மஞ்சள் சேர்த்த உறவே - 56

1.4K 49 13
                                    

பகுதி - 56

இனியனோ , ஆதிராவின் விலகலை ஏற்றுக் கொள்ள முடியாதவனாய் தடுமாறினான் . இருவருக்குள் இருக்கும் இடைவெளி தீராத போதும் , ஊட்டியில் தன்னிடம் தோள் சாய்ந்த பிறகு.. இதுவரை , அவள் வாயே திறப்பது இல்லை.. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்.. அவ்வளவே.. இருவருக்கும் குழந்தை வேண்டும் என்று அவள் ஆசையாக கூறியது முதல்.. தன் ஆண்மையை அடக்கி ஆள முடிந்தவனால் , அவளது விருப்பத்திற்கு மட்டும் தலையசைக்கும் துணிவு.. துளியளவும்  இல்லாதவனாய் இருந்தான் .

அவர்களது பூசல் கிடப்பில் போட்ட கல்லாக சில மாதங்கள் இருக்க.. எப்படியோ , அவனை ஆதிராவின் விருப்பத்திற்கு சம்மதிக்க வைத்தவிட்டவள் பிறகு , பிடிவாதமாக.. ஏழாம் மாதத்திலேயே வளைகாப்பு வேண்டும் என்று கூறி.. இன்று அந்த இனிய நாளும் பிறந்திருக்க.. விஷாலி , கிளம்பிக் கொண்டிருக்கிறாள் .

காலை ஏழு மணிக்கே வீட்டில் இல்லை உதய்.. இன்று முக்கிய அறுவை சிகிச்சை இருப்பதால் , சென்றுவிட்டவன்.. ஒன்பது மணியளவில் மண்டபத்திற்கே வந்துவிடுவதாக கூறியவனாக.. ஐந்து மணிக்கெல்லாம் பறந்திருந்தான் . உதய்யுடன், சேர்ந்து செல்லவே ஆசையாக இருந்தாலும் , அவனை எதிர்பார்த்து காத்திருந்தால் , மண்டபத்தை காலி செய்வதற்கே செல்ல முடியும் என்று நினைத்தவளாய்.. கிளம்பிக் கொண்டிருக்கிறாள் . அதற்குள்ளாக ஏகப்பட்ட அழைப்புகள் , ஒவ்வொருவரிடம் இருந்து.. புடவை கட்டி முடிப்பதற்குள் ஐந்து அழைப்புகளுக்கு மேல் ஏற்றவள்.. மீண்டும் ஆதிராவின் அழைப்பு வர , "இப்ப நான் கிளம்பவா.. இல்லை நீ நல்லபடியா விஷேஷத்தை முடிச்சதும் வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவா.. ஒரு புடவைய கட்டவிட மாட்டேங்கிறீங்க..", என்று எரிச்சலோடு கூறவும் வாய்விட்டு நகைத்தவள்.. , " சரி.. சரி.. நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்திடு.. சேர்ந்தே மண்டபத்துக்கு போகலாம்.. அது சொல்ல தான் கூப்பிட்டேன்..", என்றாள் .

" ம்.. எப்ப கிளம்புறீங்க.. ", " எட்டுக்கு மேல ஆயிடும்.",

" அப்போ , சரி.. நான் வீட்டை விட்டு கிளம்பும் போதும்.. உனக்கு போன் பண்றேன்.. சரியா..", என்று சொல்லவும்..

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now