நிலா வீடு
நிர்மலா நிலாவிடம் ஒரு உண்மையைக் கூறுகிறார்...
நிலா நிர்மலாவிடம் அம்மா கூறுங்கள் என்ன உண்மை அது?? என்று கேட்க.. அவர் "இந்த புகைப்படத்தில் இருக்கும் சுரேஷ் வேறு யாருமில்லை".. இவர் தான் உனது தாய் மாமன்.. என்னுடைய அண்ணன்.. நான் உன்னுடைய தந்தையை திருமணம் செய்தது என் குடும்பத்திற்கு பிடிக்கவே இல்லை..
அதற்காகத்தான் எங்கள் இருவரையும் பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தான்.. உன் தந்தை மரணத்திற்கும் இவன்தான் காரணமாகிவிட்டான்.. எனவேதான் நான் இவனுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. என்ன தான் என்னுடைய அண்ணனாக இருந்தாலும் ஒரு நல்ல அண்ணன் என்பவன் தன் தங்கை நன்றாக வாழவேண்டும் என்றுதான் நினைப்பான்..
ஆனால் என் குடும்பத்தை சுக்குநூறாக நொறுக்கிய இவன் என்றுமே என் எதிரி தான் என்று கூறினாள்.. உடனே நிலா இவ்வாறெல்லாம் நடந்திருக்கிறதா?? எனக்கு தெரியவே தெரியாது.. அப்பா இதைப் பற்றி என்னிடம் எதுவும் கூறியதே கிடையாது.. உங்களுடைய திருமணம் காதல் திருமணமா?? என்று கேட்டாள்..
உடனே நிர்மலா ஆம் நிலா, நானும் உனது தந்தையும் காதல் திருமணம்தான் செய்து கொண்டோம்.நாம் இதைப் பற்றி பிறகு பேசுவோம்.. எனக்கு நேரமாகிறது.. நான் இப்பொழுது கோர்ட் செல்ல வேண்டும் என்று நிலாவிடம் இருந்த அந்த ஃபைலை வாங்கிக் கொண்டு விரைவாகச் சென்றார்..
உடனே நிலா மனதில் இவர்களுடைய உண்மையை நான் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் ..நாம் ஏதோ தவறாக நினைத்து விட்டோம் போன்று தோன்றுகிறது என்று நிர்மலாவின் மீது நிலாவுக்கு நல்ல அபிப்ராயம் வரத்தொடங்கியது..
நிலாவிற்கு இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது.. எனவே அவள் கதிர் மட்டும் ஹேமாவிற்கு கால் செய்து வீட்டிற்கு அழைத்தாள்.
கதிர் மற்றும் ஹேமா வீட்டில் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு நிலா வீட்டிற்கு வந்தனர்.. வந்த கதிரிடம் நிலா அனைத்து விஷயங்களையும் கூறினாள்.உடனே ஹேமா மனதிற்குள் "நல்லவேளை அண்ணன் தப்பித்தான்.. அந்த ரவுடியின் மகளைத் திருமணம் செய்துக் கொள்ளவில்லை" என்று நினைத்தாள்..
BINABASA MO ANG
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...