ஒற்றை புருவம் உயர்த்தி , ' இது எதுக்கு..', என்று சட்டையை பார்வையால் சுட்டெரிக்க ,
' ம்க்கும்..' என்று மனதளவில் நொடித்தவன் ,
" என்னைக்கு டா.. இந்த டார்க் ப்ளூ ப்ளேசருக்கு பச்சை சட்டை , ஆரஞ்சு டைய்னு போட ஆரம்பிச்ச.. நீ எது போட்டுகிட்டாலும்.. இல்லை எப்படி போட்டுக்கிட்டாலும்.. அது நியூ ஃபேஷன்னு ட்ரெண்ட் ஆகும் தான்டா மச்சி.. அதுக்குன்னு இப்படியா , முதல்ல சேஞ்ச் பண்ணு.. துரை ஏற்கனவே கால் பண்ணி ஞாபகப்படுத்திட்டாரு டா.. பத்து மணிக்குள்ள சிம் வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க.. சீக்கிரமா வா..", என்று அவசரப்படுத்தவும்..
" ம்.. ", என்றவனாக ஆடையை மாற்றி வர.. அதன்பின் விக்கியின் பேச்சு முழுவதும் தொழில் சார்ந்ததாகவே இருந்தது .
காரில் பயணிக்கையில் , " சரண்.. திடீர்னு என்ன சிம் கூட பெர்ஸ்னல் மீட்டிங்..", என்று விசாரிக்க..
வண்டியை இயக்கியவனாகவே ,
" அதுவா.. நட்பு ரீதியான சந்திப்பு..", என்று எகத்தாளமாக பதில் அளித்தவனை.. நன்கு முறைத்து... கோபம் கொண்டு முகம் திருப்ப.." விளம்பர விஷயமா..", என்று சிறு புன்னகையுடன் கூறியதுடன் மீண்டும் மௌனமானவனாய்... முதல் அமைச்சரின் வீடு செல்லும் வரை அமைதியுடனே பயணம் நீடித்து இருந்தது .
சரண் வருகையை தெரிவிக்கப்பட்டதும் , வேலையாள் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல..
" சரணு வா.. வா.. ரொம்ப பெரிய ஆளாயிட்ட.. இது யாரு.. ", என்று தோளில் தட்டியவராக வரவேற்று.. இருக்கையை காட்டினார் முதல்வர்..
அழகாய் புன்னகை சிந்தியவனாய் , " நல்லா இருக்கீங்களா.. எனக்கு எல்லாமே இவன் தான் விக்கி..", என்று விக்கியையும் அறிமுகம் செய்து வைக்க..
" நல்லது.. பெரியவர் எப்படி இருக்காரு..", என்று அவரும் நலம் விசாரிக்க
" நல்ல இருக்காங்க ஐயா..", என்றான் .
" வாங்க தம்பி சௌக்கியமா.. வீட்டில எல்லோரும் நல்லாருக்காங்களா..", என்று முதல்வரின் மனைவியும் நட்பு பாராட்டியதிலேயே.. நீண்ட நாள் குடும்ப நண்பர்கள் என்று விக்கி புரிந்துக் கொண்டான் .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 101
Start from the beginning