பகுதி - 88
சரண் வீசிய சொற்கள், கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றியது போல், துடிதுடித்து போனாள் .
கணவனின் அருகாமையில் மெழுகாய் உருகவே நேற்றிரவு முதல் மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது . ஆனால் , அறியாமல் செய்த செயலால் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு.. அதன் கணம் தாளாமலேயே , உண்மையை வெளிப்படுத்தி இருந்தாள் . ஆனால் , அதன் தாக்கம் எரிமலையின் குழம்பாய் , அவளை தாக்கும் என்று நினைத்திருக்கவே இல்லை .
வெளிறிய அவளது முகத்தை காண முடியாதவனாய் , இறுக்கமாக விழிமூடிக் கொண்டவனுக்கோ , ஆத்திரம் மட்டுமே உடல் முழுவதும் உஷ்ணத்தை அதிகரிக்க செய்திருந்ததில் , எப்பொழுதும் போலவே.. நிதானத்தை இழந்தவன்.. எப்பொழுதோ , அவளது ஒற்றை ஆடையை நீக்கி.. அவன் மட்டும் ஆடையாகி போயிருந்தில் , வலப்பக்கமாய் சரிந்தவன்.. அணுவணுவாய் , அவளது வெற்று உடலில் பாய்ந்த பார்வையில்.. அணு அளவிலும் காதல் கலக்காமல் , காமத்தை நிறைத்து மொய்த்தவனாக , சங்கு கழுத்தில் துவங்கிய.. அவனது விரல்களின் ஊர்வலம்.. ஆங்காங்கே , மிகுந்த அழுத்தத்துடன் பயணித்து.. வயிற்றுப் பகுதிக்கு வந்து இருக்க.. அதில் , மேலும் அழுத்தமாக கோலமிட்டவன்..
" பரவால்லை.. கொஞ்சம் தொப்பை போட்டு இருக்க.. ஆனா ..", என்று விரல்களும் இதழ்களும் மேலும் முன்னேறத் தொடங்கவும்..
" நிசமாலுமே.. நான் உங்களை.. உங்களை.. தூண்டினேன்னு சொல்றீகளா..", என்று இருவரின் உறவு நிலைக்கான தேடலை கேள்வியால் , துடிக்கும் இதழ்களை அடக்கியவளாக கேட்க..
முதலில் , அதீத வருத்தத்தால் மட்டுமே , வார்த்தைகளை சிதறடித்திருந்தான் . ஆனால் , நொடிக்குள் ஆதீக்கமாக ஆர்.பீ.எஸ்ஸின் குணம் மேலோங்கி இருந்ததில்.. ஆணவமாகவே , அவனது விரல்கள் பதிய.. புத்தியில் , தாமரையின் ஏக்கம் ஏற மறுத்திருக்க..
" இல்லையா..", என்றவன்.. அவளது கன்னத்தில் கட்டை விரலால் அழுத்தமாக தடவிட.. அவன் தீண்டலில் தன்மையை உணர முடியாதவள் இல்லையே.. அவ்வளவு எளிதாக , தன்னவனால் விலகி சென்றிட முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாலும்.. காதலால் அது நடைப் பெறவில்லை என்பதையும் புரிந்தவளுக்கோ.. இதயத்தின் அடி ஆழம் வரை அவதிக்கு உள்ளாக்கியது..
மீண்டும் , நாடினான்.. சற்றுமுன் கிடைத்த மகிழ்ச்சியும் , சுகமும் தொலைந்த மாயம் புரியவில்லை . பூந்தென்றல்.. எரி தணலாய் மாறிய விந்தை இருவருக்குமே புரியவில்லை . வன்மையாக , கையாளும் சரணும் அதே நிலையில் அகப்பட்டு தவித்தவன்..
அவன் கரங்களும் பற்களுக்கும் கொடுத்த வேகம்.. அந்த நிலையிலும் சங்கமத்தில் காட்டவில்லை.. காண்பிக்க முடியவில்லை . பட்டென்று , விலகி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் .
