அதில் , மயங்கி அழகாய் சிரித்தவன்.. " ஆமா , சீக்கிரமா ரூமுக்கு வந்து என்ன பண்ண நினைச்சீங்க..", என்று தீவிரமாக கேட்க .. அவன் கேள்வியில் திகைத்து , தப்பாக எண்ணிவிட்டானோ , என்று அச்சத்தை தத்தெடுத்து ஏறிட்டால் , கண்களில் தென்பட்ட குறும்புடன் இருக்கவும் , அது ஏற்படுத்திய தாக்கத்திலும் அதிகமாக தடுமாறியவள்.. மடியில் இருந்து எழுந்துக் கொள்ள முயன்றவளை தடுக்காது.. பிடியை தளர்த்தியவன்.. அசையாது இருக்கவும் , மூச்சுவிடவும் சிரமத்திற்கு ஆளானாள் .
அப்பொழுது , ஏன் அவ்வாறு கூறினாள்.. என்றால் அவளுக்கே தெரியாது.. அவன் கோபத்தை தணிக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்ததில் கூறிவிட்டாள் . ஆனால் , இப்பொழுது அதன் அர்த்தம் முழுமையாக விளங்க.. பதில் சொல் தடுமாறி கொண்டிருக்கவும்..
" ஓய்.. பாப்பா எதுவும் கஷ்டமான கேள்வி கேட்டுடேனா.. எனக்காகன்னு சொல்லுவேன் பார்த்தேன்.. எனக்காக இல்லையா..", என்றவனின் குரல் ஒரு மாதிரியாக வெளி வர..
' உங்களுக்காக இல்லையாவா.. உங்களுக்காக தானே.. நான் இந்த வீட்டுக்குள்ளேயே வந்தேன்..', என்று மனதில் அலறிக் கொண்டாலும் , உடல் நடுங்க மேல் அன்னத்துடன் நா ஓட்டிக் கொண்டவளாக , நின்றுவிட..
படுக்கையில் இருந்து இறங்கியவன்.. அவளை நெருங்கி இடைவெளியை குறைக்க.. தாமரையோ , கால்கள் தள்ளாட.. மூளை வேலை நிறுத்தம் செய்ததவள் போல் திருதிருத்து நின்றிருந்தாள்..
" சொல்லு எனக்காக தான..", என்று அழுத்தம் கொடுத்து கேட்கவும்.. ஆம்.. இல்லை என்று அனைத்து திசைகளிலும் தலையை உருட்ட.. அடுத்த நொடி , அழுத்தமாக மூடி இருந்த இதழின் மீது தன் அடர் மீசை மூடிகள் குத்தும் அளவிற்கு இதழ் பதித்திருந்தான் .
பணம் கொடுத்து திருமண பந்தத்திற்குள் கட்டாயப்படுத்நி இணைத்ததை நினைத்து வருத்தமோ.. வெறுப்போ.. அவளிடத்தில் தென்படுகிறதா என்று தேடியவனுக்கு.. அதுபோல் , எதுவும் இல்லாததுடன்.. ' உங்களுக்காக.. உங்களுக்காக மட்டுமே..' என்று அவள் விழிகள் பேசிய மொழியும்.. சேர்ந்துக் கொள்ள.. அப்போ , என் நேசம் மட்டும் உனக்கு புரியாமல் போகுமா என்று மெல்ல கிளர்ந்த சினத்துடன் இதழில் புதைய.. சுரக்கும் இதழ்தேனை ரசித்து சுவைத்தவனுக்கு.. அவள் விழிகளகல் வழிந்த பிரம்மிப்பு.. வியப்பை கடந்து காதலை காண ஏக்கம் எழுந்து ஆட்டுவிக்கவே , வெற்றிடையில் பதிந்த கரத்தில் அழுத்தம் அதிகரித்தவனாக.. மேலும் இயங்கி.. அவளை தடுமாற வைத்திருந்தான் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே- 76
Start from the beginning