வா.. வா... என் அன்பே...

By kanidev86

203K 5.3K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... More

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 117
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

அன்பே - 12

1.7K 29 4
By kanidev86

பகுதி - 12

மான்சியின் கூற்றை மெயென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் ,
படுக்கையில் மாற்றம் இல்லாதவனாக.. அவள் வீடு , தேடி சென்ற நாளை நினைக்க ஆரம்பித்து விட்டான்..

இருவருக்குமான படப்பதிவு முடிந்தாகிய நிலை.. இனி , அவர்களின் படம் வெளியாகும் வரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் என்பது மிகவும் அரிதே.. ஆனால் அவனுக்கோ, மான்சியை காண வேண்டும் என்ற ஆவல்.. தன்னை விட்டு நீங்காமல் இருக்கவே , அவள் வீடு தேடி சென்றுவிட்டான் .

மான்சியின் உதவியாளி.. அவனை அங்கே.. எதிர்பார்க்கவில்லை போலும் , வெளிப்படையாகவே அதிர்ந்து.. மெல்லிய படபடப்போடு , அவனை அமர வைத்தவள்.. மான்சியை அழைக்க மாடிக்கு விரைந்தாள் . சிறிது நேரத்திலேயே , அவனிடம் வந்து.. பழச்சாறை கொடுத்து உபசரித்து.. அவள் சிறிது நேரத்தில் வந்திடுவதாக கூறவே.. விழிகளை சுழற்றியபடியே அமர்ந்திருந்தான் .

மிக நேர்த்தியாக இருந்த வரவேற்பறை , சுற்றிலும் அவளுடைய புகைப்படங்களே.. சிறுவயது முதல் தற்போது வரை இருக்கும் அவளுடைய படங்களாக இருந்தது . புதிதாய் மொட்டு மலர்ந்திருக்கும் காதலால்.. காதலியின் அழகு , குறும்பு , வெற்றி அனைத்தும் பன்மடங்காக தெரிய.. மிகுந்த இரசனையோடு வருடியது , அவன் காந்த விழிகள் . அதேநேரம்.. காற்றோடு கலந்து வந்த குரல்.. இனிமையாக செவிகளுக்கு விருந்தாக , அந்த குரலின் பாடல் ஓயும் வரை , மெய் மறந்திருந்தான் .

தன் கால்களோ.. அந்த மெல்லிய குரல் வந்த திசையை நோக்கி பயணிக்க.. மாடியில் இருக்கும் ஒரு அறையின் வாசலில் கொண்டு வந்து விட்டது . அப்படியொரு இனிமையான குரலில் பாட்டு சத்தம் கேட்க..‌ முதலில் மான்சி என்றெல்லாம் நினைக்கவில்லை .

அவன் அறியாத பாடகர்கள் அல்ல.. ஆனாலும் அந்த குரல் அவனை பெரிதும் காந்தமாய் கவர்ந்திழுத்திருந்தது . சிந்தும் வரிகளில் அவ்வளவு குழைவு.. காதல்.. சரணை ஒவ்வொரு நொடியும் சிலிர்க்கச் செய்தது .

ஆனால் , அந்த அறைக்கு அவன் வந்தவுடன் பாட்டுச் சத்தமும்..‌ நின்றுவிட.. மெதுவாக தட்டினான்.. மான்சியின் அறையாக இருக்கவே.. இரட்டிப்பு மகிழ்ச்சி..

மான்சியோ.. சரண் வந்திருப்பதாக கேட்டதிலேயே ஆச்சரியத்திற்கு உள்ளானாள் என்றால் , அவள் அறைக்கே அவன் வந்து நின்றது பேரதிர்ச்சியாக இருக்கவே.. தன் பெரிய மை விழிகளை முழுவதும் திறந்தவளாய் நின்றுவிட்டாள் ‌.