அவளிடத்தே முழுமையான கோபத்தை காட்டவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அல்லாடும் நிலையை முழுமையாக வெறுத்தவனாய் நீருக்கு அடியில் விழிமூடி நின்று விட்டான் .
அதே நிலையில் , வெறுமையாக கிடந்தவளுக்கோ.. இரு கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தோடி காதை நனைத்துக் கொண்டிருந்தது .
சற்றுமுன் , அவன் விரல்கள் வயிற்றில் நர்த்தனமாடியதும்.. " ம் , கொஞ்சம் தொப்பை போட்டு இருக்க..", என்று வருடியவாறு திருப்தி அடைந்தது போல் பேசியதும் நினைவில் உலா வந்து.. வறண்ட புன்னகையை உதிர்க்க செய்திருந்தாலும் , ' உங்க அப்பாக்கு ... இது தொப்பை இல்லைன்னு தெரியும் போது என்ன செய்வாராம்.. ', என்று வயிற்றில் உருவாகி இருக்கும் தன் மகவிடம் முறையிட்டவளால் அவ்வளவு சுலபமாக தன்னை மீட்டு எடுக்கவே முடியவில்லை .
மான்சியின் மீதான கோபம் , தன்னையும் தவறாக நினைக்கத் தோன்றிகிறது புரிய வைத்துவிடலாம்.. என்று எத்தனை சமாதானங்களை தனக்குள்ளாக , கூறிக் கொண்டாலும்.. அவன் சிதறிய வார்த்தைகளின் தாக்கமும்.. பின் நடந்துக் கொண்ட முறையில் இருந்தும் வெளி வர முடியாதவளாய்.. மௌனமான அழுகை அதன் எல்லையை கடந்து கேவலாய் வெடித்துச் சிதறியது .
' அம்மா.. நான் எந்த தப்பும் செய்யலையே..', என்று புழுவாய் துடித்தவளுக்கோ , ' அவியளுக்கு கொஞ்சம் கூட என் பாசம் புரியவே புரியாதா.. ' என்று அதிகமாக மறுக.. எங்கே தான் தாய்மை அடைந்திருப்பதை தெரிவித்தால் , அதுவும் தவறாகிப் போகுமோ என்று எழுந்த அச்சம் அவனிடம் இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று சுயபச்சாதாபத்தினால் முடிவு எடுக்க வைத்திருந்ததில்.. தன்னை மீட்டெடுக்க முயற்சித்தவளாய் மெல்ல எழுந்தவள்.. சரண் வெளி வருவதற்கு முன்பாகவே , அவர்களின் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள் .
குளித்து வருகிறேன் என்று சென்றவளோ , பல மணி நேரங்கள் கடந்தும் கீழ் இறங்கி வரவில்லை என்றதும்.. அழகாய் புன்னகை பூத்தவராய் , காலை உணவு வேலையில் ஈடுபட்டிருந்தார் சாந்தி .
புதுமண தம்பதிகளின் அறையிலோ , மனைவியின் தூங்கும் அழகை பருகியவனாய் ரிச்சர்ட் வெகுநேரமாக விழித்திருக்க.. நினைப்புக்களோ , நேற்றைய இரவில் வந்து நின்றது .
ரிச்சர்ட் , படபடப்பை வெகுவாக சுமந்தவனாய் , அறைக்குள் காத்திருக்க.. மிகவும் இயல்பாகவே நுழைந்த தாரா.. அவனிடம் பாலை நீட்டியவள் ,
" ரிச்சா.. இன்னைக்கே எல்லாம் நடக்கணுமா..", என்று கேள்வி எழுப்ப.. மெதுவாக , தனக்குள் நிகழும் தடுமாற்றத்தை வியந்தவனாய் பருகிக் கொண்டிருந்தவன்.. அதிர்ந்து பார்க்க..
