ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பச்சரிசி மாக்கோலம் , மாவிலை தோரணம்.. சூரியபகவானின் ஆசீர்வாதத்துடன் விறகு அடுப்பில் சக்கரை பொங்கல்.. மூக்கரும்பின் பந்தல்.. புத்தாடைன்னு கோலாகலமா எங்கள் வீட்டில் கொண்டாடியாச்சு..
இதேபோல் , நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .
பொங்கும் பொங்கல் போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சிகள் பெருக இறைவனிடம் வேண்டுவோம்..
எப்பவும் போல் தாமதமான பதிவிறக்கு மன்னிப்பு வேண்டுகிறேன் . கடந்த பத்து நாட்களாக , அலைபேசியை கையில் எடுக்கவே முடியாத அளவிற்கு வீட்டு வேலைகள் நெட்டி தள்ளிவிட்டது.. கூடவே , வாண்டுகளின் பள்ளி விடுமுறை .. சொல்லவே வேண்டாம்..ஸாரி.. ஸாரி..😔😔🤪🤪
ப்ராப்பரா எடிட் பண்ணல.. ஸோ , மிஸ்டேக்ஸ் இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க.. 🤪🤪
இப்படிக்கு ,
கனிதேவ் 💞💞💞
❇️❇️❇️❇️❇️
பகுதி - 103
சரண் , வேண்டாம் என்றதுடன் ப்ளீஸ் என்று கண்களில் உயிர் வலியை தேக்கியவனாய் ஆறுதல் தேடவும்.. மொத்தமாக துடித்த தாமரையின் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகள் கடைவிழி ஓரம் வழிந்து ஓடினாலும் , தன்னவனை ஆறுதல் செய்வதே முதன்மையாக தோன்றியதில் , அவளது விரல்கள் மிகவும் மென்மையாக தலையை கோத.. அது தந்த இதத்திலும் ஆறுதலிலும் தன்னை நிதானித்தவனாக.. சிறிதளவு தெளிந்தவன்.. அவளில் இருந்து கீழே சரிந்து , தாமரையை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கமாக அணைந்துக் கொள்ள.. நெகிழ்ந்து இருக்கும் மனமோ , அழகான புன்னகை பூக்கச் செய்ய.. காதலின் சோர்வு முழுவதும் பரவி இருந்த போதிலும்.. பனியில் நனைந்த மலராக இருப்பவளை , மேலும் ஆரத் தழுவியவன்..
" பாப்பா.. நாளைக்கு நான் ஜம்மு போறேன்.. ஏர்லியரா கிளம்பனும்.. ம்.. வர பத்து நாள் ஆகும் .. சான்ஸ்கர்ல மொமைல் எடுக்காது.. ஸோ , அங்க இருக்குற வரைக்கும் பேச முடியாது.. ( இல்லேனா மட்டும் அவளோட நீ குழவீட்டா டா இருக்க.. ) என்று மனசாட்சி கடிப்பதையும் கண்டுக் கொள்ளாதவனாக.. மென்மையாக , அவள் கூந்தல் சுருள் முடிகளை காதுமடலுக்குள் நகர்த்தியவனாக , மெதுவாக கூறியவனின் குரலில் வழிந்த ஏக்கம்.. தாமரையை கட்டிப் போட்டு இருந்ததாய் .
ஏனோ , அவளது பார்வை முதல் முறையாக அவனை பார்ப்பது போல் வருடிக் கொண்டிருந்தது . அவள் மீது இருக்கும் கோபத்தையும் , வருத்தத்தையும் ஒதுக்கியவனாக நாடுவதும்.. பிரிவின் துயர் தாளாதவனாய் , முதல்முறையாக.. தான் ஏன் இப்படி ஒருநிலையில் இவனை சந்தித்தோம் என்று மனம் வறுந்தியவளாக.. தவித்து இருந்தாள் . ஒருவேளை , மான்சியை மணப்பதற்கு முன்பே என்னை இவர் பார்த்திருந்தால்.. என்ன செய்து இருப்பார் என்று விபரீதமாகவும் யோசனையில் மூழ்கியவளை.. மனம் தடைவிதிக்க.. இதழ்களோ மனதுடன் இணைய மறுத்து.. வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருந்தது ,
" நீங்க.. மான்சி அக்கா வீட்டுலேயே என்னை பார்த்து இருந்தா.. ", என்று..
