்தில் படித்தது தன்மயாவுக்கு நினைவுக்கு வந்தது.
காதலின் உணர்வைச் மிக அழகாக சொல்ல கூடிய கவிஞர்கள் வாழ்ந்த காலம், சங்க காலம். அந்த சங்க காலத்தை சேர்ந்த பொன்னி, விவரம் இல்லாமல் இருந்தது, தன்மயாவுக்கு ஆச்சரியம் அளித்தது. எல்லா காலகட்டத்திலும் விதிவிலக்குகள் உண்டு போலிருக்கிறது.
பொன்னியின் மாமியாரும், அவளது அம்மாவும் எப்படி குழந்தை பெற்றார்கள் என்று புரியவில்லை தன்மயாவுக்கு. இதை எப்படி எங்கிருந்து துவங்குவது என்றும் அவளுக்கு புரியவில்லை.
"நான் தங்களிடம் ஒன்று கேட்கலாமா?" என்றாள் பொறுக்க முடியாமல்.
"சொல்லுங்கள் அக்கா"
"நான் கேட்கிறேன் என்று என்னை தவறாக எண்ண வேண்டாம். எதற்காக தங்கள் மாமியார் உங்களிடம் சத்தமிட்டு கொண்டிருந்தார்?"
பெருமூச்சு விட்ட பொன்னி,
"தங்களைப் பார்த்தால் என் சகோதரி போல் இருக்கிறீர்கள். தங்களிடம் எனது பிரச்சனையை கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு பதினான்கு வயதான போது எனக்கு திருமணம் நடைபெற்றது. இப்பொழுது எனக்கு பதினெட்டு வயதாகிறது. ஆனால் எனக்கு இன்னும் குழந்தை பேரு வாய்க்கவில்லை. அதனால் தான் எனது மாமியார் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார்"
"தங்கள் கணவர் ஒன்றும் கூற மாட்டாரா?"
"அவரால் என்ன கூற முடியும்? நான் தான் அவர் குடும்பத்திற்கு வாரிசை அளிக்கவில்லையே...! மக்கள் கூறுவது சரியாகத் தான் இருக்கும்"
"மக்கள் என்ன கூறினார்கள்?"
"நான் சபிக்கப்பட்டவள் என்கிறார்கள். அதனால் தான் எனக்கு குழந்தை பேரு வாய்க்கவில்லையாம்"
"குழந்தை பெற்றவர்கள் அனைவரும் வரம் வாங்கி வந்தவர்களும் அல்ல... குழந்தை இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்களும் அல்ல..."
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!