நடுவறையில் நின்றிருந்தவனுக்கோ.. என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடிகள்.. உறைந்து நின்றிருந்தவன்.. பின் , சமையலறைக்குள் நுழைந்துக் கொள்ள.. இரு கண்களை , தன் கைகளால் மறைத்து வைத்து படுத்திருந்தவனின் விழிகளுக்குள் மனைவியின் பிம்பம் அலைக்கழித்ததாய் .
ஏனோ , அசிங்கம் என்று அவள் உதிர்த்த சொல்லிலேயே , வந்து நிற்க.. உள்ளம் கொதித்தாலும் , வெட்கம் கெட்டு , மீண்டும் தானே அவளை அழைத்த செயலை எண்ணி.. அவளிடமே தஞ்சம் புக நினைக்கும் மனதை சபித்தவனாய் கிடந்தான் . முன் மாலையில் , இழுத்து அணைத்து போது.. தவறாக , தோன்றாதது.. பின் மாலையில் , எப்படி அசிங்கமாக மாறியது என்று மறுகியவனுக்கோ.. எரிமலையாய் மண்டையை பிளக்க.. அழுத்தமாக பற்றிக் கொண்டு குப்பறப் படுத்தவனை.. ' ஸார்.. 'என்று வாய் திறக்க வந்த ரிச்சர்ட் , அவன் இருக்கும் நிலையை பார்த்ததும் பரிதாபம் எழ.. அவன் எதிர்பார்ப்பும் புரிய ,
" சரண்.. சாப்பிட வாங்க..", என்று அழைத்திருந்தான் . அவன் அழைப்பிலேயே பட்டென்று எழுந்த சரணோ , " கொஞ்சம் உன் தங்கச்சிக்கும் சொல்லி கொடுடா,", என்று ரிச்சர்டின் பின்னங்கழுத்தை இறுக்கியவனாக.. எழுந்து வர..
வாய்விட்டு சிரித்தவன் , "கொஞ்சம் கொஞ்சமாக மாறிடுவா..", என்றான் .
" இன்னும் மாறலை.. இனிமேலா , மாறப் போறா.. போடா.. டேய்..", என்று அத்தனை சலிப்பு அவனிடத்தில் வெளி வந்தாலும்..
அதன் பின் இருவரும் சகஜமாக உரையாட.. மெல்ல மெல்ல.. சரணுடன் நட்பு பாராட்டியவனாக இருந்தான் .சரண் டெல்லிக்கு சென்று , வாரங்கள் கடந்திருக்க.. தாமரையோ , தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் . அன்றைய , அழைப்பிற்கு பிறகு .. அவனிடத்தில் இருந்து எவ்வித அழைப்பு வராது இருக்க.. ஏனோ , அவளாக அழைக்கவும் தைரியம் வராமல் போனதில் நாட்களை நெட்டித் தள்ளியவளாய் இருந்தாள் .
இதற்கு இடையில் , ராமின் கட்டளையால்.. தாமரைக்காக என மயூரியின் கடையிலேயே , மற்றொரு தளத்தில் புதிதாய் அழகு நிலையம்.. அவளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. அங்கு பொறுப்பேற்றிருந்தாள் . அவள் வடிவமைத்துக் கொடுத்த ஆடையையும் தைய்த்துக் கொடுக்கும் பொறுப்பும் இணைந்திருக்கவே.. நேரம் ரெக்கைக்கட்டி பறந்ததாகவே இருந்தது . ஆனாலும் , மனதை அரிக்கும் அவன் நினைப்பில் இருந்து வர முடியாமல் இருந்ததன் விளைவு , இரவு உணவை முடித்து , சாவித்திரிக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவளுக்கு சரணின் நினைவே ஆட்டுவித்ததாக இருந்தது..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 67
Start from the beginning