தனக்கு மட்டுமே இடரும் மண வாழ்க்கையை நினைத்து நொந்தவனாக , காயப்படுத்தியவள் இடமே , ஆறுதல் தேடி அலையும் புத்தியை வசைப்பாடிக் கொண்டிருக்க.. தாமரையின் கேள்வி , மித்ரனின் சினத்தை நொடிக்குள் தூண்டியதாக இருந்தபோதும்.. அவ்வாறு , நிகழாமல் போனதே என்னும் ஏக்கம் , ஆழ் மனதில் குமிழிடுவதை தவிர்க்க முடியாது ஏக்கம் சுமந்த விழிகளால் , இமைக்கவும் மறந்தவனாக அவளையே வெறித்தான் .
மித்ரனின் பார்வையில் , ஒரு நொடியே.. அந்த ஏக்கம் மின்னியது.. உடனே மறைய..
" நான் ஏமாந்து இருக்க மாட்டேன்..", என்று உடல் விறைக்க கூறியவன்.. மெதுவாக , அவளை விலகி எழ.. அப்பொழுதாவது , தன் வாயை அவள் கட்டுப்படுத்தி இருந்திருக்கலாம் .
" அப்படின்னா.. நீங்க என்ன சொல்ல வரீய..", என்று தன் குரல் நடுங்க கேட்டவளின் கண்களோ , ' நான் தவறானவளா..', என்று பரிதவித்து யாசிப்பை வெளிப்படுத்த..
" பணத்துக்காக..", என்று அவன் ஆத்திரத்தில் வெடிக்க துவங்கிய மறுநொடியே , அதிர்ச்சயை வெளியிட்டவளின் விழிகளில் கண்ணீர் வடிய.. " ச்சை..', என்று கூற வந்ததை பாதியில் நிறுத்தி இறுகியவனாய் காணப்பட்டான் .
சரண் மூளைக்குள் வண்டாக குடைந்து துளையிடும் விஷயத்தில் இருந்து எவ்வாறு வெளி வருவது என்று , அவன் நினைத்து தடுமாறும் நேரத்தில்.. முயன்று அவளுடன் இயல்பை கடைப்பிடிக்க முயன்றால் , தாமரையின் பேச்சு தலைகீழாகப் புரட்டிக் கொண்டே இருந்தது .
இதற்கு முன் அவன் முகத்தில் இருந்த மையலும் , மயக்கமும் தொலைந்து போய் இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருக்க.. ஏதோ ஒன்று , அந்த நேரத் தூண்டுதலில் தன் மனதின் கேள்வியை கேட்டவளுக்கோ , தென்படும் விலகலில்.. அதிகமான காயத்தை கொடுக்கவே.. ' இவியலுக்கு என் மேல நம்பிக்கையே வராதா..', என்று உள்ளுக்குள் மறுகித் துடித்து இருந்தவளுக்கோ.. விதியின் கோரத்தை சபித்தவளாக.. மிகுந்த தவிப்புடன் ஏறிட..
அதற்கு மேல் சரணால் அவள் முன் நிற்கவும் முடியாமல் , " உன்னை பேசாதேன்னு சொன்னேன்..", என்று குதறியவனாக குளியல் அறைக்குள் புகுந்து இருந்தான் . தாமரையின் முகவாட்டத்தை காண சகிக்காதவனாக நகர்ந்து இருந்தாலும்.. நீருக்கு அடியில் நின்றுக் கொண்டவனுக்கோ , தன் பேச்சு , வெகுவாக தன் உயிரானவளை தாக்குவதை நேரடியாக காணவும் சகிக்காமல்.. அதேசமயம், ' இவள்.. இவளா..', என்ற தன் மறுகலையும் அவளிடம் வெளி வந்துவிடுவதை மறைக்கவும் முடியாமல்.. உள்ளம் உடைந்தவளாய் , முகத்தில் வேதனை சுமந்தவளாய் நிற்பதை ஏற்க முடியாமல் தடுமாறி போனான் .
