கூறும் பொழுது தெரியாத அதன் அர்த்தம் இப்பொழுது புரிய , வெட்கமின்றி பேசியதாக.. தவறாக நினைத்து விடுவானோ.. என்ற சிந்தனையே ஆட்டுவிக்க.. தன் இரு உள்ளங் கைகளையும்.. தொடைகளில் வைத்து.. புடவையை கசக்கிக் கொண்டிருந்தவளுக்கோ.. பதற்றம் அடங்க மறுத்ததாய் .
" எப்படி.. இனி.. எப்படி நா அவிய முகத்தை பார்ப்பேன்..", என்று குழப்பத்தில் உடல் நடுக்கம் எடுக்க.. வறண்ட தொண்டையை எச்சில் விழுங்கி தாகத்தை தணித்தவளின் செயலின் சத்தம் துள்ளியமாக , அவனையும் சென்றடைந்தது .
அவள் விசிறி சென்ற சொற்களின் தாக்கம் குறையாது இருக்க.. பெண்ணவளின் தடுமாற்ற தோற்றமோ.. மொத்தமாய் மேலும் அவள் மீது பித்துக் கொள்ளவே செய்திருந்தது.
தாமரைக்கோ.. சரணின் வேதனையை துடைத்தெறிவதற்காகவே உண்மையை சொல்வதாக தன் உணர்வை வெளியிட்டாலும்... , கணவனிடத்தில் அவளுக்கு இருக்கும் காதலும்.. தெளிவாய் புரிந்த தருணமாக , இன்பமும் துன்பமும் ஒரு சேர ஆட்டிப்படைத்து.. பெருகிய காதலையும் அனுபவிக்கவிடாமல் தடுத்திருந்ததில்.. அழுத்தமாக விழிகளை மூடி நின்றுவிட்டாள்.
வரைந்த ஓவியமாக , நின்றிருந்தவளின் முதுகின் அருகே தன் வெப்ப மூச்சுக்காற்று உரச , "நீ என்ன சொன்ன..", என்று கம்பீரம் குறையாமல் கேட்டு திடுக்கிட செய்திருந்தான். .
பட்டென்று , கண்களை திறந்தவளுக்கோ.. அவன் முகம் காணும் துணிவும் வந்திருக்கவில்லை. அவள் பெயரை உச்சரித்தாலே தன் வசமிழந்து தடுமாறும் ஆண் மகனுக்கு.. இக்கணம் சொல்லவும் வேண்டுமோ !
பின்புறமாய் , நின்றிருந்தவனின் மூச்சுக்காற்று.. பின்னங் கழுத்தில் மோதி மயற்கால்களை கூசச் செய்ய.. முன்புறமாக நகர்ந்துக் கொள்ளவும் வலு விழந்தவளாக.. அசையாமல் நின்றிருக்கவும் ,
"பாப்பா..", என்று மிருதுவாய் அவன் குரல் வருடியதில்.. அவனை காண , ஆடவனின் முகத்தில் மின்னிய ஆர்வமும்.. போட்டிப் போடும் காதலிலும் மீண்டுமாக தன் வசமிழந்தவள்.. தலை சாய்ந்து மௌனம் சாதிக்க..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 72
Start from the beginning