25 சான்று

326 30 7
                                    

25 சான்று

அமுதனின் காதலை குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள் தன்மயா. காதலிக்கும் பெண்ணிடம் ரோஜா பூவை நீட்டி காதலிக்கிறேன் என்று கூறுவது போன்ற சாதாரண காதல் அல்ல அது. இளவரசன் வாகைவேந்தனின் காதல்...! அவன் அதில் தீவிரமாய் இருப்பதாய் தெரிகிறது. இப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? அவனிடம் டைம் டிராவல், பேரலல் யூனிவர்ஸ் பற்றி எல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கப் போகிறாள்? அவன் அவளை நம்புவானா? ஒருவேளை நம்பாவிட்டால்? அவளுக்கு குழப்பமாய் இருந்தது. முதலில் மதங்கனின் பிரச்சனையை தீர்ப்பது என்று முடிவுக்கு வந்தாள். அதன் பிறகு அமுதனிடம் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கு தான் அவளுக்கு இரண்டு நாள் அவகாசம் இருக்கிறதே...! எப்படியாவது அவனிடம் பேசி புரிய வைத்துவிட வேண்டும்.

மறுப்புறம் அவளது முடிவை நினைத்து எந்த கவலையும் கொள்ளவில்லை அமுதன். அவள் தன் காதலை நிச்சயம் ஏற்றுக் கொள்வாள் என்று ஆணித்தரமாய் நம்பினான் அவன். அவள் நிச்சயம் தனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டாள் என்பதில் அவனுக்கு சிறிதும் ஐயமில்லை...!

மறுநாள்

தன்மயாவின் அறைக்கு வந்தான் அமுதன். அவனை பார்த்து வழக்கம் போல் புன்னகை புரிந்தாள் அவள். அவளது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது அமுதனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"நீ தயாரா, தன்மயா?"

"ஆம்"

"நீ எதற்காகவும் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. நான் உன்னுடன் இருக்கும் வரை, உன்னை எந்த இடரும் அணுக விட மாட்டேன்"

"எனக்கு தெரியும்" என்றாள் தன் சிறிய கைப்பையை எடுத்துக்கொண்டு.

"வா போகலாம்"

அவர்கள் அரசவையை நோக்கி நடந்தார்கள். அமுதன் அரசவைக்குள் நுழைந்தபோது, அவன் போரில் புரிந்த சாகசங்களையும், அடைந்த வெற்றிகளையும் கூறி அவன் வரவேற்கப்பட்டான். அனைவரும் ஏற்கனவே அரசவைக்கு வந்துவிட்டிருந்தார்கள், மதங்கனையும் குருநாதரையும் சேர்த்து...! அரசனும் அரசியும் மட்டும் தான் வரவேண்டியவர்கள்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now