விழிகளால் அவள் அறையை துலாவ.. மீயூஸிக் ஸிஸ்டமும் இயக்கப்படாமல் இருக்கவே... அவள் பாடினதாக நினைத்தவன் கேட்டபோது , அவளும் மறுத்திருக்கவில்லை . அன்று சிறிது நேரம் இனிமையாக அவளோடு நேரத்தை செலவிட்டு வந்தவன் , தன் நண்பர்களிடம் தன் காதலை பகிர்ந்தவனாய் .

" டேய் சரண் என்ன சொல்ற ! " என்று ஒருபுறம் உதயதாராவும் , மறுபுறம் விக்கியும் அவன் அறையில் இருந்து அதிர்ச்சி தாளாமல் அலறினார்கள். அவன் அவளை விரும்புவதாக சொல்லியபோது... அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவனாய்... விழித்திருக்கும் போதே மான்சியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தான் . அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து..

அவர்கள் துழைக்கும் பார்வைக்கும் பதில் அளிக்காதவனாய்... மான்சிக்கு அழைக்க... " மான்.." என்ற அழைப்பிலேயே அத்தனை உருக்கம் ,

" ம்.. சொல்லுடா.. என்ன இந்த டைம்ல கால் செஞ்சுயிருக்க.." என்று தேனாய் பாயும் அவள் குரலுக்கு மயங்கியவன்.. " வீடியோ கால் வா.." என்றான் .

" வாட்.. வொய்..?", என்றவளின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி அலைபேசி வாயிலாக தெரிய , நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள் என்றால் , அவனோ வாய்விட்டு நகைத்து ,

"வேஷம் போட்டு இருக்கியா..‌? " என்று மிக இயல்பாக கேட்கவே.. அந்த காட்டிலும் , முகத்தில் எதையாவது அப்பிக் கொண்டு அலைபவள். வீட்டில் இருக்கும் பொழுது அமைதியாகவா இருந்திருப்பாள் என்று மிகச் சரியா ஊகித்து கேட்டதில் , அசடு வழிய ஒரு சிரிப்பை உதிர்த்து.. அதை ஏற்றுக்கொள்ள முடியாதவளாய் , "இதுக்காகவா கால் பண்ணின ? " , என்று சிணுங்களில் முழுதாய் தொலைந்தவன் , " உன் பாட்டு கேட்க.." என்றான்...

உதயாவோ , " பாட்டா.. அவளா ! " என்று அதிர்ந்திருந்த வேளையில் ,

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட..

என்று முழுவதுமாக அந்த பாடலை பாடி.. அவள் குரலால் , அந்த அறையையே தன் வசப்படுத்த.. அங்கிருந்த மூவரும் மெய் மறந்து போயிருந்தனர் என்றே கூற வேண்டும் .

பாடல் முடிந்ததும்.." ஓகே... " என்று மான்சியின் குரல் இடறவே , இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப , உதயதாராவால் நம்பவே முடியவில்லை . அந்த பாடல் வெறும் பாட்டாக மட்டும் கேட்கவில்லை , அந்த கண்ணினின் மீதிருக்கும் அத்தனை காதலும் ஏக்கமும் போட்டி போட்டு வெளி வந்தது .

சரண் எவ்வளவு கெஞ்சினாலும் நேரில் பாட மறுப்பவள் , அலைபேசியிலோ.. அவள் வீட்டிலோ பாடாமல் இருந்ததில்லை . ஒவ்வொரு முறையும் , அவள் குரலில் நிரம்பி வழியும் காதலுக்காகவே‌.. தன்னை நினைத்தே உருகுகிறாள்.. என்று எண்ணினான் .‌ அவள் தன் மீது இருக்கும் நேசத்தை , முழுவதுமாக பாடல்களில் வடிக்கிறாள் என்றெண்ணியே , தினம்தினம் அவள் மீது உயிரையே வைக்கத் தொடங்கினான் .

