வா..வா.. என் அன்பே - 49

1.5K 50 11
                                    

பகுதி - 49

பூங்காற்று வாசத்தில்.. பூவையவளுக்கு விழிப்பு ஏற்பட.. குயிலின் குரலிசை.. பகலவனின் வருகையை அறிவிக்க.. விழி மலர்ந்த தாமரைக்கு.. இரவின் மிச்சம்.. சிறு சிலிர்பை ஏற்படுத்தி.. விடிந்த அழகான காலை பொழுதாய்..

கண் விழித்தவளுக்கோ.. சரண் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிந்தாலும்..  அடர்ந்த அவனது அசைந்தாடும்.. பளபளக்கும் சிகையே.. மிக நெருக்கமாக.. தெரிந்து விருந்தளித்தில்.. அவளிடம் மெல்லிய புன்முறுவல் உதித்தது..

நேற்றைய இரவின் மிச்சம் பனித்துளி போல்.. ஒட்டிக் கொண்டு இருந்தாலும்.. தன் மார்பில் சுகமாக உறங்குபவனை .. காண.. காண..  மெல்லிய இதம் தொலைந்து , குழப்பங்களில் சிக்குண்டு தவித்தவளாய் ஆனாள்‌ .

கூடலின் முடிவில்.. உறக்கத்தை தொடர்ந்தே இருந்தாலும்.. அவள் நெற்றியில் முத்தம் பதித்து.. அவளை.. தன் மேல் சாய்த்துக் கொண்டவன்.. எப்பொழுது , அவளையே தலையணையாக மாற்றினானோ.. அவளது மார்பிற்கு மத்தியில் முகத்தை புதைத்துக் கொண்டு.. அழுத்தமாக படர்ந்திருப்பவனை விலக்க முடியாமல் தடுமாறியது ஒருபுறமாக இருந்தாலும்.. நடப்பவையை நம்பவும் முடியாமல்.. அதேசமயம் மறுக்கவும் முடியாதவளாய் திகைத்துக் கிடந்தாள்.. சரண் முழிப்பதற்குள்ளாக வெளியேறி விட வேண்டும் என்றே அழுத்தமாக நினைக்கத் தோன்றியது .

அவன் வெளிப்படுத்திய காதலை விடவும்.. வெறுத்த மான்சியின் பெயரே.. உச்சந்தலையில் நச்சென்று , பெரிய ஆணியைக் கொண்டு தாக்கியது போல் இருக்க.. தாமரை தான் பாட்டுப் பாடிய பெண் என்று தெரிய நேர்ந்தால்.. அந்த நினைப்பு எழுந்தவுடனேயே.. மெல்லியாளின் உடல் வெடவெடக்க துவங்கிவிட்டது.. ஆழ்ந்த உறக்கத்திலும் , அவனால் உணர்ந்துக் கொள்ளப்பட ..

" ம்.. என்ன.. பேசாம தூங்குடீ..", என்று மேலும் ஆழமாக புதைந்துக் கொண்டவனுக்கோ.. இடையிடும் , நடுக்கத்தை விரும்பாதவனாய்.. இருந்ததில் , மெல்லிய அதட்டல் போட்டு.. உறக்கத்தை தொடர்ந்தவனிடம்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now