சரண் தன் அறையின் கதவில் , அத்தனை ஆத்திரத்தையும் காண்பித்தவனாக , தன் வேக நடையால் கீழ் இறங்கி இருந்தான் . அந்த இடத்தையே நிறைத்த அவளது அலைபேசியின் சத்தம் மிக அருகே அவளுக்கும் கேட்க , தாமரையும் வேகமாக திரும்பிய போது , சமையல் அறையின் வாயிலில் நின்று இருந்தவனின் முகம் பெரும் இறுக்கத்தில் இருந்தாலும்.. மனைவியின் கரத்தை பிடித்து , அழைப்பை ஏற்காத நிலையிலேயே கொடுக்க , அழைப்பிற்கு சொந்தகாரர் யார் என்று திரையை கண்டவளுக்கோ , விழிகள் இரண்டும் தெறித்து விழும் அளவிற்கு விரிந்து , மிக அவசரமாய் , நன்கு உற்று நோக்கியவளாக அவன் முகம் காண , பற்களின் இறுக்கம் தாடையில் காண்பித்து , துடைத்த முகத்துடன் , "ம்..", என்ற உறுமலையும் மறக்காமல் வெளியிட்டவனாக வேகமாக அங்கு இருந்து நகர்ந்துவிட்டான் . ' இந்தா பிடி..', என்ற உறுமலா அல்ல ' பேசு..', என்ற தோரணையா என்று குழம்பு அளவிற்கே , அவன் உடல்மொழி இருந்ததாய் .
ஒருமுறை இசைத்து ஓய்ந்தது மீண்டும் தொடங்கவே , " தாமரை யாரு விடாம கால் பண்றது.. அடென் பண்ணி பேசு..", என்று சாவித்திரி ஓங்கி குரல் கொடுத்தவராய் அவள் கரத்தில் மின்னிய பெயரில் திகைத்துவிட்டார் .
மான்சியின் பெயர் மிளிர்ந்து இனி நான் ஓய்ந்துவிடுவேன் என்ற கடைசி நொடியில் , அழைப்பை ஏற்றவுடனே , " உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்க . என் ஷான் வாரிசுக்கு மட்டும் எதாவது ஆச்சு . நான் மனிஷியா இருக்க மாட்டேன் ..", என்று எரிதணலாய் முகம் சிவக்க கத்தியவளிடம் ,
வெகு நிதானமாகவே , " ஏன் இதுக்கு முன்னாடியும் நீங்க மனுஷியா இருந்ததா நினைப்பா . நான் இப்போதேன் க்கா எழுந்திருச்சேன் . அப்புறமா பேசுறேன் . நல்லா சில்லுன்னு எதையாவது குடிச்சிட்டு போய் வேலைய பாருங்க..", என்று படு நக்கலாகவே பதில் கூறியவளாய் அழைப்பை துண்டித்துவிட்டாள் .
கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய ஆரா , நேராக தன் வகுப்பு அறைக்கு செல்லும் பாதையில் குனிந்த தலை நிமிராதவளாய் ,. என்றும் போல் தோழிகளற்றவளாய்.. இன்றும் தனித்தே நடக்கத் துவங்கி இருந்தாள் ஆராதனா .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 117
Start from the beginning