பகுதி - 21
கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.. என்ற குரல் அந்த இடத்தையே நிறைத்திருக்க , முகம் இறுகியிருந்தவனின் பற்களின் நறநறவென சத்தம்.. அந்த மேளச்சத்ததிலும் அருகில் இருந்தவர்களுக்கு நன்கு கேட்டது .
பதுமையாக அமர்ந்திருந்தவளின் செவிகளை மட்டும் எட்டாமல் போகுமா..? தாமரைக்கும் நன்கு கேட்டது . ஆனாலும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், அதேபோல் இமையை குடையாய் தாழ்த்தி அவள் அமர்ந்திருக்க , அதில் மேலும் அவன் உள்ளக் கொதிப்பு அதிகரிக்கவே செய்ய.. தனக்கு எதிரே இருக்கு தீ குண்டத்தைக்காட்டிலும்.. அதிகமாக உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்தான்.
தாலியை தன் கரத்தில் வைத்துக் கொண்டு, அவளை ஏறிட்டால்.. வந்தது முதல் எப்படி இருந்தாளோ அப்படியே அவள் இருக்கிறாள் . அதில் மேலும் வெகுண்டவன் , முகத்தில் எவ்வித கோபத்தையும் காண்பிக்காமல், அவள் காதின் அருகே ,
" நான் என்னடீ பண்ணணும்.. கட்டவா.. விசிறியடிக்கவா..? " என்ற உறுமலில்.. திடுக்கிட்டு சரணின் முகம் பார்க்க , அது அழகாக புகைப்படக் கருவியில் பதிவானது .
அவன் உதடுகள் அசைந்ததாக தெரியவில்லை . "நாழியலாகறது.. " என்று கூறிய ஐயரையும் கண்டுக் கொள்ளாமல்,' நீ சொல்..' என்பது போல் பார்த்திருக்க.. ம்.. என்று வெளிவராத குரலில் முனங்கிய அடுத்த கணம்.. மங்கள நாணலை பூண்டிருந்தான் . மூன்றாம் முடிச்சை போடுவதற்காக.. குனிந்திருந்த தங்கையிடம்.. முறைப்பை பதிலாக்கி.. அவனே மூன்று முடிச்சுக்களையும் போட்டவனாய்..
இந்த திருமணம் வேண்டவே வேண்டாம் என்று அழுச்சாட்டியம் செய்தவனா.. தாலியை கட்டாமல் அரை நொடியே.. ஆனாலும் அவள் வார்த்தைக்காக காத்திருந்தான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் அன்னை மயூரியால் .
ஆஹா.. பாவம் ! அவர் அறிய வாய்ப்பில்லையே.. அவன் கூறிய வார்த்தைகளை.. அதுமட்டும் தெரிந்திருந்தால்.. இந்த யோசனைகளுக்கே அவரிடத்தில் இடமிருந்திருக்காது.
JE LEEST
வா.. வா... என் அன்பே...
Romantiekகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...