" ம்ச்சு ரொம்ப டையர்டா இருக்குப்பா.. அதான் , கேட்டேன்.. உனக்கு தேவைனா நோ ப்ராப்ளம்..", என்று அவசரமாக கூறவும்..
" இல்லை..", என்பது போல் தலையசைத்தவன்.. " இந்தா.. நீயும் குடி..", என்று அவளுக்கு கொடுக்க..
" தேங்க்ஸ்..", என்று வேகமாக சரித்தவள்.. மீண்டும் , அதே பளிச்சென்று புன்னகையை சிந்தியவளாய் .. படுக்கையில் , விழ..
" ஹேய்.. ட்ரஸ் சேஞ்ச் பண்ணலையா..",
" ம்ச்சு.. டையர்டா இருக்குப்பா.. புடவை தான.. பரவால்லை.. ரொம்ப டிஸ்டர்ப்பா இருந்தா அப்போ மாத்திக்கிறேன்..", என்றவாறே விழிகளை மூடிக் கொள்ள.. இரண்டே நிமிடத்திற்குள்.. நித்திரைக்குள்ளும் மூழ்கியிருந்தாள் .
அடிப்பாவி.. என்று ரசித்து சிரித்தவனின் மனம் வெகு நிறைவாகவே இருந்தது . காணக் கிடைக்காத பொக்கிஷம் தனக்கே சொந்தமான நிறைவில் இருந்தவனுக்கு.. அவள் அவன் மீது கொண்டிருக்கும் அளவு கடந்த நேசத்திற்கான காரணமும் தான் விளங்கவே இல்லை .
நன்கு பொழுதும் புலர்ந்து விட்டது.. ஆனால் , மனைவியின் இமைகளோ , பிரிய மனமில்லாமல்.. மூடியே கிடக்க.. மணவறையில் அமர்வதற்கு முன்பாக முத்தம் கொடுத்தால் மட்டுமே வருவேன் என்று செய்த அலுச்சாட்டியம் என்ன.. இப்பொழுது , முதல் இரவிலேயே இனிமைக்கு தடைவிதித்துடன்.. கண் திறவாமல் உறங்குவது என்ன.. என்று காதல் மனம் ஊடல் கொள்ள.. ஆடவனின் விழிகளுக்கு பசி எடுக்க துவங்கியதில்.. பிறை நெற்றி.. கூர் நாசி.. பளபளத்து கடிக்க தூண்டிடும் அதரங்கள்.. சங்கு கழுத்திற்கு கீழ் சரிந்திருந்த முந்தானையின் வழியே , தெரிந்தும் தெரியாமலும்.. விருந்தான அழகிடங்களை காணவும் , விழித்துக் கொண்ட ஆண்மையிடம் இருந்து தப்பிக்க முடியாதவனாய் , விரும்பாதவனாய்..
அதுவரை , அவளிடம் இருந்து , சிறிது இடைவெளியில் படுத்திருந்தவன்.. மெல்ல நெருங்கிப் படுக்க.. திடீரென்று , மேனியில் பரவிய இதத்துடன்.. அவளது நாசியையும் தீண்டிய , புதிய வாசனையும் இணைந்துவிட்டதில் , சிறதளவு உறக்கம் கலைந்திருக்க.. முகத்தில் , ஏற்பட்ட குறுகுறுப்பால்.. மேலும் உறக்கம் கலைந்திருக்க.. அரைகுறையாக , கண் மலர்ந்து பார்கக ,கணவனின் நெஞ்சில் இருக்கும் ரோமங்களே , அவளது முகத்தில் விளையாடி விழிக்க செய்திருந்ததை உணர்ந்தவள்.. விழித்து அவனது கண்களை சந்திக்க.. அதில் வழிந்த தாபத்தில் , தூக்கம் என்பது மொத்தமாக பறந்தோடி இருந்தது .
தன் அதிர்வை மறைத்தவளாக , "ரிச்சா..", என்று அழைக்க..
" டையர் போயிடுச்சா..", என்றான்..