படுக்கையில் , ஒற்றை போர்வைக்குள் சுருண்டு கிடந்த தாமரையின் நிலையோ.. மேலும் , கவலைக்கு உள்ளானதாய் . காதலாக தழுவியவனின் வேகத்தில் பிரிவின் ஏக்கம் கொட்டிக் கிடந்து இருந்த போதும் , அவன் விழிகளில் தென்பட்ட உயிர்வலியை உடனடியாக போக்கிவிடும் வேகம் . இதற்கு தானே காரணமாகி போனோமே என்கின்ற நினைப்பு.. உடனடியாக , மருந்திட முயற்சிக்க வலியுறுத்த.. அவன் பேச்சையும் மீறி தொடர்ந்து இருந்தாள் .
இதுநாள் வரை , பெருஞ்சினம் கொண்டு விலகி இருந்த சரண்.. இன்று , அவற்றை தூக்கிப் போட்டு டெல்லிக்கு வந்து இறங்கிய செயலும் , தனக்காக மட்டுமே என்று அறியாதவள் இல்லையே..! அதன் தைரியமும்.. அது கொடுத்த உந்துதலால் , ' வேண்டாமே..', என்ள அவன் கெஞ்சலையும் மீறி வார்த்தைகளை வெளியிட ,
சரணின் இத்தகைய பதிலை அவள் நினைத்தே இராதது . அவன் அளித்த பதிலோ , தங்கள் பந்ததின் பிணைப்பின் மீது இருக்கும் நம்பிக்கை சரிய வைப்பதாய் , அவன் அதரங்கள் கூறியதை நம்ப முடியாமல் வெறித்தவளாக இருந்தாள் . அவளை உதறிச் சென்றது போல் முழுமையாக சொல்ல வந்ததை.. சொல்லாமல்.. நகர்ந்து இருந்ததில் , தன்னை மீறி வெடித்து அழுதவளுக்கோ ,
' எனக்கு மட்டும்.. எனக்கு மட்டும்.. ஏன் இப்படி.. அப்படி நான் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்..", என்று முழங்காலில் முகம் புதைந்து அழுதவளுக்கோ , சற்று முன் வரை இருந்த பூரிப்பும் பெருமிதமும்.. மொத்தமாக அழிந்து இருந்தது .
கண்கள் சிவக்க , குளியலறையில் இருந்து வெளி வந்த சரண் தாமரையை அழுத்தமாக ஏறிட.. வீங்கிய கண்களுடன் , அவன் விழிகளை சந்திக்க துணிவு அற்றவளாய் , மெதுவாக எழுந்து நகர்ந்து இருந்தாள் . சென்ற தாமரையின் முதுகை வெறித்தவனுக்கு , குளித்த பிறகும்.. ஒட்டிக் கொண்டு இருந்த அவளது தேகத்தின் வெம்மையும் , மென்மையும் தன் உடலை விட்டு விலகாதது போலவே இருந்தது .
பெருமூச்சை வெளியேற்றியவன் , இரவு உடையை அணிந்து.. சிகரெட்டை கையில் எடுக்க.. தாமரை நீருக்கு அடியில் நின்று நிலைப்படுத்திக் கொள்ள முயன்று இருக்க.. நீர்பட்ட மேனியில் அங்காங்கே தென்பட்ட எரிச்சல்.. சரண் முரட்டுத்தனத்தின் அடையாளங்களின் மிச்சமாக , இன்பத்தையும் , துன்பத்தையும் ஒருங்கே விதைத்ததாய் .
