சுவாதி வருகை
அதே சமயத்தில் சுவாதி கோவிலுக்குள் நுழைய..உடனே நவீன் "ஹாய் ராகா!! எப்படி இருக்க??" என்று அவளை நோக்கி ஓடினான் ..உடனே ஹேமா "என்ன ராகாவா??சுனாமி வந்துருச்சே...
சுவாதியைப் பார்த்து இவன் ஏன் ராகா என்று அழைக்கிறான்" என்று குழப்பத்தில் நின்றாள்...
சுவாதியைப் பார்த்ததும் ஹேமா நவீனின் பின்னால் ஓடினாள்.. அவள் நவீனை நிறுத்தி "நீ சொன்ன ராகா யாரு??" என்று கேட்க.. உடனே அவன் சுவாதியைக் கைகாட்டினான்.. உடனே ஹேமா நவீனிடம் "அவ பெயர் ராகா இல்லடா.. சுவாதி" என்றாள்..
உடனே நவீன் "ஓ! எனக்கு அது நல்லாவே தெரியுமே.. அவளோடு பெயர் சுவாதி ..உனக்கு நான் பெப்பர் என்று பெயர் வைத்த மாதிரி அவளுக்கு "ராகா" என்று செல்ல பெயர் வைத்து கூப்பிடுவேன்" என்றான்..
உடனே ஹேமா "ஆமாண்டா, இப்போ ரொம்ப முக்கியம்.. சுனாமியை இங்க கூப்பிட்டுட்டு அவளுக்கு நீ செல்லமா ராகான்னு பெயர் வைத்து கூப்பிட்டேன்னு என்கிட்டேயே சொல்றியா?? என்றாள் கோபமாக.. அன்னைக்கு உன்கிட்ட சொன்னேனே நிலாவுக்கும் கதிருக்கும் திருமணத்திற்கு எதிரியா ஒருத்தி இருக்கான்னு.. இவதான் அவள்..
நீ கரெக்டா அவளையே கூட்டிட்டு வந்திருக்கே..முட்டாளாடா நீ ?? என்று கூறினாள்.. உடனே நவீன் ஐயோ!! அந்த பொண்ணு சுவாதின்னு எனக்கு தெரியாது.. இவ என் கூட தான் வெளிநாட்டுல படிச்சா..அவ என்னோட பிரண்டு.. அதனால்தான் அவ கூட நேத்து பேசினேன்.. பேசும்போது இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொல்லிட்டு இருந்தா..
நானும் அவகிட்ட கோயிலுக்கு நாளைக்கு போறேன்.. அங்க வந்து மீட் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.. மத்தபடி எனக்கு இங்க நடக்குற விஷயத்துக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு தெரியாது பெப்பர்... என்ன பண்றது?? எப்படி சுவாதிகிட்ட இருந்து கதிர் நிலாவ மறைக்கிறது?? என்று இருவரும் குழம்பினார்கள்...
உடனே சுவாதி அவர்கள் அருகில் வந்து ஹாய் நவீன் ஹவ் ஆர் யூ?? ஏய்!! நீ கதிர் சிஸ்டர் ஹேமா தானே??ஹேமா “ஆம்” என்றாள்..
YOU ARE READING
வானாகி நின்றாய்(Completed)
Romanceநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...