பகுதி - 16
காதிலிப்பவர்களுக்கு.. காதலும் ஒருவகை போதை.. எக்கணமும் தங்களை மறந்தவர்களாக திரிவர்.. அவர்களின் ஒவ்வொரு அணுக்களையும் அடிமைப்படுத்தி கொண்டிருக்கும்.. அத்தகைய போதையில்.. உதய்யின் நினைவால்.. தன்னை மறந்து கனவுகளில் அவன் நினைவுகளோடு சுகமாக வலம் வந்து கொண்டிருக்கிறாள்.
ஆனால் அந்த கனவுகளும்.. காற்றோடு கலக்கப் போவதை அறியாதவளாய்.. இருந்தாள்.
சில நாட்களிலேயே.. அதுவும் விஷாலி இல்லாத நேரத்தில் பள்ளிக்கு வந்த உதய்.. அவளை பார்க்கவே வந்ததாக கூறி அழைக்கவும்.. வானில் மிதக்கும் மேகமாய்.. அவன் அருகே நின்றிருந்தாள்.
தரையில் கால்படாத குறையே.. அவன் அருகில் நின்றபொழுதோ.. தாறுமாறாய் இரத்தம் எகிறி குதிக்க.. படபடப்போடு காணப்பட்டாள்..
செம்மையேறிய முகத்தின் அழகோடு.. நாணி வளைந்த இதழுமாய் தன் முன் படபடப்போடு இருந்தவளின் அழகு ஆடவனை வீழ்த்தவில்லை . மாறாக ,
" ஸோ.. ஆதிராக்கு என்னாச்சு.. " என்றான் நிதானமாக..அவள் கேள்வியில் புரியாமல் திகைத்து பார்த்தவள்.. "எ..ன்..ன.. " என்று தந்தியடித்தவளிடம்,
"அதுத்தான் உன்னை கேக்குறேன்.. ஒழுங்க படிக்கறது இல்லையா.. தீபன் சொன்னான்.." என்றதும்..
ஓ.. அவ்வளவுதானா.. வேறயெதுவும் இல்லையா.. ச்சை நான் விசா எதாவது சொல்லி இருப்பான்னு தப்பா நினைச்சுட்டேனே.. இப்ப எப்படி.. ப்ரபோஸ் பண்றது.." என்று சிந்தித்து தடுமாறிக் கொண்டிருந்தவளை.. மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தவனாக..
"அப்புறம்.. இது.." என்று ஒரு பேப்பரை காண்பிக்க.. விதிர்த்து போனவாளாய் ஏறிட்டாள்..
அய்யோ.. இது எப்படி இவன்ட்ட.. என்று மூளையை கசக்கி கொண்டு இருந்தவளிடம் ," உன் அண்ணா கொண்டு வந்து.. என் சட்டைய பிடிச்சு கேள்வி கேக்குறான்..", என்று ஆத்திரம் குறையாதவனாய்.. ஆதிராஉதய் என்று ராம ஜெயம் போல் எழுதியிருந்தது.. அந்த தாளில்..
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...