அவரது அறையில் இருந்த மயூரிக்கு மகனின் வருகையை நினைத்து பெருமிதமாக இருந்தார் . அவன் இங்கு வந்ததில் இருந்து சரணின் பார்வை அவளை மட்டுமே வட்டம் அடித்ததையும் , விழாவின் முடிவிற்குள் தன் கை வளைவிலேயே வைத்து இருந்ததும்.. தனிமைக்காக தவித்ததையும் பார்த்த பிறகோ.. ஒருவித நிம்மதி. கண்டிப்பாக , தாமரையை புரிந்துக் கொள்வான் என்று . இதற்கு முன்பு மான்சியுடன் சண்டை வருகையில் எல்லாம்.. ' நீயே அனுசரித்து போக வேண்டும்.. நீ விரும்பி மணந்தவள் தானே.. குடும்ப கௌரவம் என்றும் உன் திருமணத்தால் குறையக் கூடாது..', என்று அடுக்கடுக்காக கூறி.. அவளை அழைத்து வர அனுப்பிய செயலுக்காக இன்று வருந்தினார் .
பெரியவர்களாக , தம் மகனுக்கு தாங்களே நியாயம் செய்யவில்லையே என்று . அன்று , மான்சியின் தவறுக்கு அவளை கண்டித்து இருந்தால் , இன்று இச்சிறு பெண்ணின் மீது நடந்துக் கொள்ளும் முறைக்கு கண்டிக்கவும் முடியாமல் போனதை நினைத்து குமைந்தவரின் மனதிற்கு.. பால் வார்த்தது போல் , அவன் செயல் இருந்தது .
அதிக சங்கடமும் உறக்கத்தை கெடுக்கும் என்றால் , அதேநிலை உருவெடுக்கும்.. அதீத சந்தோஷத்திற்கும்.. அதன் சான்று நள்ளிரவை கடந்தும் உறங்காமல் பால்கனியில் நின்று இருந்தார் .. அதேபோல் , சரணும் வெளியே நின்று புகைத்துக் கொண்டு இருந்தான் . முதலில் , கவனிக்க தவறியவர்.. ஏதோ தோன்றியதால் , அங்கே பார்வையை சுழற்ற.. முகத்தில் தீவிரத்தை சுமந்தவனாக.. புகைத்துக் கொண்டு இருந்தான் .
ஒருவேளை , தாமரை கருவுற்று இருப்பது தாமதமாக தெரிந்ததால் , வேதனையில் தவிக்கிறானோ என்று அந்த தாய் உள்ளம் நொடிக்குள் பதறி.. ' சரண்..', என்று அழைக்க வாய் திறக்க நினைத்த வேளையில் தாமரையின் வருகை தடை செய்து இருந்தது .
சரண் கூற வந்ததை பாதியிலேயே நிறுத்தி இருந்ததாலும் , அதன் அர்த்தம் புரிந்ததில் , இதயம் முழுவதும் பரவிய வலியின் கணம் தாளாதவளாய் துடித்தாலும் ,
' ஏம் புள்ள உனக்கு அவியல பற்றி தெரியாதததா.. அவியபட்ட பாட்டுக்கு ( கஷ்டத்திற்கு ) இந்தளவுக்கு கூட கோவியக்கலேனா ( கோபப்படவில்லை என்றால் ) எப்படி.. எல்லாந் தெரிஞ்ச நீயே வெசனப்படலாமா..) என்று கணவனுக்கு சாதகமாகவே யோசனை வழங்கியதில்.. சிறிது அளவு தெளிந்தவள்.. விம்மும் இதயத்தை கட்டுப்படுத்தியவளாக , ' நான் அப்படிப்பட்டவளா..', என்று வெதும்பும் மனதையும் தட்டிக் கொடுத்து , நடுங்கும் தேகத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை கடைப் பிடிக்க.. எழும் , கோபத்தையோ , வருத்தத்தையோ காண்பிக்க விரும்பாதவளாய் ,
" தூங்காம.. இங்க என்ன செய்றீக..", என்று தனக்குள் எழும் உதறல்கள் அனைத்தையும் புதைத்தவளாக , மென்குரலில் வினவ..
வெண்புகையில் மூழ்கி இருந்தவனுக்கும்.. அவள் தவிப்பு எட்டாமல் இல்லை.. ஆனால் , அவளால் தூண்டப்பட்டு இருந்த சினத்தால் மௌனம் சாதித்து.. அலட்சியம் போல் பதில் கூறாது.. தன் வேலையில் மூழ்கி இருக்க.. பெண்ணவளின் கொலுசு ஒலியோ , அவனை நெருங்கிக் கொண்டு இருந்தது .
