" ஷ்.. அதான் வந்துட்டேனே.. வேலையா இருந்ததுல கவனிக்கலை.. அதுக்கு யாராவது.. இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்களா..", என்று மென்மையான கண்டிப்பை கையில் எடுத்தவனாய் கூறியிருந்தாலும்.. தாமரைக்கு ஏனோ , மனம் அடங்க மறுத்திருந்தது .
அவனது குரலில் இருந்த அந்நியத்தன்மை மேலும்.. அவள் அழு மூஞ்சித்தனத்திற்கு வித்தாக அமைந்ததே தவிர.. சமாதானம் செய்யவில்லை . பாவமாக , ஏறிட்டவளின் வீழி வீச்சை தாள முடியாதவனாய்..
" ம்ச்சு.. இப்ப அதுக்கு என்ன.. அதான் நான் வந்துட்டேன்ல.. இனிமேல் , கவனமா இருக்கேன்.. வா..", என்று விலக முயல..
" ரொம்ப பசிக்குது.. சாப்பிட வாங்க..", என்றாள்..
சரணோ , உள்ளுக்குள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருந்தான் . தன் போல் , கண்களோ நேரத்தை ஏறிட.. தான் உணவருந்தியதை கூறவும் விருப்பம் இல்லை.. அதனால் ,
"என்ன பாப்பா இது.. சின்னப்பிள்ளை மாதிரி.. இவ்வளவு நேரம் எதுக்காக சாப்பிடாம இருக்க.. ஆங்.. இரு வரேன்..", என்று மின்னல் வேகத்தில்.. கை கால் கழுவி வந்தவன் , தன் உடையை மாற்றாமல்.. கைகளை மடித்தவனாக.. வெளி வந்து ,
"வா..", என்று அழைத்தவனாக விறுவிறுவென முன்னே நடக்க..
' இவள என்ன பண்றது..', என்று பல் கடித்து சினந்தவனாய் நடந்திருந்தாலும்.. வேகமாக , உணவு மேஜையை ஆராய ,"தோசை.. இருங்க வரேன்.." என்று கூறிக் கொண்டே.. அடுப்படிக்குள் நுழைந்து அடுப்பை மட்டுமே பற்ற வைத்திருப்பாள்.. தன் வேக எட்டுக்களோடு அவனும் நுழைந்து..
" நகரு.." என்று அவளை ஒருபக்கமாக நகர்த்தி மேடையின் மீது அமர வைத்து.. அவன் தோசை ஊற்ற... " அச்சச்சோ.. என்ன பண்றீங்க.. நகருங்க..", என்று அவளது பதற்றத்தை கண்டுக் கொள்ளாமல்..
" ஷ்..", என்று ஒற்றை விரலால் , மிரட்டி அடக்கியவனின் செயலில் எப்பொழுதும் போல் பீதி அடைந்தவளாய்.. உறைந்து சிலையாக அமர்ந்துவிட்டாள்..
அவனோ , அவன் பார்க்கும் வேலையில் மிகவும் , கருத்தாக இருந்து .. இரு தோசைகளை ஊற்றி அவளது கரத்தில் திணித்தப் பின்..
![](https://img.wattpad.com/cover/315171494-288-k275714.jpg)
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 51
Start from the beginning