பகுதி - 61
சரணின் திருமணத்தைப் பற்றி பேசியதுமே , தாமரையை விரும்புவதாகவும்.. அவளை பாரீஸிலேயே மணந்துக் கொண்டதாகவும் தயக்கமே இல்லாமல் பொய் சொல்லிவிட்டான் . ஏன் , அவளை கூறினோம் என்று இந்த நிமிடம் வரை அவனிடத்தில் பதில் இல்லை என்றே கூற வேண்டும் .
ஆனால் , ராம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக கூறியதும்.. அவனால் , ஏற்கவே முடியவில்லை . நடிப்பிற்காக அழைத்து அவளை அனுப்பிவிடும் முடிவில் இருந்தவனுக்கும் தாயகத்தில் நீண்டித்திருப்பதையும் விரும்பியிருக்கவில்லை .
அது அத்தனையையும் ராம் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்றே கூற வேண்டும் . மீண்டும் , கல்யாணம் என்ற நிகழ்விற்கு.. "எத்தனை முறை தாலிக் கட்டுவது", என்று கூறி அவன் பிடிவாதமாக மறுத்த பொழுதோ..
" மனைவியின் கழுத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் , கட்டலாம்.. தப்பே இல்லை.. எங்க அப்பாவே மூணாவது முறையாக தாலி கட்டி இருக்கிறார் . அவர் பேரன் நீ.. கூடுதலாகவே கட்டலாம்..", என்று விளையாட்டு பேச்சைப் போல் தட்டிக் கழித்ததோடு அல்லாமல்.. சரணின் விருப்பத்திற்கு எதிராகவே நிகழ்த்தி இருந்தார் .
திருமணத்தன்றும் , அவனால் இயல்பாக தாமரையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்ததே நிஜம் . ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் தொக்கி நிற்கும் கேள்வியும்.. வியப்பும்.. ஏனோ , அந்நியப்படுத்துவது போல் இருப்பதை உணர்ந்திருந்ததாலேயே.. அனுமதியை வேண்டி அரைநொடியேனும் , தாலியை ஏந்தி அவள் சம்மதத்திற்காக தாமதித்திருந்தான் .
அவளை கண்ட நாள் முதல் ஏற்பட்ட தடுமாற்றத்திற்கு காரணத்தை அறிய முடியாது போனாலும்.. மனைவி என்று அவ்வளவு எளிதாக ஏற்க முடியாமல் தடுமாறி இருந்தவனுக்கு.. மான்சியுடனான முத்தக்காட்சியிலும் நடிக்க முடியாமல்.. அருவருத்து விலகினானோ.. அந்த நொடி , தாமரை , தன் உள்ளத்தில் வேரூன்றி படர்ந்து .. மலர்ந்து விரிந்திருக்கிறாள்.. என்று புரிந்துக் கொண்டான்.
DU LIEST GERADE
வா.. வா... என் அன்பே...
Romantikகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...