" ஷ்.. ஷ்..", என்று இதழ்களின் மீது விரல் வைத்து பேசாதே என்ற ஓசையுடன் அடக்கியதோடு , கால்கள் தள்ளாட மாடி ஏறியவன்.. சிறிது நேரத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவளை கரத்தில் ஏந்தியவாறே வீட்டை விட்டே கிளம்ப முயற்சிக்க.. தாமரையோ , உறக்கம் கலைந்தவள் கணவனின் பிடியில் இருந்து விடுப்படுவதற்காக திமிறிக் கொண்டு இருந்தாள் .
அதை பார்த்ததில் முற்றிலும் உறக்கத்தில் இருந்து தெளிந்தவனாக , " சரண் என்னது இது . அவளை எங்க தூக்கீட்டு போறீங்க . ம்ச்சு , மறுபடியும் முடியாம வந்திடப் போகுது..", என்று மற்றவர்களின் உறக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக பற்களைக் கடித்துக் கொண்டே அடிக்குரலில் சீறியவனை , கண்டுக் கொள்ளாதவனாய் அழுத்தமாக ஏற்றிட்டாலும் , அவனுக்கு பதில் கூறாமல் , மெதுவாக கீழே விட்டவன்.. பார்வையை அவள் மீது பதித்தவனாக , " வா போலாம்..", என்று கட்டளையாக கூறவே ,
அண்ணன் தங்கை இருவருக்குமே ஆத்திரம் பொங்க , முறைப்புடன் அமைதியாக அவள் அறைக்கு திரும்பியவளுக்கு சரணின் சொற்களால் மறு அடியும் எடுத்து வைக்க விடாமல் செய்து இருந்தது .
" ஒரு அடி நீ எடுத்து வச்சாலும்.. உன் மித்ரனை நீ பார்க்கிற கடைசி நிமிஷம் இதுதான் தாமரை..", என்று அழுத்தம் திருத்தமாக ஆளுமையுடன் அதேநேரம் சொன்னதை செய்தே தீருவேன் என்பது போல் அவன் குரல் உறுதியாய் ஒலித்து திகைக்கச் செய்து இருந்தது .
சரண் அவ்வாறு கூறியதும் நொடிக்குள் பதறியவர்கள் , வேகமாக அவன் முகம் காண.. அதில் தெரிந்த உறுதியைக் கண்டு வாய் அடைக்க செய்ததாய் . இருவருக்குமே , எவ்வளவு பெரிய வார்த்தையை சுலபமாக கூறிவிட்டான் என்று துடித்து போய் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் தங்களது பலவீனம் பார்த்து தாக்குபவனின் மீது ரிச்சர்ட்டிற்கு கொலைவெறியே உண்டாக , தாமரைக்கோ.. அவன் கண்களில் விரவி இருந்த பிடிவாதத்தில் மிரண்டவளாய் நடுங் நடுங்கி போய் இருந்தாள் . சரணின் மீது இருப்பது ஆதங்கம் நிறைந்த கோபம்.. ' என்னை பற்றி உனக்கு தெரியாதா..', என்னும் பரிதவிப்பில் கிளர்ந்து எழுந்து இருக்கும் ஆத்திரம் . அதற்காக , இவன் இல்லாமல் அவளால் இருக்க முடியுமா.. அவனை காணாத இந்த இரு நாட்களே அவளுக்கு நகரமாக இருக்கையில் , சரணின் கூற்றில் வெளிப்படையாகவே அவளை நடுங்க செய்வே , ரிச்சர்ட்டால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதில் வெடித்துவிட்டான் .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 115
Start from the beginning