வா.‌. வா.. என் அன்பே - 75

Start from the beginning
                                    

" ஸ்.. ஸ்.. ஸா..ர்.. ", என்று தாமரையின் குரல் பல தடுமாற்றத்துடன் வெளி வந்த அழகில்..

" ம்.. ம்..", என்று அதை ரசித்தவனாகவே , புதைந்திருந்த கழுத்தில் இருந்து விலகாமலேயே கேட்டிட..

" நா.. நா..ன் போ..கணு..ம்.. ", என்றாள் .

" ஏன்..", என்றதற்கு

' ம்ச்சு இது என்ன கேள்வி.. சாப்பிட கூப்பிட வந்தவளை விடாம பிடிச்சு வச்சிட்டு..', என்று உள்ளுக்குள் சலித்தவளாக..

"  கீழே எல்லோரும் வெய்ட் பண்றாங்க.. டிபன் வைக்கணும்..", என்று கூறியவளுக்கோ , குரல் வெளி வரவே மறுத்து.. காற்றுக்கு தத்துப்பிள்ளையாகி போனது போல் , கிசுகிசுக்க.. மேலும்.. மேலும்.. தீவிர ரசிகனாக மாறியவனுக்கோ , அவளை விட்டு பிரியவே மனமில்லாமல் போக ,

" ஏன்.. நீ போகலேனா.. யாரும் சாப்பிட மாட்டார்களா..", என்று கூதூகலத்தை உள்ளுக்குள்ளே புதைத்து.. குதர்க்கமாக கேள்வி கேட்டவனின் குரல் இறுக்கத்துடனே வரவும் ,

" அச்சோ.. அப்படி இல்லை ஸார்.. பரிமாறிட்டு இருந்தேனா.. நீங்க கூப்பி..ட்..ட..தும்.. பா..தி..லேயே .. வ..ந்து..ட்..டேன்.. அ..தா..ன்.. எ..து..னும் முக்கியமான வே..லை.. இல்லேனா.. போ..க..வா..", என்று திக்கித் திணறி சொல்ல..

அடிப்பாவி என்று மனதோடு அதிர்ந்து.. பின் புலம்பலுக்கு தாவியதில்.. அரை விநாடி ,  எவ்வித அசைவுகளும் இல்லாமலேயே  அவனிடத்தில் போனது .

அவனது அசைவற்ற நிலையை கண்டவளுக்கோ , ' போச்சு.. என்ன சொல்ல போறாகன்னு தெரியலையே.. ', என்று அலறி.. கால்கள் வெடவெடத்து துவள , மறைக்க முயன்றவளாய் ,

" ஸா..ர்..", என்று இழுக்கவும்..

" அப்போ.. உனக்கு இது முக்கியமானதா தெரியலை.. நான்.. நான்.. உனக்கு முக்கியமானவனா‌.. தெரியலை.. இல்லையா..", என்று முழுமையாக அவளைவிட்டு பிரிந்து நின்று கூர்மையாக கேட்டிட..

" அச்சோ.. நான் அப்படி சொல்லல.. அ..து.. நா.. அங்கே எல்லோரும் இருக்கறாக.. நா..ன்.. நீ..ங்க.. " என்று கோர்வையாக கூற முடியாமல்.. அவன் முகம் காணவும் தடுமாறி நிற்க , கூர்மையான பார்வையை மட்டுமே வீசியவனாக நின்றிருந்ததில் மேலும் தடுமாறினாலும் , அவனது அசையா தோற்றம்.. ' உன் பதில்.. கண்டிப்பாக எனக்கு வேண்டும்..', என்ற அழுத்தமும் தொக்கி நிற்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now