❤️பகுதி - 113 ❤️
தாமரையின் அதரங்களில் இருந்து வெளி வந்த கேள்வியால் , சுக்கல் சுக்கலாய் சரண் மித்ரன் சிதறிப் போனான் என்றாலும் மிகையில்லை . பல வருடங்களுக்கு பிறகு அவனுக்கு ஏற்பட்டு இருக்கும் மற்றொரு பூகம்பம்.. அதில் , ஏற்பட்ட உறைநிலை என்று அவன் நின்று இருந்தான் .
அன்று , அவளால் ( மான்சியால் ) நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சத்தினால் என்றால் , இன்றோ , அவன் உயிரானவளுக்கு அவனால் கொடுக்கப்பட்ட காயங்களின் உச்சத்தினால் என்பதால் , சிகரமாய் உயர்ந்து நிற்கும் ஆண்மகன் உள்ளுக்குள் வெடித்தே சிதறி இருக்க.. அவன் ஆறுதல் மொழிகளுக்காக , காத்து இருந்து அவன் கண்ணோடு உயிரை கலக்கவிட்டவளாய் எதிர்பார்த்து காத்து இருந்த தாமரைக்கோ , கணவனின் மௌனம் ஏமாற்றத்தை நடவே , கலங்கிய கண்களை அவனுக்கு காண்பிக்க விரும்பாதவளாய் , விரக்தியாக நகர முயற்சிக்க.. மனைவியின் நோக்கம் புரிந்த நொடியில் , பட்டென்று அவள் கரம் பிடித்து தேக்கியவன்.. ஏதோ சொல்ல வாய் திறக்கும் வேளை , அவர்களது அறைக்கதவு தட்டப்படவே , அவனுடைய பேச்சு தடைப்பட்டதாய் , இருவராலும் பேசிக் கொள்ள முடியாது போகவே ,
" கமிங்.. ", என்று அவளுக்கு முன்பாக சென்று கதவை சரண் திறக்க.. வேலையாள் ஒருவர் ராம் ப்ரசாத் கீழே அழைப்பதாக கூறிச் சென்றார் .
" பாப்பா.. வந்து பேசிக்கலாம்.. அப்பா கூப்பிடுறாங்க..", என்று கூறியவனுக்கோ , ' எதையும் போட்டு குழப்பிக்காத டீ.. உடம்புக்கு மறுபடியும் முடியாம வந்திடும்..', என்று கடந்த பத்து நாட்களின் மருத்துவமனை வாசத்தினால் அவளிடம் கூறத் தோன்றினாலும் , அவளது வார்த்தைகள் அவனை கட்டிப் போட்டு வைத்து இருந்தது என்றே சொல்லலாம் .
' எங்கே உன் குழந்தைக்காகவா..', என்று சொல்லி விடுவளோ என்று அஞ்சியே பாதியோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான் .
❤️❤️❤️❤️
ஆரவ்வின் இல்லத்திலோ .. தன் மெத்தையில் , முதுகைக் காட்டியவளாக மான்சி சுருண்டு கிடக்க.. ஆரவ்வோ , விழாவிற்கு கிளம்பும் ஆயத்தத்தில் இருந்தான் . ஒப்பனையற்ற முகத்திலோ , ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் இருந்தவனின் வெளிர் பச்சை கருவிழிகளோ , பரிதாபமாய் தன் மனைவியை வெறித்தவாறு இருந்தது .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...