அவன் முதுக்கிற்கு பின்பாக நின்றவள் , தன் மீது தவறே இல்லாத போதும்.. " ஸா.. ரி..", என்று முனங்க.. அப்பொழுதும் , சரணிடத்தில் அசைவில்லாமல் போக.. தைரியத்தை திரட்டியவளாக , பணத்திற்காக அவனிடம் வந்ததாக அவன் கூற வந்ததையும் பின்னுக்குத் தள்ளியவளாய் , துடிக்கும் கீழ் இதழை கடித்து நடுக்கத்தை அடக்கி , அவன் மணிக்கட்டை பிடித்தவள் ,
" இனிமேல் , உங்களை மீறி பேச மாட்டேன்.. மன்னிக்க மாட்டியளா..", என்று குரல் நடுங்க பரிதவிப்புடன் பேச.. அதற்கு மேல் அவனால் அசையாமல் இருக்க முடியாமல் , " நீ போய தூங்கு ..", என்ற கட்டளை பிறக்க..
" நீங்களும் வாங்க.. ", என்று கெஞ்சினாள் .
" ம்ச்சு.. ஸ்மோக் பண்ணீட்டு வரேன்.. உள்ள போ டீ..", என்று தன் சிகரெட் பிடித்து இருந்த விரல்களால் அழுத்தமாக நெற்றியை நீவி.. மீண்டிக் கிடக்கும் எரிச்சலையும் அவள் மீது முழுமையாக காட்ட முடியாமல் போவதையும் நினைத்து , சுற்றுப்புறம் மறந்தவனாய்.. வேகமாக , இரு கைகளால் அவளது தோள்களை பற்றி இழுத்து ,
" என்ன தான்டீ வேணும் உனக்கு.. ஏன் இப்படி சித்திரவதை செய்ற.. என் கண்ணு முன்னாடி நிக்காம போய் தொலை.. நீ என்ன செஞ்சாலும்.. நானாவே உன் பின்னாடி கெஞ்சீட்டு திரியறதால.. என்ன வேணா செய்யலாம்னு நினைச்சிட்டியா.. ", என்று வெடித்து.. , தன் அழுத்தத்தில் இருந்து வெளி வர நினைத்தவனாக , வேகமாக புகைத்து வெளி விட.. சுரீர் என்று முகத்தில் மோதிய புகையால் உடனடியாக , தாமரைக்கு வயிற்றைப் புரட்டி எடுக்கவே , கட்டுப்படுத்த முயன்று தோற்றவளாய் , வாயில் கையை வைத்து வாஷ்பேஷனிடம் ஓட..
" பாப்பா.. என்னாச்சு..", என்று
கையில் இருந்ததை விட்டு எறிந்தவனாக , அவள் பின்னோடு விரைந்துச் சென்று தாங்கிக் கொண்டான் .
அவர்களையே கவனித்தவராக நின்று இருந்த மயூரிக்கு மருமகளின் அறைக்குள் செல்ல கால்கள் பரபரத்தாலும் , சற்றுமுன் நடந்த நிகழ்வு.. அவரை தேக்க செய்து இருந்தது . தன் மகனின் டென்ஷன் , தாமரையின் சமாதானத்திற்கு காண்பித்த கடுமையான கோபம் , இப்பொழுது அவளை பதற்றத்துடன் தாங்கிய செயல் என்று இருக்க.. அவர்களே , பார்த்துக் கொள்ளட்டும் என்று பிடிவாதமாக நின்றுவிட்டார் . ஆனாலும் , தன் மகனின் போராட்டம் என்று முடிவிற்கு வருமோ என்று கலங்கியவராய் இருந்தார் .
குடல் வெளிவரும் போல் அவள் வாந்தி எடுக்க.. " பாப்பா.. என்னாச்சு.. ஏன் திடீர்னு வாமிட் பண்ற.. இப்ப ஓகேயா..", என்று அடுக்கடுக்காக தாங்கியவனாக பரிதவிக்க..
