பகுதி - 12
விஷாலியை தனித்துவிட்டு வந்த பிறகு , உதய்யால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை . அவள் நிலை முழுமையாக அறிந்த பின்னும்.. மீண்டும் மீண்டும் தன் கோபத்தால்.. அவளை காயப்படுத்துவதை நினைத்து பார்த்தவனுக்கு.. அவனுக்கே அவன் மேல் கோபம் கிளர்ந்தெழுந்தது.
நேராக வீட்டிற்கு சென்று, முடங்கிக் கொள்ளவும் பிரியமில்லை . அதனால, ப்சென்ட் நகர் கடற்கரைக்கு விட்டவன்.. புதைமணலில் இறங்கி நடக்கவும்.. விரும்பாதவனாக.. தன் காருக்குள்ளேயே.. ஸ்டைரிங் வீலை பிடித்து.. மொத்த வேதனைகளையும்.. அதில் காண்பிக்க.. தெறித்து விழுவது போல் புடைத்திருந்த நரம்புகளில் நன்கு வெளிப்பட்டது.
தன் அருகே.. கேட்ட அலைபேசியின் சத்தமும்.. நினைவுகளை பின்னுக்கே இழுத்துச் செல்ல.. எடுக்க மனமற்றவனாக.. நினைவுகளின் தாக்கத்திற்குள் மூழ்கினான்.
தொடர்ந்து வந்த விடுமுறையின் காரணமாக.. பள்ளி விடுதியில் இருந்து.. வீட்டு திரும்பியிருந்த உதய்.. பதினொன்றாம் ஆண்டில் இருக்க.. காலை எட்டு மணிக்கு.. அலைபேசி.. அழைப்பதும்.. பின் நின்றுவிடுவதுமாக.. அவன் தூக்கத்தை கலைத்ததில்.. கண் விழிக்கையிலேயே.. தன் ரத்த அழுத்தத்தை எகுறச் செய்து கொண்டிருக்கும் நபர் யாரென பார்க்கவே.. புதிய எண்ணாக இருந்தது.
முதலில் புரியாமல்.. யாரு என்று நினைத்தவன்.. மறுபடியும் வரட்டுமே.. என்று கருவிக் கொண்டிருக்கும் பொழுதே.. அழைப்பு வந்தது போல் மின்னி மறைந்தது.. அதே எண்ணில் இருந்து .
எரிச்சலை அதிகப்படுத்திய.. அந்த நபரின் எண்ணை.. கூர்ந்து பார்த்த பிறகே.. அட நம்மாளு.. என்று குதூகலித்தது உதய்யின் மனம் . அவன் எண்ணத்தில் விளைந்த இந்த சொற்களை முழுதாக அவனே கவனிக்கவில்லை போலும்.. குறுஞ்சிரிப்போடு.. அவள் அழைப்பிற்காக காத்திருக்க.. பொய்மை விளைவிக்காமல்.. அவளும் மீண்டும் அழைத்துவிட்டாள்.. சத்தம் வருவதற்கு முன்பாக.. ஒளிரும் வெளிச்சம் கண்டவன்.. உடனே எடுத்து விட்டான் .
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...