அவன் யார் என்று அறியும் வேகம்.. எந்த ஆணின் குரலுக்கும் அஞ்சி நடுங்கும் அவளது தேகம்.. இந்த குரலுக்கு கட்டுப்பட்டவளாய் ஆவலாக தேடி அலைய.. மீண்டும் , "இங்க..", என்று காற்றுடன் கரைந்து விளையாட.. தன் கால்களுக்கு வேகத்தை அதிகரித்தவளாக , அதன் திசையை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டே இருந்தாள்.. பளிங்கு முகம் , சிவந்து ரோஜாவின் நிறத்திற்கு மாறியதே தவிர.. வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரனின் உருவம் மட்டும் எங்கும் தென்படவில்லை .
இன்று , அவன் முகத்தை கண்டுவிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே மிதமிஞ்சி இருந்ததில் , வேகமாக.. ஓடியவள் கல் தடுக்கி , தலைக்குப்புற கீழே விழ.. மண்ணில் முகம் புதைந்து இருந்தவளின் அருகே மீண்டும் , அவன் குரல் பதற்றத்துடன் ,
" மெதுவா ஆரா.. நான் உன் பக்கத்தில தான் இருக்கேன்..", என்று அவன் கரத்தை நீட்ட , பிங் நிறம் பூண்டிருந்த அவனது உள்ளங்கையும் , வெண்மையான நகங்களும் தென்பட.. மெதுவாக , தன் கரத்தை உயர்த்தி அவன் முகம் காண முயன்றது பொழுது , பட்டென்று முகத்தில் எதுவோ விழந்ததில் பதறி அடித்து எழுந்தால் ஆராவின் முகத்தில் தலையணையை எறிந்து இருந்தார் சாந்தி .
சில நொடிகள் , அவளுக்கு இருக்கும் இடமும் மறந்து இருக்க.. திருதிரு என்று விழித்தவளால் கனவில் இருந்தும் வெளி வந்திருக்க முடியாமல் போனது . ஒரு ஆணின் கரத்தை அவளாக பற்றியதும் , அவன் முகம் காண தவித்ததையும் ஏற்க முடியாமல் தடுமாறியவளாக , எழுந்து தலையை தாங்கியவளாய் அமர்ந்து இருக்க ..
அதை பார்த்த சாந்தியோ ,
" அடியேயீ ஆரா.. எழுந்ததும் எப்படி உட்கார்ந்து இருக்க.. சீக்கிரமா கிளம்பு.. காலேஜ்க்கு லேட் ஆகலையா..", என்று தன் வெண்கல தொண்டையை திறக்கவும்.. இயல்புக்கு மீண்டவளாய் ," வந்துட்டேன் க்கா..", என்று குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள் . இயல்பாக இருக்க முயற்சித்தாலும் , தனக்கா.. இப்படி ஒரு கனவு.. தானே ஒரு ஆண் மகனை ஆவலாக தேடியது.. என்று திகைத்து , குழம்பி தவித்தவளுக்கு கல்லூரிக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தலையை உதறி.. சிந்தனைகளை விலக்கியவளாக , கிளம்பியவள்.. காலை உணவையும் உண்ணாது பறந்து இருந்தாள் .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 104
Start from the beginning