அவர்களை அழைத்தது வேறு யாருமில்லை.. தீபக் மற்றும் ராம் தான்.. ஹலோ ஃபிரண்ட்ஸ்!! ஹலோ சுவாதி!! நீ இங்கதான் இருக்கியா?? எப்படி இருக்க?? அப்புறம் கதிருக்கும் உனக்கும் மேரேஜ்னு கேள்விப்பட்டோம் .. சூப்பர் கைஸ் என்று கேட்டனர்..
ஆனாலும் எங்களுக்கு இன்விடேஷன் கார்ட் கொடுக்க மறந்துட்ட பாத்தியா??
டேய் கதிர்!! நீயுமா மறந்துட்டே எங்களை..என்றனர்..கதிர் மற்றும் நிலா குழப்பத்தில் நின்றனர்..
உடனே சுவாதி ஆச்சரியத்தில் "என்ன எனக்கு கல்யாணமா?? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்று கூறினாள்..
உடனே தீபக் என்ன உனக்கு கல்யாணம் இல்லையா?? நாங்க ஊர்ல இருந்து தான் வர்றோம்.. ஊர்ல உன்னோட வீட்ல கல்யாணத்துக்கு வேண்டிய வேலை எல்லாம் நடந்துட்டு இருக்கு .. நீ என்னன்னா எதுவும் தெரியாதுன்னு சொல்ற..
உங்க வீடே கல்யாண கலை கட்டியிருக்குது.. நீ என்னன்னா இங்க எதுவும் தெரியாம நிக்கிறே என்று கேட்டனர்..
உடனே சுவாதி இருடா!! நானே இவ்ளோ வருஷம் கழிச்சு இப்பதான் கதிரை பார்க்க வந்துருக்கேன்.. அப்புறம் எனக்கு எப்படி திருமணம் நடக்கும்..அதுவும் அப்பா என்னோட திருமணத்துக்கு எப்படி சம்மதிப்பார்..
கதிர் மட்டும் என்னோட லவ் தெரிஞ்சு என்னோட அப்பா பெரிய பஞ்சாயத்தே பண்ணிட்டாங்க.. அதுல இருந்து வெளியே வருவதற்கு இவ்வளவு வருஷம் ஆயிருக்கு அதுக்கு முன்னாடி அடுத்த வெடிகுண்டா?? என்ன நடக்கப் போகுதோ??
உடனே தீபக் மற்றும் ராம் சுவாதியிடம் "சாரி ஸ்வாதி!! இதெல்லாம் எங்களுக்கு தெரியாது ..நாங்க ஒரு பெரிய தப்பு பண்ணிட்டோம் ..கொஞ்சம் அங்க பாரு" என்று கூறினர்...
தூரத்தில் சுவாதியின் தந்தை மற்றும் தாய் சிரித்தபடி நின்று கொண்டிருந்தனர்..
அவர்களை கண்டதும் மூவரும் பேயறைந்த மாதிரி நின்றனர்..சுவாதியின் தந்தை சுவாதியிடம் சிரித்துக்கொண்டே வெளிநாட்டில் இருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு வராமல் இருந்த போதே நினைத்தேன்..இவனை தேடி நீ இங்க தான் வந்துருப்பன்னு..
YOU ARE READING
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...