ஹேமாவின் பொய் கதை

1.3K 68 39
                                    

ஹேமா நிலாவை விடுவதாக இல்லை.அவளை எப்படியும் கதிருடன் இணைக்க வேண்டும் என்று நினைத்தாள்.நிலாவைத் தொடர்ந்து ஹேமா கதிரை சந்திக்கச் சென்றாள்.

கதிரிடம் ஹேமா மெதுவாக
அண்ணா, உன்னுடைய கல்லூரி நாட்கள் நினைவிருக்கிறதா ?? நீ ஒரு ரோமியோ தெரியுமா?? உன்னோட ஜுலியட் யாருன்னு தெரியுமா??என்று கேட்டாள்.

கதிர் சிறிது நேரம் யோசித்துப் பார்த்தான். அவனுக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை .
உடனே அவன் ஹேமாவிடம்
இல்லை !!எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. உனக்கு தான் என்னுடைய கல்லூரி நாட்கள் தெரியுமே,யார் அந்த பொண்ணு?? ஏதாவது சுவாரஸ்யமாக இருந்தால் கூறு என்று அவன் கேட்டான்..

கதிரும் ஹேமாவும் மொட்டைமாடியில் இருந்து பேசத்தொடங்கினர்.. ஹேமா அவனுடைய கல்லூரி நாட்களைப் பற்றி அவனுக்குக் கூறத் தொடங்கினாள்.

ஹேமா "நிலா மற்றும் கதிரின்" உறவைப் பற்றி மட்டுமே கூறினாள்.சுவாதி என்ற ஒருவள் அவனுடன் படித்தது பற்றி எதுவும் கூறவில்லை.. கதிர் சுவாதியை காதலித்தது பற்றியும் எதுவும் கூறவில்லை..

சுவாதியின் இடத்திலும் நிலாவையே வைத்து ஹேமா அனைத்தையும் அவனிடம் மாற்றிக் கூறினாள் ..

உடனே கதிர் ஹேமாவிடம் " நிலா என்   காதலியா?? நான் அவளை விரும்பினேனா? அதானே பார்த்தேன்..அந்த பொண்ணு என் மேல ரொம்ப பாசமாவும், அக்கறையாவும் இருக்கிறாள்" என்றான்..

உடனே ஹேமா "ஆம் அண்ணா!! நீ நிலாவை தான் விரும்பினாய். உனக்கு இப்பொழுது எதுவும் நியாபகம் இல்லை என்பதனால் நிலா உன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள்"..

அவளுக்கு அவளுடைய பழைய கதிர் வேண்டுமாம்..உனக்கு ஞாபகம் வந்ததும்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று காத்துக் கொண்டிருக்கிறாள் என்று பொய் கதையைக்  கூறினாள்.

ஹேமா கதிரின் மனதை நிலாவை நோக்கி வெகுவாக நகர்த்தினாள்.கதிர் சம்மதித்தால், நிலா திருமணத்தை மறுக்க மாட்டாள்.. அவளால் மறுக்க முடியாது.. ஏனென்றால் நிலா இன்றும் கதிரை விரும்புகிறாள் என்று ஹேமா நம்பினாள்.

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now