" ரெண்டு பேருக்கும் அப்படி என்ன வருத்தமா இருக்கும்.. ", என்று நெற்றி மத்தியில் முடிச்சிட்டவனாக , யோசித்தவாறே தங்கையை கண்ணாடியின் வழியாக கவனிக்க..
அவளோ , வழியும் கண்ணீரை அவசர அவசரமாக துடைத்தவளாக இருந்தாள் . இனியும் , மௌனம் காக்க வேண்டாம் என்று நினைத்தவன்..
" குட்டி.. என்னாச்சு ஏன் சரண் கோபமா இருக்காரு..", என்று அழுத்தமாக கேட்டிட..
' ஒன்னுமில்லை ண்ணே..', என்று சொல்லவே மனம் பரபரத்தாலும் , தன் உள்ளக்குமுறலை எவரிடமாவது பகிர்ந்துக் கொண்டால் அழுத்தம் குறையாதோ என்ற பரிதவிப்பில் இருந்தவளுக்கு.. சகோதரனிடம் ஆறுதல் தேடச் செல்லி மனம் கூக்குரலிட்டது .
அசோக் பில்லரை நெருங்கியதும் , அங்கிருந்த கடைக்கு முன்பாக நிறுத்தியவன் , " இறங்கு.." என்று சொல்ல.. கண்களாலேயே , ஏன் என்று வினவிய தாமரையிடம்..
" என்ன குடிக்கிற.." என்றான் .
எவரிடமும் பகிர்ந்து இருக்காத போதும்.. அவள் உடல்நிலையைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியுமே.. அதனால் , " சாத்துக்குடி ஜுஸ் சொல்லு ண்ணே.." என்றவளாக.. கண்களை சுழற்றி.. காலியான இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் . உடல் சோர்வை.. காட்டிலும் மனச்சோர்வு பெரிதும் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது .
" என் பலவீனம் தெரிந்தே அடுச்சுட்டேல்ல..", என்று வலி நிறைந்த சரணின் குரலே இதயம் முழுவதிலும் எதிரொலிக்க.. கண்களில் உற்பத்தியாகும் கண்ணீரை நிறுத்தவே பெரும் போராட்டத்திற்குள் ஆளானாள் .
'என் அருகாமை அவரை வசம் இழக்கச் செய்கிறது..' என்று ஒருபுறம் மழைச்சாரலாய் மனதை குளிர்வித்த போதும்.. அதை வெறுத்து.. விரும்பாத தன்னவனின் நினைப்பு.. எரித்தணலை கொட்டுவது போல் வலி கொடுத்திருந்தது . தன் சிந்தனையில் முழக்கியவள் விழிகளை மூடி தன்னைத்தானே நிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்க.. கரத்தில் ஏந்திய பழச்சாறுடன் நின்றிருந்த ரிச்சர்ட்டிற்கே , தனக்கு அடியில் பூமி பிளந்திருப்பது போலானது .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
ČTEŠ
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா. என் அன்பே - 90
Začít od začátku