" ஆங்.. ",
" இல்லை டையர்டா இருக்குன்னு சொன்னேல்ல.. இப்போ , எப்படி இருக்கு.. நல்லா தூங்கினியா.."
" ஆங்..", என்றதற்கு மேல் அவளால் பேசவும் முடியாதவாறு , அவன் விழிகளின் பயணம் இருக்க.. அது சென்ற பாதையில் அவளும் தொடர்ந்து.. அதிர்ந்துவிட்டாள் .
வேகமாக , புடவையை சரி செய்ய அவசரப்பட்ட போதும் , ரிச்சர்ட்டின் அனுமதி கிடைக்கவில்லை .
இரு கன்னங்களும் , நொடிக்குள் சிவந்து ரோஜாவை கடைப் பரப்ப..
" விடுங்க.. விடிஞ்சிருச்சா..", என்று நெளிந்தவளை , இடையில் வளைத்து இறுக்கியவன்.
" அது எப்பவோ.. ",
" என்னை எழுப்பாமல் என்ன பண்ணுனீங்க.. நகருங்க..", என்று சகஜமாக இருப்பவள் போன்று தப்பித்துக் கொள்ள பார்க்க..
" ஃப்ரஷ்ஷா ஃபீல் பண்றியான்னு கேட்டேன்..", என்றான்.. மேலும் , முகத்தை உரசியவாறே ..
" தூங்கி பெட்டை விட்டு எழலை.. பல்லு கூட துலக்கலை.. எப்படி ஃபரஷ்ஷா இருப்பேன்..", என்று நெளிந்தவளாக சொல்ல..
" அது பரவாயில்லை.. நீ ப்ரஷ் பண்ணாட்டி எனக்கு நோ.. ப்ராப்ளம்..", என்று பதில் அளிக்க..
" எனக்கும் ஓகே ஆகணும்..", என்று கேலியில் இறங்க..
" நான் ப்ரஷ் பண்ணியாச்சு.." , என்றதும் , அவள் விழி விரிக்க..
" ம்ச்சு.. விளையாடதீங்க ரிச்சர்ட்.. முதல் நாளே லேட்டா எழுந்தா எப்படி.. நகருங்க..",
" அந்த அக்கறை.. இருக்கறவ.. நான் எழுப்பறதுக்கு முந்தியே எழுந்திருச்சிருக்கனும்..",
" ம்ச்சு.. வழி விடுங்க ப்பா.. சாந்தி க்கா என்ன நினைப்பாங்க..",
" உன் மாமியார் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க.. ", என்று அவளது கழுத்தில் முகத்தை புதைத்தவனாக பதில் அளிக்க..
" தாமரை ரொம்ப கேலி பேசுவா..", என்று சொல்லவும்..
பட்டென்று , நிமிர்ந்து அவளது முகம் நோக்கியவனாக இருந்தவன் , " உன் ஃப்ரெண்டே என் தங்கச்சிய விட்டிருக்க மாட்டான்.. அதுனால , எதுவும் சொல்ல மாட்டா..",
" என்ன.. நீங்க.. எது சொன்னாலும்.. நேத்து நைட் கேட்டேனா இல்லையா.. உங்களுக்கு ஓகேன்னா.. எனக்கும் சரின்னு.. அப்போ , நல்லபிள்ளையாட்டம் இருந்துட்டு.. இப்படி வம்பு பண்றீங்களை.." என்று செக்க சிவந்தவளாக கூற..
" அப்போ , நீ டயர்டா இருக்குன்னு முதல்ல சொல்லாம இருந்திருக்கணும்.. நேத்து நீ சொன்னதை நான் கேட்டேன்ல.. ",
" அதுக்கு.. இப்போவா.. ம்ஹூம்..", என்று அவளது கழுத்திற்கு கீழ் முகம் புதைந்திருந்தவனை தடுத்தவாறே மறுப்பை வெளிப்படுத்த..
