நிலா லவ் பிரோபோஸ்

1.4K 70 19
                                    

உடனே நிலா கதிரிடம் "உன் கூட நெருங்கி பழக பயமா இருக்குடா.உன் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா என்னையே நான் தொலைச்சுட்டு இருக்கேன்.உன்னை விட்டு தூரமாக இருக்கிறது தான் எல்லோருக்கும் நல்லது..ப்ளீஸ் என்னால முடியலடா, என்னை விட்டுவிடு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. டெயிலி உன்னை ஃபேஸ் பண்ணவே கஷ்டமா இருக்கு..உன்னை விட்டு தள்ளி போறது தான் எனக்கும் நல்லது உனக்கும் நல்லது.. உன்னோட கண்ணைப் பார்த்து பேசுற தைரியம் கூட எனக்கு இல்ல.. எப்படி என்னால இந்த வீட்டுல இருக்க முடியும் சொல்லு..இது எனக்கு தண்டனை மாதிரி இருக்கு"..என்று தலை குனிந்தவாறு பேசிக் கொண்டிருந்தாள்...

உடனே கதிர் "நிலா,ஏன்?? என்ன பாரு..என் கண்ணை பாத்து பேசுறதுல உனக்கு என்ன பிராப்ளம்.. என்கிட்ட எதுவும் மறைக்காத..ஏன் என்னை ஃபேஸ் பண்ண முடியல?? நான் உன்கிட்ட சுவாதிக்காக பேசாம இருந்தேன்னு கோபமா?? ப்ளீஸ் நிலா புரியுற மாதிரி சொல்லு.." என்று கேட்டான்..

உடனே நிலா "என்கிட்ட எதுவும் கேக்காதடா. நான் பேசாம அப்படியே போயிடுறேன்.உன்னை ஹர்ட் பண்ண என்னால் முடியாது என்றாள்.நானும் ஒரு சாதாரண மனுஷி தான்..இதுக்கு மேல் முடியாதுடா.. ப்ளீஸ் என்ன விட்டுவிடு.. நான் வீட்டுக்கு போறேன்" என்று தேம்பி அழுதாள்..

உடனே கதிர் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளுடைய முக நாடியை உயர்த்தி தன்னுடைய கண்களைப் பார்க்குமாறு கூறினான்..."இப்போ சொல்.. என்ன பிரச்சனை?? நான் உன்கூட எப்பவுமே துணையாக இருப்பேன்..நீ என்ன சொன்னாலும் நான் ஹர்ட் ஆக மாட்டேன்..சுவாதிய எவ்ளோ பிடிக்குமோ அதே அளவு உன்னையும் எனக்கு பிடிக்கும்..உன் கூட பேசாம நான் மட்டும் சந்தோஷமா இருந்தேன்னு நினைச்சியா?? இல்லவே இல்லை..யூ ஆர் மை லவ்வபில் ஃபிரண்ட்..ஐ டோன்ட் வான்ட் டூ மிஸ் யூ எனிமோர்" என்று கதிர் தன் மனதில் உள்ளதைக் கூறினான்..

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். கதிரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உடனே நிலா கதிரை சட்டென்று அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ கதிர், ஐ லவ் யூ சோ மச் டா" என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினாள்..

வானாகி நின்றாய்(Completed)Där berättelser lever. Upptäck nu