ஓய்தவளாய் , அவன் நெஞ்சின் மீதே சோர்ந்து சாய்ந்தவள் , "ஒன்னுமில்லை.. இப்போ பரவாயில்லை..", என்று அவன் கரங்களுக்குள் இருந்தே நடந்து படுக்கையில் சாய்வாக அமர்த்தியவன் , அவள் அருகில் உட்கார்ந்து , மென்மையாக தலையை கோதியவாறே , "சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா.. வயிறு வலிக்குதா.. டாக்டருக்கு போன் பண்ணவா..", என்று அக்கறையுடன் தவிக்க..
நன்கு அவன் நெஞ்சில் தலையை சாய்த்தவளாக , " ம்ச்சு.. எதுவும் வேண்டாங்க.. மசக்கை.. இந்த சிகரெட் ஸ்மெல் மட்டும் வயித்தை பிரட்டுது.. மூக்குல நெடி ஏறினதும் கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை ..", என்று சோர்வாய் சிரித்து விழிமூடிக் கொள்ள ,
' மசக்கை..' என்ற சொல்லின் அர்த்தம் விளங்காத போதும் , சிகரெட் ஸ்மெல் பிடிக்கவில்லை என்றதிலேயே , " ம்..", என்று முனங்கலாய் பதில் சொல்லவும்..
" ஸாரி.. ", என்று அவள் கண்கள் இறைஞ்சியது , அது தாளாதவனாய் , அவளை இழுத்து அணைத்து தோள் வளைவில் சாய்த்தவனாக , " எதையும் யோசிக்காம தூங்கு.. பாப்பா.. நான் நாளைக்கு சீக்கிரமா கிளம்பனும்..", என்றான் .
" ம்.. கண்டிப்பா நீங்க போயே ஆகணுமா..", என்று வினவ..
" ம்ச்சு.. இது என்ன கேள்வி.. ", என்று சற்று கண்டிப்புடன் குரலை உயர்த்தியதுமே , முகம் புதைத்து விழிமூட முயற்சிக்க..
" பாப்பா.. போயிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்திடுவேன்.. ஓகேயா..", என்று மென்குரலில் அமைதியாக கூறினாலும் , மெதுவாக அவளது வயிற்றை தடவியவனாகவே சொல்லவும் , பளிச்சென்று சிரிக்க முயன்று தோற்றவளாய் நன்கு சாய்ந்துக் கொண்டாள் .
சரணின் விரல்கள்.. வருடல்களை நிறுத்தி இருக்கவில்லை . அவ்வளவு ஓங்காரமாக, வயிற்றைப் பிடித்தவளாக வாந்தி எடுத்ததில் பயந்தே போனான் . வயிற்றில் வலி இருப்பதாக நினைத்து அவன் வருட.. தாமரையோ , தவறாக புரிந்துக் கொண்டாள் .
ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்த போதும் , தாமரை இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்ற எண்ணம் தோன்றியதுமே , அதிகமாக , அவளை அணைத்துக் கொள்ள.. அதன் சுகத்தில் எப்பொழுதோ , உறங்கி இருந்தாள் .
❇️❇️❇️❇️❇️
தன் தாய் வீட்டில் இருந்த தாரா உறங்காமல் , ரிச்சர்ட்டின் வருகைக்காக காத்திருக்க.. அவளது சிந்தனைகளோ , கடந்த ஒரு வாக் கால மண வாழ்க்கையை அசைப் போட்டதாய் .
முதல் இரவு அன்று நல்லப்பிள்ளை போல் விட்டு விலகி உறங்கியவன்.. மறுநாள் , விடிந்தும் விடியாத பொழுதே தேடல்களை துவங்கி துவள செய்தவன் . இன்று வரை , சங்கமத்தில் ஈடுபடவில்லை . அதேசமயம் , ஆசையான பார்வைக்கோ.. செல்ல சீண்டல்களுக்கும் குறைவு இல்லாமலே இருந்தது . ஆனில் இரவின் கூடல் , ம்ஹும்..
