' நன்றி.. ' என்று இரு கரம் கூப்பி நழுவித்தவளின் செயலில் பெரிதும் தடுமாறியவராய்.. பதில் அளித்து பணிவுடன் நகர்ந்திருந்தாலும் , பூலோக அதிசியத்தை கண்டவர் போல் சிலையாக.. அவள் சென்ற திசையையே வெறித்தவராக நின்றிருந்தார். திகைத்து கேமராக்களின் கண்கள் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற எண்ணம் எழுந்தவுடனேயே சுற்றிப் பார்க்க.. அப்படியும் தெரியவில்லை என்றதும் மீள இயலாது நின்றுவிட்டார் .
இது எதுவும் அறியாமல் சிறுப்பிள்ளையென , விரைந்து ரிச்சர்ட் இருக்கும் தளத்தை அடைந்தவள்.. அவன் அறையின் முன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு காத்திருக்க.. ரிச்சர்ட் கதவு திறந்தான் .
" அண்ணே..", என்று அழகாய் புன்னகைத்து நுழைந்தவளின் பார்வையோ , தீவிரமாக தேடி அலைய..
" வா குட்டி.. யாரை தேடுற..", என்றான் மென்னகையுடன் ..
" சாந்தி அக்கா எங்க.. எல்லோரும் வந்துட்டாங்களா.. எங்க யாரையும் காணோம்.. நீங்க குளிச்சிட்டீயன்னு சொன்னீய.. என்ன இப்படியே நிக்குறீய...", என்று அடுக்கிக் கொண்டே போக..
" ஒன்னொன்னா கேளுடா குட்டி.. யாரோட வந்த..", என்று அவளது தலையில் கை வைத்து ஆட்டியவனாக சொல்லி சிரித்தான்.
" தனியாதே ண்ணே.. அவிய பொறவு ( பிறகு ) வருவாக.. அவிய வரப்படி வரட்டும்னு முன்னக்க ( முன்பாகவே ) கிளம்பீட்டேன்.. சாந்தி யக்கா எங்கே..", என்று மீண்டுமாக விழிகளை சுழற்ற..
உள்பக்கமாக , கையை காட்டியவனாய் , மீண்டும் புன்னகை சிந்தியவனிடம்.. " நல்லா மாட்டுனேன்..", என்றவளாகவே சென்றாள் .
தங்கையின் முதுகையே வெறித்திருந்தவாறு இருந்தவனின் கண்களில் தீவிர யோசனை குடியேறி இருந்தது . அவள் வயதிற்குள் எவ்வளவோ கஷ்டங்கள் , சுமைகளை கடந்து வந்திருக்கிறாள் என்பது அவனும் நன்கு அறிவான் . ஒருபொழுதும் , அவள் மலர்ந்த முகத்தில் மாறுதல் தென்பட்டது இல்லை . ஆனால் , இன்று.. அவள் கண்களில் வழியும் வேதனையும்.. அதனை தன் முன் காட்டிக் கொள்ள விரும்பாது மறைக்கும் விதத்திலும் , அதிகமாக குழம்பி நின்றான் .
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 79
Start from the beginning