பகுதி - 43
விஷாலியின் பேச்சு காதில் வாங்கியதிலேயே , உறைந்து அவன் நின்றிருக்க.. சந்திரா கிளம்பிய பின்.. உடல் நடுங்க நடுக்கூடத்தில் சிறிது நேரம் நின்றிருந்தவள்.. அனைத்து வேலைகளையும் முடிக்கும் முனைப்பில்.. சமையற்கட்டிற்குள் நுழைந்துவிட்டாள்.
பெருமூச்செறிந்நவனாய் , தனது அறைக்குள் முடங்கிக் கொண்ட உதய்.. அவள் வரவிற்காக காத்திருக்க.. ஆனால் ஷாலியோ.. மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளையிலும் அறைக்குள் நுழைந்திருக்கவில்லை .
" தூங்க வராம.. இன்னும் என்ன பண்றா..", என்று யோசித்தவனாய்.. வெளி வந்து பார்த்தால்.. அனைத்து இடங்களிலும் விளக்குள் அணைப்பட்டு.. விடி விளக்குகள் எரிந்திருக்க.. அதீத பதற்றத்தால் முகத்தில் வியர்வை துளிர்த்து.. அரை இருளில் அமர்ந்திருந்தவள்.. விரல் நகங்களை மென்று தின்றுக் கொண்டிருந்தவளின் தோற்றத்தைக் கண்டு.. அந்த அச்சம் தனக்கானது என்று அவன் உணர்ந்த கணம் செத்து மடிந்தான் என்றான் மிகையில்லை.
மேலே , நிமிர்ந்து சாற்றப்பட்டிருந்த அவன் அறையையும் பார்க்க அஞ்சியவளாய்.. வேகமாக , சந்திராவின் அறைக்குள்ளே சென்று மறைந்தாள். மெல்லிய உணர்வுகளை கொன்று தின்னும் பொழுது தெரியாதது.. அதன் எதிர்வினை நம்ம தாக்குகையில் தாங்கிக் கொள்ள முடியாததாகவே இருக்கும்... அந்த நிலையில் இருந்தவனுக்கு.. அவளுடைய பதினைந்து வயதில் தான் நடந்துக் கொண்டதை மட்டுமே சிந்திக்கத் தோன்றியதே தவிர.. இடைப்பட்ட இந்த பத்தாண்டுகளில்.. அவள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை மறந்து போனாவாய்..
யாரென்று தெரியாத பொழுது.. அவன் மீது நம்பிக்கை வளர்த்தவளாய்.. துணிந்து அவனிடத்திற்கே.. வந்தவள் , இன்று.. அவன் கணவனான பின்னும் நம்பிக்கையின்மையால் தவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவனாய்.. மனதோடு வதைப்பட்டு.. தனித்து அவனது அறையில்.. வெறித்தவாறு பொட்டு உறக்கம் தன் கண்களுக்கு அனுமதி வழங்காமல்.. தான் ஒரு ஆண் மகன் என்பதையும் மறந்து.. அழுகையில் குலுங்க.. எப்பொழுதும் போல் ஆறுதல் அற்ற நிலையிலேயே கிடந்தான் .
YOU ARE READING
மஞ்சள் சேர்த்த உறவே
Romanceபுவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக...