❤️பகுதி - 118❤️
சத்தம் இல்லா பிள்ளையாய் அவள் , வளைந்து நெளிந்து புன்னகையுடன் மலையின் உச்சியில் தவழும் நீரோடை அவள் . பற்றிக் கொள்ள தாயவள் இல்லாமல் போனதில் பள்ளத்தில் தவறி விழவே அலறும் குழந்தையாய் , ஆர்ப்பரித்ததோ ? கொட்டும் மலை அருவி..!
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எங்கும் பச்சை நிறங்களும் , வானில் இருந்து இறங்கிய வெள்ளிக்கம்பி அருவிகளுமே கண்களுக்கு விருந்தாக , அந்த ஏகாந்தமான இடத்திலும் குளுமையை தொலைத்தவனாய் இயக்குநர் வேந்தன் இருந்தான் .
" ஏய்.. என்னடா அங்க சத்தம்..", என்று ஓங்கிய குரல் அந்த இடத்தையே ஒரு நொடி உறைய செய்யவே திடுக்கிட்ட பறவைகளோ கூச்சலுடன் வானில் படபடத்து பறக்க.. அங்கு இருந்த ஆட்களோ மூச்சு விடவும் மறந்தே போயினர் .
வேந்தனின் குரலில் இருந்த வேகத்திலேயே , விரைவாக நெருங்கிய அசிஸ்டன்ட் டைரக்டரான தமன்.. ஓடி வந்தவன் ,
" அது. அது அது ஒன்னும் இல்லை ஸார் டைய்லாக் சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன் ஸார் ... வேற.. வேற ஒன்னும் இல்லை ஸார் .", என்று கிசுகிசுத்த குரலில் மிகுந்த பணிவுடன் அச்சத்தையும் மறைத்தவனாக , அவனிடம் குனிந்து பேச ,
" என்ன பு*** இப்ப தெரிஞ்சிடும்..", என்று சீறிக் கொண்டே
" கெட் ரெடி..", என்று மீண்டும் ஒரு அலறலை விடுத்து எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க நகர்ந்து இருந்தான் .
" வந்ததுமே இன்னைக்கு ஆரம்பிச்சுட்டான் . தனியா நகர்ந்தப்பவே உஷாராகாம விட்டுடேன் . ", என்று புலம்பியவனாகவே தமன் நடிகர்களிடம் சென்று தயாராக கூறியவன் மறக்காமல் அவன் மனநிலையையும் விவரித்து , ஒழுங்க நடிங்க என்றும் கூறியே அவன் வேலைகளில் கவனமானான் .
சற்று தொலைவில் , சென்று புகையை பற்ற வைத்தவனுக்கும் நெஞ்சில் இருந்த நெருப்பு அடங்க மறுத்ததாய் . " யாரு இப்போ.. இவளை கூப்பிட சொன்னது ச்சை..", என்று மனதோடு குமுறியவன் தன் வாலக்காலால் தரையை எட்டி உதைத்து சினத்தை வெளிப்படுத்திய பின்பும் காதுமடல் வரை சூடு ஏறி இருந்தது குறையவில்லை . தன் கரத்தில் இருந்த அலைபேசியை வெறித்தவனாக சிலகணங்கள் நேரத்தை செலவிட்டவன்... இப்படியே , நின்றுக் கொண்டு இருந்தால் மேலும் மேலும் மண்டையின் சூடு அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று எண்ணியவனாய் வேலைக்குள் தன்னை மூழ்கடிக்க நினைத்து நகர்ந்து இருந்தான் .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
ESTÁS LEYENDO
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...