திருமணத்தின் மறுநாள் தாமதமாக எழுந்து கீழ் இறங்கி வந்தவளுக்கு வெட்கம் ஆட்கொள்ள , சிறு சங்கடத்துடனே இறங்கி வந்தவளை வரவேற்றது சாந்தி மட்டுமே . தாமரையை , அவளது வீட்டில் விடச் சென்றதாக கூறினார் .
அதன் பின் மறுவீடு.. சொந்தங்களின் வீடுகளுக்கு விருந்து.. என்று நேரங்கள் ரெக்கைக்கட்டிப் பறந்து இருக்க.. இன்று , ஒரு முக்கிய அலுவலக வேலையால் மீட்டிங்க்கு விக்கியுடன் சென்று இருக்கிறான் .
மணி இரண்டை கடந்த பிறகே , வாயிற்மணி ஓசை கேட்க.. அவசரமாக கதவு திறந்தவளை , "உன்னை தூங்குன்னு சொன்னேனே..", என்று மென்மையாக கடிந்தவனாகவே நுழைய.. பளீர் சிரிப்பால் , அதனை கடந்தவள்.. " சாப்பிட்டீங்களா ரிச்சா..",
" ம்.. ரொம்ப டையர்டா இருக்கு தாரா.. ", என்றவனாக அவர்களது அறைக்குள் நுழைந்தவன்.. அவசர குளியலுடன் படுக்கையில் விழ..
" என்னாச்சு ப்பா.. ", என்று மென்மையாக தலைகோத..
" சும்மா.. தாமரை பேசுனாளா.. எப்படி இருக்காளாம்.. சரண் எதுவும் கால் பண்ணினாரா.. ", என்று அடுக்கடுக்காக வினவ..
" பேசவே இல்லை.. நான் அவ மேல பயங்கரமான கோபத்தில இருக்கேன்.. எவ்வளவு அழுத்தம் பாருங்க.. உங்க தங்கச்சில்ல.. அதான்..", என்று படபடவென பொறிந்தவளின் பேச்சில் சோர்வுகள் மொத்தமும் விலகி ஓடி இருக்க...
" அப்படி என்ன அழுத்தமாம் எங்களுக்கு..", என்று குறும்புடன் சிரித்தவனை நன்கு முறைத்தவள்..
" அழுத்தம் இல்லாம.. இப்போ வரை ஐ லவ் யூன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலை.. அவ மட்டும் என்ன.. ", என்று முகம் சிவக்க கடுகடுப்படிக்க..
" ஹா.. ஹா.. எதுக்கு எதை சொல்ற.. நாங்க சொல்லேன்னா என்ன.. உன் ஃப்ரெண்ட் போன் பண்ணினா.. ", என்று சீண்டலாக சொல்லவும். முறைத்தவளாய் முகத்தை திருப்பவும் ,
" ஓய் , என்ன டீ முகத்தை திருப்புற.. உண்மைய சொல்லீட்டா தாங்காதே..", என்று அவள் முதுகுடன் ஓட்டியவனா மேலும் வம்பு இழுக்க..
" ஆமா , பெரிய உண்மை விளம்பி..", என்று அவன் பக்கமாக திரும்பி படுத்தவளாய் முறைக்க..
" இல்லையா பின்னே.. " என்றான் குறும்புடன்.. ரிச்சர்ட் முகத்தில் விரவி இருந்த குறும்பும் விழிகளில் பளபளப்பும் , இதழ்களில் தவழ்ந்த புன்னகையும் என்று மிக நெருக்கமாக தெரிந்தவனின் தோற்றத்தில் .. மாய கண்ணனிடம் மயங்கும் ராதையாக அவள் மாறி..
" நீ இப்படி சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க ரிச்சா..", என்று குழைவாக கூற..
மனம் நிறைந்தவளின் பாராட்டும் , விழிகளில் பரவி இருக்கும் மயக்கமும் , தாமரை சரணின் சச்சரவுகளால் குழப்பத்தில் உறங்கி இருந்த அவன் ஆண்மை , அழகு மனைவியின் மையலில் விழித்து விடவே.. ரிச்சர்ட்டின் விழிகளின் நிறம் மாற துவங்கியது .