36 விதிக்கப்பட்டது...

475 28 4
                                    

36 விதிக்கப்பட்டது...

தாங்கள் புதைத்து வைத்து விட்டு சென்ற இடத்தில் மணல் கடிகாரத்தை காணாமல் காஞ்சனமாலையும் உமையாளும் அதிர்ச்சி அடைந்தார்lகள்.

"அய்யய்யோ இளவரசி... அது இங்கு இல்லை..." என்று பதட்டமாய் கூறியபடி அந்த இடத்தை  மேலும் ஆழமாய் தோண்டினாள் உமையாள்.

"கவனமாக பார்...! அது எங்கு சென்று விடப் போகிறது? அங்கு தான் இருக்கும். நன்றாக தோண்டு...!" என்றாள் காஞ்சனமாலை, உமையாளை விட அதிக பதற்றத்துடன்.

அந்த மல்லிகைச் செடியை சுற்றி, கிட்டத்தட்ட ஒரு வட்டத்தையே தோண்டிவிட்டாள் உமையாள். ஆனால் அங்கு அந்த மணல் கடிகாரம் இல்லை. சோர்ந்து போய்விட்ட உமையாள் பெருமூச்சு விட்டபடி அமர்ந்தாள்.

"அது எங்கே சென்றது?" என்றாள் காஞ்சனமாலை பயத்துடன்.

"உண்மையிலேயே அது மிகவும் சக்தி வாய்ந்த மந்திர பொருளாக இருக்க வேண்டும். அதனால் தான் அது மறைந்து விட்டது" என்றாள் உமையாள்.

"இது அபசகுணத்தின் அறிகுறியாக இருக்குமா?" என்றாள் காஞ்சனமாலை நடுக்கத்துடன்.

"எனக்கு எப்படி தெரியும்? நானும் தங்களுடன் தானே இருக்கிறேன்?"

"அந்தப் பெண் தன்மயா, நாம் நினைத்ததை விட மிகவும் ஆபத்தானவளாக இருக்கிறாள்" என்றாள் காஞ்சனமாலை மனக்குமுறலுடன்.

"தாம் என்ன கூறுகிறீர்கள்?"

"அவளிடம் இருக்கும் வசிய சக்தியை பயன்படுத்தி அவள் அதை திரும்ப பெற்றிருக்க வேண்டும்"

"எப்படி கூறுகிறீர்கள்?"

"இளவரசர் வாகைவேந்தர் அரசவையில் தன்னை மறந்து அனைவர் முன்னிலையிலும்  எப்படி நகைத்தார் என்று நீ பார்க்கவில்லையா? அது மட்டுமல்ல, அவள் படுக்கையில் எவ்வளவு கைதேர்ந்தவள் என்பதை அவரிடமே கூறினாள்..."

"அப்படியா?"

"ஆம்... இளவரசரால் அவளது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று எவ்வளவு சாமர்த்தியமாய் கூறினாள் தெரியுமா?"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now