22 ஒன்றாய் இணைந்து

300 26 2
                                    

22 ஒன்றாய் இணைந்து

"மதங்கன் உன்னை சந்தித்தாரா?" என்றான்.

"ஆம், அரசு சட்டத்திற்கு உட்பட்டு அவர் என்னைக் காண வந்திருந்தார்" என்றாள் சாதாரணமாய்.

"அதைப் பற்றி நீ என்னிடம் ஏன் கூறவில்லை?"

"கூறவேண்டும் என்று தான் நினைத்தேன். அதற்கு முன் அந்த சிறு பெண் என் கவனத்தை ஈர்த்து விட்டாள். அவளை நான் எப்படி தவிர்ப்பது?" அவள் முகத்தில் எந்த பாவமுமின்றி கூறியது, அமுதனுக்கு சரியாய் படவில்லை.

"அவர் என்ன கூறினார்? உன்னிடம் ஏதாவது கேட்டாரா?"

"அமுதே, அதைப்பற்றி பேசுவதற்கு உகந்த இடம் இது அல்ல என்பது என் கருத்து"

"ஏன்?"

"நாம் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம்"

"அதனால் என்ன?"

"நீங்கள் என்னை நம்புகிறீர்களா?"

பெருமூச்சு விட்ட அமுதன், ஆம் என்று தலையசைத்தான்.

"அது உண்மை எனில், இப்பொழுது என்னை எதுவும் கேட்க வேண்டாம். அவரை நான் சமாளித்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள். நான் அதை நிச்சயம் செய்வேன்"

என்ன கூறுவது என்று புரியாமல் நின்றான் அமுதன். அவள் அங்கிருந்து இளவஞ்சியின் அறையை நோக்கி நடந்தாள்.

இளவஞ்சி அந்த அறையின் மூலையில் அமர்ந்திருந்ததை கண்டாள். அவள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி திரையிடப்பட்டிருந்தது. புன்னகையுடன்
இளவஞ்சியிடம் வந்தாள்.

"பாருங்கள் அக்கா, இவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை தனியாய் அமர வைத்திருக்கிறார்கள்" என்றாள் சோகமாய்.

"அப்படி செய்வது தான் வழக்கம். இந்த நேரத்தில் பெண்ணுக்கு ஓய்வும், ஊட்டமும் அவசியம். அனைவரும் இணைந்து உன்னை சிறப்பாய் உபசரிக்கப் போகிறார்கள்" என்று தன்மயாவும் அவளுடன் அமர்ந்து கொண்டாள்.

"தாம் அவளுடன் அமரக்கூடாது" என்றாள் தாமரை.

"பரவாயில்லை. எங்கள் நாட்டில் இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now