மஞ்சள் சேர்த்த உறவே - 24

1K 36 1
                                    

பகுதி - 24

அன்று அவள் கதறலை செவி சாய்திருந்தாலும்.. நரகத்தின் பிடியில் சிக்கி இருக்க வேண்டாமே... எத்தனை முறை மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாலும் செய்த தவறின் அளவை குறைக்கவும் முடியாது அவளுக்கு இழைத்த தூரோகத்தை அழிக்கவும் முடியாதே.. இதயம் விம்மி விம்மி வெடித்துக் கொண்டிருந்தவனுக்கு.. தன் பாரத்தை எவரிடமும் இறக்கி வைக்கவும் முடியாமல்.. வேகமாக வாகனத்தை கிளப்பினான்.

கவனத்தை ரோட்டில் பதிக்காமல்.. எங்கோ கவனம் சிதறியவனாய்..

தீபன் வந்ததும் ஷாலு அவனிடத்தில் தான் நடந்துக் கொண்டதை பற்றி முறையிட்டிருப்பாள் என்று நினைக்க.. அவளோ பொய்யாக்கி இருந்தாள்.‌ அத்தோடும் விடாமல்.. சொல்லாமல் பள்ளியில் இருந்து டிசி பெற்று வெளியேறியது மட்டுமல்லாது.. தொலைபேசியில் அழைத்தாலோ.. மணியன் எடுத்தாலோ.. தேவியோ.. இயல்பு மாறாதவர்களாக உரையாடிட.. ஆனால் அவளோ.. அழைப்பையும் எடுப்பதில்லை.. அப்படியே எடுத்தாலும்.. அவன் குரல் கேட்ட மறுநொடி அணைக்கப்பட்டிருக்க.. பொசுபொசுவென கோபம் அதிகரித்தவனாக இருந்தானே தவிர.. அவள் மனநிலையை கவனிக்க தவறியிருந்தான்.

எப்பொழுது.. எவனோ ஒருவனின் கரத்தை பிடித்து திரிந்ததை பார்த்தானோ.. அந்த நொடியில் இருந்து அவள் கூறியது போல் மிருகமாய் மாறியிருந்தான்.. என்பது மட்டுமே உண்மை.

எப்படி எவனோ ஒருவனுடன் உரசிக்கொண்டு இருக்கலாம்.. என்ற ரௌத்திரம்.. அவன் சிந்திக்கும் செயலை முழுதாய் இழக்கச் செய்திருந்தது.. அவன் அவளிடத்தில் நெருங்கி இருந்த விதமும்.. அவள் அனுமதித்திருந்ததிலும்.. ரெண்டு பேரும் காதலிக்கராங்களோ‌.. என்று மூளை கூக்குரலிட.. 'அது எப்படி என்னைவிட்டு.. வேறொருவனிடத்தில் நேசம் வரலாம்.. என்னை தவிர்க்கும் தைரியம் எங்கிருந்து வந்தது.. விட மாட்டேன்.. நீ யாருக்கும் அல்ல ‌‌எனக்கு.. எனக்கு மட்டுமே சொந்தமானவள் ', என்று மூர்க்கமாக முடிவெடுத்ததும்.. அதற்குண்டான வேலைகளில் இறங்கியவனாய்.. அவளை தேடிப் புறப்பட்டுவிட்டான்.

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now