மஞ்சள் சேர்த்த உறவே - 49

1.3K 42 6
                                    

பகுதி - 49

அந்த இடத்தின் குளுமையும் பனியும்.. அவளுக்கு ஏற்றுக் கொள்ளாததால் , இங்கு வந்த மறு தினத்தில் இருந்தே உடல் சூடு அதிகரித்து.. காய்ச்சலில் விழுந்துவிட்டாள் . அருகே , படுத்திருந்தவளின் வெப்பம்.. அவனையும் தாக்க.. விழி திறந்தவன் கண்டதோ , நடுங்கிய கோழிக்குஞ்சு போல்.. வெடுவெடுத்து சுருண்டு கிடந்தவளை ,

" ஷாலு.. ஷாலும்மா.. என்னாச்சுடா..", என்று நெருங்கி தொட்டுப் பார்த்தால்.. அனலாய் கொதிக்க.. குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்தாள் .

இயல்பாகவே , போர்வையில்லாமல் விஷாலி படுக்கவே மாட்டாள்.. வெட்கை அதிகரித்து இருந்தாலும்.. இடையின் கீழ் பாதத்தை மறைத்தவாறாவது.. அவளோடு உறவாடிக் கொண்டிருக்கும்.. குளிர் நாட்களில் சொல்லவும் தேவையில்லை.. முகத்தையும் மறைத்து அதனுள் ஒடுங்கிக் கொள்வாள்..

" எருமைமாடு.. கரண்ட் கட்டாகி.. வேர்த்து ஊத்துது.. ஆனாலும் , மூஞ்சி வரை இழுத்து போர்த்தீட்டு தூங்குது பாரு.. எருமை மாடு.. ", என்று எத்தனையோ முறை அவள் சகோதரன் மணியனிடம் வசவுகளைப் பெற்றாலும்.. இந்த பழக்கத்தை மட்டும் கைவிட்டதே கிடையாது. அதற்கு அவள் உரைக்கும் காரணமோ.. " ம்.‌. ட்ரஸ்.. விலகிக்கும் ', என்பதுவாக தான் இருக்கும்.. இங்கோ , இயற்கையாகவே குளிர் அதிகம் இருக்க.. சொல்லவும் தேவை இருக்கவில்லை.

அவள் குணம் நன்கு தெரிந்து வைத்திருப்பவன் என்பதாலேயே , ஹீட்டரை அதிகப்படுத்தி வைத்திருந்தான்.. ஆனாலும், காய்ச்சல் கண்டதால்.. அதிகமாக நடுங்கினாள்.. சிறு முனங்கலில் , விழி மலர்ந்தவனுக்கோ.. அதிகம் பதறி போனான்.. அன்றிரவு முழுமையாக அவன் உறக்கம் பறிப்போனது.. சிறு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாதது போன்று கவனிக்க.. பழைய நினைவின் தாக்கத்தில்.. கடைவிழியோரம் நனைந்தவாறு கிடந்தாள் .

சூர்யாவோடு இருந்த நாட்களை தட்டி எழுப்பியிருந்தது.. ஒருமுறை , இரு தினங்களாக , அவள் காய்ச்சல் கண்டு இருக்க..

" அத்தை , ரொம்ப காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு.. மாத்திரை போட்டும் கேட்கலை .. ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரவா..", என்றவளிடம்..

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now