18 சாட்டுரை

285 25 5
                                    

18 சாட்டுரை

தான் அரசரிடம் கொண்டு வந்த பிரச்சனை, அரசரை மட்டும் அல்லாது, தன்னையும் கூட எதிர்பாராத விதத்தில் அசைத்துப் பார்க்கப் போவதை அறியவில்லை வாகைவேந்தன்.

"என்னிடம் நீ கூற விழைவது என்ன அமுதா?"  என்றார் அரசர் ஒப்பிலாசேயோன்.

"நமது நாட்டில் பல அட்டூழியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது... மக்கள் அநீதியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்"

"நீ கூறுவது என்ன, அமுதா?"

"ஆம், தந்தையே... ஒரு காமக் கொடூரன் நம் நாட்டின் பெண்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறான்"

நடந்தவற்றை அவரிடம் விவரமாய் கூறினான் அமுதன், அது யார் என்பதை தவிர்த்து.

"இப்படிப்பட்ட காரியத்தை செய்பவன் யார்? தனது பதவியை தவறான வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவனை நாம் தண்டித்தே தீர வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி..."

"அவர் வேறு யாருமல்ல... மதங்கன் தான்...! எனது மாமா! தமது மைத்துனர்...!"

"என்ன கூறுகிறாய், அமுதா?"

"ஆம், தந்தையே...! என்னுடன் நமது அரண்மனைக்கு வருகை புரிந்திருக்கும் அந்த பெண், அதை நேரில் கண்டவள். ஒரு பெண்ணை, ஒருவன் தன் குதிரையில் அபகரித்து செல்ல முயன்றதை பார்த்த அவள், அவனுடன் போர் புரிந்து அந்த பெண்ணை காத்தாள்"

"என்ன்னன? அயல்நாட்டில் இருந்து வந்த அந்த பெண்ணுக்கு இங்கு நடக்கும் இந்த இழி செயல் தெரிந்து விட்டதா?" என்று அதை அவமானமாய் உணர்ந்தார் அரசர்.

"ஆம், தந்தையே. நம் நாட்டைச் சேர்ந்த யாரும் மதங்கனுக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இல்லை. அவரைக் கண்டு அனைவரும் மிரளுகிறார்கள்"

"நான் ஆணையிடுகிறேன். அவனை கைது செய்து, பாதாள சிறைக்கு அனுப்பு" என்றார் அரசர் கோபம் கொப்பளிக்க.

அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு மனிதன் கூக்குரலிட்டபடி ஓடி வந்தான்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now