ஆனால் , மான்சியோ தன்னை முட்டாளாக நினைத்து கிண்டல் செய்ய... அவளால் தான் முட்டாளாகப்பட்ட செயல் என்பதை மறக்க முடியாமல் பெரிதும் தடுமாறி போனான் . மீண்டும் அதைப் பற்றி பேசினால்.. ' நானா எப்போ உன்கிட்ட பாடத் தெரியும்ன்னு சொன்னேன்.. நீ கேட்டு இந்த மான்சி இல்லைன்னு எப்படி சொல்லுவாள் .' என்று அவளை மட்டுமே நியப்படுத்த.. முதல் முதலாக தன் அவசரத்தை எண்ணி வருந்தியவனாக.. கிடந்தான் .

அவ்வளவு பெரிய கேட்டிற்குள் நுழைந்த தாமரையின் சிந்தனைகளோ.. மான்சியை பார்ப்பதற்குள்ளாகவே , உள்ளுக்குள்ளே வசைப்பாடியவளாய் .

' பணம் தர வேண்டாம் . ஆனால் ஒரு கையெழுத்து... தனக்காக ஒரு கையெழுத்து கூடவா போடக்கூடாது... இருக்கும் வீட்டை விற்றாலும் , சேமிப்பை முழுதாய் சுரண்டினாலும் அதிகபட்சமாக ஐந்தை தாண்டாது , அதற்கு எதற்காக இருப்பதை விற்க வேண்டும் ? என்ற எண்ணம் . எதை எதையோ நினைத்தவளாக.. மான்சியின் அறைக்குள் நுழைய , வரவேற்றது என்னவோ... அலறிய பேட்டை ராப் பாடல் தான் .

இங்கேயுமா ? என்ற சலிப்பு.. பாடலின் வரிகளால் தாமரை மனதில் தோன்றவே செய்தது . அவளுக்கான உடை மற்றும் மேகப் செய்வதற்கு உண்டான அழகுசாதனப் பொருட்களை எடுத்து தயராக வைத்த பின்னும் வெளி வந்திருக்கவில்லை . எப்பொழுதும் போல் பார்வையை அந்த படத்திற்கு திருப்ப.. என்றும் போல் இன்றும் அந்த புன்னகையில் அவள் சோர்வு கவலை அனைத்தையும் மறக்கடிக்க..‌ செய்திருந்தது .

உதட்டில் இருக்கும் சிரிப்பு அவன் கண்களோடு போட்டி போடுவது போல்..‌ மின்னல்கள் விழிகளில் தெறிக்க... முகம் கொள்ளா பூரிப்போடு மான்சியின் தோளில் கரம்பதித்து... அணைத்தவனாய் இருவரையும் புகைப்படக்கருவி... பிடித்திருக்க... இந்த ஒற்றை படம் மட்டும் அவளுடைய சுவற்றில் இருந்து நீக்கப்படாமல் இருந்தது , இருவருக்கும் விவாகரத்து ஆன பிறகும் .

எவ்வளவு நல்ல மனுஷன் என்று எண்ணியவளால் தூரத்தில் மட்டுமே பார்வையிடாமல் போகவும் , நெருங்கி இருவரை மட்டுமே பார்த்திருக்க... மான்சியின் கண்களிலும் காதல் பொங்கி வழிந்தது . கர்வமாய் உதட்டில் இருக்கும் சிரிப்பு , என்னவன் என்ற உரிமையை.. அவன் இடையை அடைந்திருக்கும் கரங்கள் வெகுவாக காண்பவர்களுக்கு உணர்த்தும் படி அவளும் அணைத்திருக்க... இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாய்...

" நீ இப்படி இங்க வந்த... யாரு உன்னை உள்ள விட்டது." என்று அகங்காரமாய் மான்சியின குரல் ஓங்கி ஒலிக்க..

" என்னக்கா சொல்லறீங்க ? " என்று தாமரை தடுமாற்றமாக கேட்டவளாய் திரும்பினாள் ..

" உன்னை எப்பவோ வேலைய விட்டு தூக்கியாச்சு‌...‌ உனக்கு இங்க என் வேலைன்னு கேக்குறேன் " என்று நிதானமாக , குளித்து வந்திருப்பாள் போலும்.. உடலை சுற்றிய டவலோடு , வெளி வந்தவளாய் கேட்டிட.. ஒரிரு நிமிடங்கள் , தாமரைக்கு .. அவள் கூற வருவதை ஏற்றுக கொள்ள முடியாதவளாகவே திகைத்திருந்தாள் .

