மஞ்சள் சேர்த்த உறவே - 15

1.1K 40 2
                                    

பகுதி - 15

விஷாலியை அங்கு நிறுத்திய உதய்.. தன் இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு.. அழுத்தமான பார்வை பதித்தவனாக.. விஷாலியிடம் ," எதுக்கு இந்த அழுக.." என்றான்.

"நான் ஊருக்கே போறேன்.. எனக்கு இங்க வேண்டாம்.. எதுவுமே புரியலை.." என்று திக்கிக் கொண்டிருக்க..

" ஷாலுமா.. ஷாலு.. என்னை பாரு.. என்ன ப்ராப்ளம் உனக்கு.." என்று அவள் தீடிரென்று அவ்வாறு கூறியதில் ஒன்றும் புரியவில்லை.

மிக மிக மெல்லிய குரலில்.‌." கஷ்டமா இருக்கு.." என்று உதடு பிதுக்கவும்.. அந்த குழந்தை அழகில் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட..

" நீ வந்து முழுசா ரெண்டு ப்ரீயட் முடியலை.. அதுக்குள்ள கஷ்டமா இருக்கா.." என்றான் தன் வெண்ணிற பற்கள் பளிச்சிட..

ஆதிராவின் கண்களோ.. அவனை விடுத்து எங்கும் நகராது இருந்தது. அதுவும் இந்த சிரிப்பில்.. அவ்வளவு அழகனாய் தெரிந்தான்.. வஞ்சனையே இல்லாமல் அவனை சைட் அடித்துக கொண்டிருந்தான். எத்தனை நாட்கள் இவன் சிரித்தால எப்படி இருப்பான்.. அழகு கூடுமோ.. இல்லை.. ஏன் சிரிக்கிறான் என்பது போல் சத்தமாக இருக்குமோ‌.. என்று எல்லாம்.. அவள் நணபிகளோடு ஆராய்ந்திருக்கிறாள். ஆனால் அந்த இடத்தையே அழகாய் மாற்றக் கூடிய வல்லமை இருக்கும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை.அப்படி இருந்தது.. அந்த ஒற்றை புன்னகை.. அவளுக்கு..

" ம்.. எல்லாமே இங்கிலீஷ்ல சொல்லித் தராங்க.. யாருமே தமிழ்ல பேச மாட்டேங்கறாங்க.." என்று விஷாலியில் குரலில் மீண்டும் நடப்புக்கு வந்தவளாய்.. அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

" ப்பூ.. இவ்ளோ தானா.. நான் என்னவோன்னு பயந்துட்டேன்.. நீதான இங்லீஷ்ல படிக்கனும்னு.. " என்று வினவியவனிடம்..

" ஆமா.. அதுக்கு புரியனும்ல.." என்று இப்பொழுது அழுகை நின்று சுணக்கம் இடம் பிடிக்கவே.. சிணுங்களாய் வந்தது.

சிரித்தவன்.. அவள் கரத்தை பற்றி.. அருகே ஆதிரா வந்ததை ஏற்கனவே பார்த்ததால்.. வா என்பது போல் தலையசைத்து அழைக்கவும்.. கனவில் மிதந்தது போல் அவர்களை நெருங்கியிருந்தாள் . அவனோ மீண்டும் விஷாலியிடம்.. " இங்க பாரு ஆதிரா.. இருக்கா.. அவ ஹெல்ப் பண்ணுவா.. நீ பயப்படக் கூடாது.." என்றான்.

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now