பகுதி - 48
அன்று மதியம்.. ' நம்ப மாட்டாயா..', என்று கேட்டதோடு.. சரி.. அதன் பிறகு வார்த்தைக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. மாலை அவனை தேடிச் சென்று சாவி கேட்டால்.. வேண்டாம்.. இன்று வேலை இருப்பதாக கூறி அனுப்பிவிட்டான். எவ்வளவு முயன்றும் அழுகையை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.. ஆனால் , அன்று இரவு பதினொன்றை தாண்டி இருக்கும் வேளையில்.. அவள் தாய் வீட்டிற்கே அவளைத் தேடி வந்துவிட்டான் .
இரவு வீட்டு வேலைகளை முடித்து படுப்பதற்காக.. கதவை தாளிட்டு.. அறைக்குள் நுழையும் வேளையில் , வாயிற் மணி அடிக்க.. " யாரு இந்த நேரத்தில..", என்று யோசித்தவராய்.. தேவி கதவை திறந்தார். அங்கு உதய்யை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை என்பது அதிர்ந்திருந்த முகத்திலேயே தெரிந்திருக்க.. அதே உணர்வை வெளிப்படுத்தியவளாய் , ஷாலியும் அவர் பின்னே நின்றிருந்தாள் .
" வா.. வா.ங்..க.. தம்பி.. ", என்று உள்ளே அழைத்து கதவை அடைத்தவர்.. விஷாலியை பார்க்க.. அவளோ , அதிர்ச்சியில் மீளாதவளாய்.. வேகமாக , மகளை நெருங்கிய தேவி, " ஷாலி.. என்ன மரமாறி நிக்கிற.. வான்னு கூப்பிட்டு ரூமுக்கு கூட்டீட்டு போ..", என்று கடித்த பற்களுக்கு இடையே கூறியவர்.. வேகமாக , அடுக்கடுக்களைக்குள் திரும்ப.. சுயத்திற்கு வந்தவளாய் , " வாங்க..", என அவன் பேக்கை வாங்க கை நீட்டினாள்..
" பரவால்ல.. வா..", என்று அவள் அறைக்குள் நுழைந்து.. குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.சிலகணங்கள் சிலையாய் நின்றவள்.. அதன் பிறகு , உயிர் பெற்றது போல் , அவளது பிரோலை திறந்து.. அவனுக்கான துண்டையும்.. சூர்யா பயன்படுத்தியிருந்த இலகுவான மாற்று உடைகளையும் எடுத்து.. மெல்ல கதவை தட்டினாள் .
" மா..மா.. டவல்..", என்று வெளியில் நின்று குரல் கொடுக்க.. கதவை திறநதவன் முகத்தை மட்டும் சுத்தம் செய்திருப்பான் போலும்.. " ம்..", என்று வாங்கி முகத்தை துடைக்க.. எதுவோ , அவள் சொல்ல தயங்குவது புரியவும்.. " ஏன் இங்கு வந்தாய் ", என்று கேட்டுவிடுவாளோ என்று உள்ளுக்குள் பயந்தாலும்.. வெளிப்படுத்தாதவனாய் , " என்ன.. எதாவது சொல்லணுமா..", என்று தைரியமாக கேட்டான் .
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...