ஒருவழியாக திக்கித் திணறி ,"ஏ...ஏ..ன்...க்..கா.... நா.. நா... என்ன செ.‌ஞ்சேன்.." .. என்று கெஞ்சிக் கொண்டிருப்பவளை அலட்சியமாக பார்த்தவாறே...

" என்ன செஞ்சியா.. உன் தராதரத்துக்கு மீறி பணம் கேட்டேயே... இங்க பாரு.. நீ பணம் கேட்டு நான் இல்லேன்னு சொல்லியாச்சு... இனிமேல் நீ இங்க இருந்தா... அந்த பணத்துக்காக... என்னென்ன எடிப்பியோன்னு உன்னை வாச்சு பண்றதுக்கு ஒரு ஆள் போட முடியாது பாரு.. இல்ல.. வெளில என் பேர சொல்லி எத்தனை லட்சத்தை சுருட்டுவேன்னு தெரியாது பாரு.. அதுக்காக தான்.." , என்றாள் துளியும் இரக்கம் அற்றவளாய் .

அவள் பேச பேச... தாமரைக்கு அழுகை போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது . இத்தனை ஆண்டுகளாக இருந்த பழக்கத்திற்கு அர்த்தமற்றது போலவே இருந்தது . ஆனாலும் , ரோஷம் பார்த்து வெளியே செல்லும் நிலையில் அவள் இல்லையே !

" நான் அப்படிபட்யவ இல்லைன்னு உங்களுக்கு தெரியாதாக்கா..." என்ற போதும்.‌

" இதுவரை நீ அப்படி இல்ல.. ஆனா இனிமேல் சரியா இருப்பேன்னு என்ன நிச்சயம்... உன் தேவை.. உன் தகுதிக்கு மீறி நூறு மடங்கு அதிகமாக இருக்கே தாமரை.." என்று நிதானம் தவறாமல் சொல்லிட.‌..

இவளுக்கு கொடுக்கும் சம்பளப் பணம் மிகவும் தேவையானதாக இருக்கவே... மான்சியின் கால்களில் விழுந்து கதறத் தொடங்கிவிட்டாள்.

ஆனால் இதயம் இருக்க வேண்டிய இடத்தில் கருங்கல்லை வைத்து படைத்துவிட்டான் போலும் அந்த பிரம்மன்... கருநாகம் சீற்றம் தோற்பது போல் தன் நாவால் சுழற்றி சுழற்றி சீற... பாவம் அந்த சிறுபெண் துவண்டு போனாள் .

எத்தனை கெஞ்சியும் கதறியும் மனமிறங்காதவளாக நடந்துக் கொள்ள... வேர் அறுந்த நிலையில் வெளியேறினாள் . கால்போனப் போக்கில் , அடுத்து என்ன.. என்கிற பயம் முழுதாய் ஆட்டிப்படைக்க.. பித்துப் பிடித்தவளாய்... எங்கு செல்கிறாள் என்பது தெரியாமல்.. சுற்றமும் மறந்து.. நடுரோட்டில் வாகனங்களுக்கு மத்தியில்.. சிந்திக்கும் சிந்தனைகளை இழந்தவளாய நடந்து சென்று கொண்டிருந்தாள்..

எதிரில் வரும் வாகனத்தையும் கவனிக்காமல்... இமைக்கும் நேரத்திற்குள் , ஒரு வலிய கரம் சாலையோரமாக பிடித்திழுத்திருந்தது‌.

Continue Reading

You'll Also Like

7K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
12.9K 920 16
Vikram...namma kadhaioda hero...elaroda love uh success la mudiyaathu...apdi success agatha love dha namma vikram odathu...romba painful breakup ku a...
149K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
2.2K 176 20
Here is my second story Oru Kutty love story Love...... Love na Ypavume sweet ah pesitu Ypo paru love dialogue ah pesitu irukukavangaluku than v...