பகுதி - 28
மதிய இடைவேளையின் போது.. ஆர்பாட்டமாய் வந்த ருத்ரா.. " அக்கா வாங்க.. வாங்க..", என்று விஷாலியின் கையை பிடித்து இழுக்கவே.. " என்ன ருத்ரா.. எங்க.. " என்று செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே மூடியவளாய்.. கேள்வி கேட்டாலும் எழுந்திரிக்க..
" என்னது எங்கேயே அக்கா.. ஸாருக்கு சட்டை எடுக்க வேணாமா.. " என்று வேகமாக கூறியவளை.. மேலும் கீழுமாய் பார்த்து
" ம்ச்சு.. ஏன்.." நினைவில் இருந்து இம்சித்துக் கொண்டிருந்த சிந்தனையாகவே இருந்தாலும் அவளிடம் வெளிக்காட்டாதவளாய் அலட்சியம் போல் கேட்க..
" இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா.. அப்படியே குழம்புக் கறை போகவே இல்லை.. அசிங்கமா இருக்கு.. " என்றாள்
" அதுக்கு.. நான் என்னவோ வேணும்னு கொட்டின மாதிரி பேசுற.. எந்த ஊருல இந்த நியாயம் நடக்குது.." என்று சட்டை வாங்க வேண்டும் என்று உரைப்பதை கூற..
" அக்கா.. பேசிக்( basic)சென்ஸ் வேணாமா.. அவருக்காகன்னு சொல்லலை.. ஸாரோட பொசிஷனுக்காகவாவது.. நாம மதிக்கணும் இல்லை.. ",என்றதில் நியாயம் இருப்பது போல் தோன்றவே..
" சரி வா.. ", என்று மூவருமாய் கடைக்கென்று சென்றார்கள்.. பெரிய கடையின் பெயரை ருத்ரா
குறிப்பிட்டதும்.." பாரு ருத்ரா.. உங்க ஆளுக்கு என்னால இவ்வளவு செலவு செய்ய முடியாது.. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில சம்பாத்தியம் உள்ளவுங்க.. அவங்க.. நான் நூறு ரூபாய்கே தாளம் போடுறவ.. என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தான் எடுப்பேன்.. அப்படின்னா வா.. இல்லேனா.. எனக்கு எந்த சென்ஸும் வேண்டாம்னு.. வேலை பார்க்குறேன்..", என்று கறாராக சொல்லவும் தட்ட முடியாமல் விஷாலி அழைத்துச் சென்ற அந்த சிறிய கடைக்குள் மூவரும் நுழைந்தார்கள்..
" அக்கா..",
" அவர் போட்ற சட்டைய நான் எடுக்கணும்னா.. மூனு மாச சம்பளம் வேணும் புரிஞ்சதா.. இதுவே நீ சொன்னதுக்காக ஒத்துகிட்டேன்.. " என்று அவள் மீது பலிப் போட்டவளாய்..
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...