அவள் கேள்வியை கண்டுக் கொள்ளாமல் , " ஆமா.. ", என்று கூறி முன்னேற..
" ப்ளீஸ்.. இன்னைக்கு நைட்.. ஓகேயா.. " என்று தேனில் ஊறிய திராட்சை போல் பளபளத்த இதழ்களால் , அவனை இம்சித்துக் கொண்டிருக்க.. ரிச்சர்ட்டால் , அதற்கு மேல் பொறுமை காக்க இயலாதவனாய்.. முரட்டு இதழால் , பேச விடாமல் சிறை செய்து அடைத்திருந்தான் .
இந்த தாக்குதலை எதிர்ப்பார்க்காதவள் திகைத்து தடுமாறினாலும் , கண்கள் சொறுக.. அவனுள் மூழ்க.. அழுத்தமாக , சுவைக்கத் தொடங்கியவன்.. அவளது நாவில் , கத்திச் சண்டையையும் நிகழ்த்த தொடங்கி இருக்க.. தாராவின் நிலையே மோசமானதாய்.. தன் விரல்களால் , அவனது பின்னந்தலை முடிக்குள் நுழைத்து நெறித்து வரவேற்க , புது உற்சாகத்துடன்.. இனிப்பின் சுவையில் இருந்து விலகாமல்.. அவளையும் , சுவாசத்திற்கு ஏங்க வைத்தான் .
ரிச்சர்ட் , அவள் இதழ்களை விடுவித்த பின்பும்.. கண்கள்ண சொறுகி மயக்கத்திலேயே மிதந்தவளின் தோற்றம் மிக நெருக்கமாக இருக்க.. ஆடவனின் அதரங்களில் கர்வப் புன்னகை உதயமானது .
அவனிடம் , மறுப்பு தெரிவித்தவளாக இருந்தவளுக்கும் சரிந்திருந்த முந்தாணையின் நினைவு பின்னுக்கு நினைவு வராது போகவே.. அது அவனுக்கு மிகவும் வசதியாக இருக்க.. ரசிகனாய் ரகசிய தீண்டல் செய்ய.. பெண்மை விழித்து .. அதீத நாணத்தில் அதிர்வாய் கண்களால் படபடத்து , மெல்லிய எதிர்ப்பை தெரிவிக்க..
" உதயா.. ஏய்.. என்ன டீ.. என் முன்னாடி எத்தனையோ பேர் காட்டி இருந்தாலும் , நான் பார்த்ததே இல்லை.. அப்.. அ..ப்..படி தோணினது கூட இல்லை.. ஆனா , உன்கிட்ட.. உன்கிட்ட.. மட்டுந்தான் டீ.. இப்படி எல்லாம் தோணுது.. அப்படியே..", என்று அவன் அதன் பிறகு உதிர்த்தது எல்லாம் அவர்கள் இருவருக்கு மட்டும் சொந்தமான காதல் மொழிகளாக மாறி இருக்க.. கணவன் கண்களில் வழிந்த தாபத்திலும்.. கரகரப்பாய் வெளியிட்ட சொற்களையும் கேட்கவே முடியாதவளாய் அனுமதி வழங்கிவிட.. தாராவா.. இறுக்கமாக மூடிய விழிகளை திறக்கவும் தைரியம் வராதவளாய்.. அவன் கரங்களுக்குள் கரைந்து , அழைத்துச் செல்லும் உலகிற்குள் ரசித்து மூழ்கியிருந்தார்கள் .
மிக நெருக்கமாக , மாறிய தருணத்தில்.. அவளுக்காக , என்று அவன் ஆசைகளையும் மறந்தவனாய் , மென்மையாக கையாண்டு பூரிக்க செய்திருந்தான் . இரவில் அரங்கேறி இருக்க வேண்டியதை பகலில் சாதித்துக் கொண்டவனாக.. இருவரும் , சங்கமித்து நல்லறத்தில்.. முதல் படியில் மகிழ்ச்சியாக எடுத்து வைத்திருந்தார்கள் .