அனைவரும் ஆவலே உருவாக , காத்திருந்த ரிச்சர்ட் மற்றும் தாராவின் திருமணம் நாளை.. ஆனால் , தன்னவன் வருவானா என்று பயந்தவளாக நின்றிருக்கிறாள் . அவர்களது திருமணத்திற்கான ஆடைகள் அனைத்தும் தாமாரையின் கைவண்ணங்களே.. அதேபோல் , தினமும் நடைபெறும் கோர்ஸிலும் சேர்ந்துவிட்டாள் . இதனோடு , மேக்கப் செய்வதையும் விடாமல் இருக்கவே காலில் சக்கரத்தை கட்டாத குறையாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாள் . இவை அத்தனையையும் தாண்டி.. சில மணித்துளிகளே என்றாலும் உடல் ஓய்விற்கு கெஞ்சும் மணித்துளிகளில் ஓட்டிக் கொள்ளும் தன்னவனின் நினைவுகளும்.. அவன் மௌனமும் கொன்றுப் புதைத்ததாகவே இருக்க.. பரிதவித்திருந்தாள் .
' மூனு மாசமாச்சு.. நாளைக்காவது வருவாங்களா.. என்னை பார்ப்பாங்களா...' என்று தனக்குள்ளாக புலம்பியவளை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தது அவளது மனசாட்சி . ' உனக்கு எதுக்கு அவசரங்கறேன்.. இப்பவே அத்தனையும் கொட்டிக் கவிழ்கலேனா.. தான் என்னங்கறேன்..' என்று காறித் துப்பிக் கொண்டிருக்க.. விண்ணுவிண்ணு என்று தலைதெறிக்க துவங்கிவிடவே.. மெதுவாக , கீழ் இறங்கி இருந்தாள்..
கோபம் கொண்டு கரத்தால் பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க.. சரணோ மௌனத்தால் மட்டுமல்ல.. முகம் காணவும் மறுத்தவனாக நடந்துக் கொள்கிறான் . ' ஆண்டவா.. இந்த தவிப்பெல்லாம் நாளைக்கு அவங்க வரதோட முடிஞ்சு போயிடணும்..", என்று தனக்குள்ளாக சமதானம் கூறியவளாய்.. கீழ் இறங்கி.. உறங்குபவர்களின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அடி மேல் அடி வைத்து சமையற்கட்டிற்குள் நுழைந்து காபியை தயாரித்துக் கொண்டிருக்க..
" தாமரை இங்க என்ன பண்ற.." என்று ராமின் குரல் இருட்டின் அமைதியை மென்மையாக விரட்டியவாறு கேட்டதில் திரும்பி பார்த்தவள் .
" மாமா.. அது.. அது ஒன்னும் இல்லை.. லேசான , தலைவலி அதான் காபி..", என்று தன் சோகத்தை உள் இழுத்தவளாக கூறி..
" நீங்க.. நீங்க இன்னும் தூங்கலையா மாமா..", என்றாள் .
" ம்... கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. யாருன்னு பார்க்க வந்தேன்..", என்றவரின் பார்வை அழுத்தமாக படிந்தவாறு இருக்க.. அதன் வீச்சு தாளாமல்.. கோப்பையின் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 74
Start from the beginning