சுவாதி மறுநாள் வகுப்பிற்கு வழக்கம்போல வந்தாள்..அவள் வந்ததும் வகுப்பிற்கே ஒரு பொழிவு வந்தது..அவள் கன்னங்குழி சிரிப்புடன் நிலாவுக்கு ஹாய்!! சொன்னாள்... அன்று கதிர் வகுப்பிற்கு வரவில்லை..
உடனே சுவாதி நிலாவிடம் "நிலா, கதிர் எங்க?? வரலையா??" என்று கேட்டாள்.. உடனே நிலா "அவன் இப்போதெல்லாம் ஒழுங்காக கிளாஸ்க்கு வருவதே கிடையாது.. அடிக்கடி கிளாஸ் பங்க் பண்ணிட்டு எங்கேயாவது போயிடுறான்" என்று கூறினாள்..
உடனே சுவாதி "அப்படியா?? என்றாள்.. அவன அப்படி எல்லாம் விடக்கூடாது.. நாம ரெண்டு பேரும் ஏதாவது அவன் கிட்ட பேசணும்" என்று சுவாதி சொன்னாள்.. "நானும் அதைதான் நினைச்சுட்டு இருக்கேன்.. ஆனா அவன பாக்கவே முடியல..வகுப்புக்கு வந்தால்தானே ஏதாவது பேச முடியும்.. நான் பேசாம அவன் வீட்டுக்கு போயி பேசலாம்னு இருக்கேன்" என்று நிலா கூறினாள்..
சுவாதி நிலாவிடம்" இந்த மாதிரி படிக்கிற டைம்ல படம் அது இது என்று போனா அப்புறம் எப்படி படிப்புல கான்ஸன்டிரேட் பண்ண முடியும்?? அவன் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்.. அரியர்ஸ் போட்டா மொத்தமா எப்படி கிளியர் பண்ணுவான்?? என்று இருவரும் கதிரைப் பற்றி இணைந்து பேசினார்கள்..
அதெல்லாம் விடு!! சுவாதி.. நீ எங்க போயிட்ட?? கொஞ்ச நாளா ஆள காணோம்.. அப்புறம் ஹாலிடேஸ்ல உன்ன பிடிக்கவே முடியல..உங்க வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்தது என்று நிலா கேட்க..
உடனே சுவாதி "அதை ஏன் கேட்கிறே?? அது ஒரு பெரிய கதை...நாங்க குடும்பமா வெளியூர் போய் இருந்தோம்.. அப்பாக்கு ஒரு சின்ன பிரச்சனை இந்த ஊர்ல.. அதனால இங்க இருக்க வேண்டாம்னு சொல்லி எல்லாரும் சேர்ந்து வெளியூர் போயிட்டோம்.. எல்லா இணைப்பையும் துண்டித்துவிட்டு எல்லாரும் வெளியூர் போய் இருந்தோம்"..என்று கூறினாள்...
உடனே நிலா சுவாதியிடம் "ஓ சாரி, உன்னோட சிட்டியேஷன் தெரியாம நான் கேட்டுட்டேன்" என்று கூறினாள்.. "ஒன்னும் இல்லடா நான் வரலன்னு அட்லீஸ்ட் நீயாவது கேக்குறியே.. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று சொன்னாள்.
YOU ARE READING
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...