பகுதி - 4
உங்களுக்காக எல்லாம்.. என் கடமையை செய்யாமல் , நான் இருக்க மாட்டேன்.. என்று கிழக்கு திசையில் இருந்து உதிக்கத் தொடங்கிவிட்டான் பகலவன் .
பச்சைப் புடவைக்கு தங்கச் சரிகை சேர்த்து போல் , மலையன்னையை கதிரவனின் கதிர்கள் அலங்கரிக்க.. மெது மெதுவாக.. பொழுது புலர்ந்தது..
கணத்திருந்த , அவளின் மனதை குளிர்விக்கவென்றே , மெல்லிய சாரல் காற்று.. மெதுவாக முகத்தில் அறைய.. முன் நெற்றியில் இருந்த சுருள் முடியும்.. அசைந்தாட.. தனக்கு எதிரே இருந்த, பலா மரத்தில் இருக்கும்., குரங்கையே வேடிக்கை பார்த்து நின்றிருந்தவளுக்கு , கண்கள் வழியே நுழைந்து.. மூலையை சென்றடைந்ததா.. என்பது அவளுக்கே வெளிச்சம் .
விசாலியின் நினைவுகள்.. நான்கு ஆண்டுகளுக்கு.. முன் அவனை சந்தித்தை நினைத்தவளாய் இருந்தாள் . அவள் அங்கு இருக்க காரணமாக இருந்தவனே.. உதய் தான்.. ஷாலி இந்த பள்ளியில் மூன்றாண்டுகளாக படிக்கக் காரணமாக இருப்பவனும்.. அதற்கு உதவியாக இருப்பவனும் உதய் மட்டுமே ! ஆனால் இன்று , அவள் இங்கிருக்க வேண்டுமா.. வேண்டாமா ? என்ற சிந்தனையை உதிக்கச் செய்தவனும் அவனாகவே இருக்கிறான் என்று சந்தித்தவளை ,
" ஏய் ஷாலி.. என்ன முழுச்சுட்டே தூங்கிட்டு இருக்க.. நேத்து உதய் வந்தாங்களா ?" , என்று ஆரவாரமாக கேட்ட குரலில் கலைந்து திரும்பினாள்.. அங்கே தன் தோழி ஆதிரா இருக்கவே.. வேகமாக அவளை நெருங்கியவள்.. "ஹேய்.. ஆதி யாரோட வந்த.."என்றாள் .
" வேற யாரு ? அண்ணா கூட தான் " என்றுது தான் தாமதம்.. பரபரத்தவளாய் ..
" போய்ட்டாரா.. " என்று கேட்க..
" இல்லடீ.. லட்கேஜ் எடுத்துட்டு இருக்கான்.. அதுக்குள்ள உன்னை பார்க்க ஓடி வந்துட்டேன்.. "என்றதும்.. வேகமாக தலையணைக் கீழ் இருந்து எதையோ எடுத்தவள், அதைவிட வேகமாக.. தீபனை தேடி ஓடினாள் .
'என்னாச்சு இவளுக்கு..!' என்று நினைத்தவளாக.. பின்னோடு வர.. அதற்குள் விசாலி.. தீபனை பார்த்துவிட்டாள் .
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...