மஞ்சள் சேர்த்த உறவே

6.7K 67 7
                                    

பகுதி - 1

ஓர் இடத்தில்
விழுந்த விதையாய் 
துளிர்த்து எழுபவள்..
வேறொரு இடத்தில் செழித்தோங்கி
குலம் காப்பாள்..
மஞ்சள் சேர்த்த உறவால்.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல்.. பவனியவள் கோபம் கொண்டு முகம் திருப்ப.. ஆதவனின் கோரக் கதிர்களோ.. அவளின் திருப்பலுக்கு அஞ்சியவனாய்.‌. குளிர்ந்த செங்கதிர்களை வானில்.. அலங்கரித்து குளிர்விக்க முயற்சித்தாலும்.. உன்னுடன் " கா.." என்று கூறியவளாய் , குளுமையான நிலவு மகளுக்கு, கதவை திறந்து நின்றவளிடம் தோற்றுத்தான் போனான்.. அந்த ஆகயா சூரியன் .

தன் காதலியின் கோபத்தில்.. முகம் கறுத்ததினால்.. நீல வானம், இருளை சுமந்திருக்க.. கைக் கொட்டிச் சிரித்தன மின்னும் விண்மீன்கள்.. நாளை உங்களை விழுங்குகிறேன்.. இன்று நான் போய் வருகிறேன் என்று சப்தமில்லாமல் சபதமிட்டவன்.. கடல் தாயின் மடியில் தஞ்சம் புகுந்து கொண்டான் .

மார்கழி பனி, தெருவெங்கும் நிறைந்திருக்க.. கொட்டும் பனியில்.. தன் ஜெர்கினை மேலும் குளிர் தாங்காமல் இழுத்து போர்த்தியவளாய்.. மெல்ல அந்த பள்ளி ஹாஸ்டல் வளாகத்திற்குள் நுழைந்தவளை , எதிர் கொண்டார் அந்த பெண்கள் விடுதியின் காப்பாளர் மேரி வில்லியம் ‌.

"நல்லா லீவ் என்ஜாய் பண்ணியா ?  யாரோட வந்த விசாலி..? " என்றார் ,

"ம்.. அம்மா மேம்.." என்று தன் அதரங்களை மலர்ந்தவளாய் கூறியவள் , நன்றி கூறி விடைப்பெற்று , அந்த நீண்ட பெரும் வழிப்பாதையை இரசித்தவளாய் , அவளுடைய அறைக்குள் நுழைந்தாள் .

ஒருவரும் வந்திருக்கவில்லை போலும் , அவர்களது அறை இருண்டு கிடக்க.. மின்விசை மாற்றுக்குமிழியை அழுத்தி வெளிச்சமூட்டியவள் , தான் கொண்டு வந்திருந்த பையை, தன்னிடத்தில் வைத்து.. நாளைய வகுப்பிற்கான பாடப் புத்தகங்களை எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டாள் .

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now