அவளை அழைத்த காரணத்தையும் மறந்தவனாக , அவளிடத்தில் இருந்து புறப்படும் சுகந்தத்தை ஆழ்ந்து நுகர்ந்தவனுக்கோ , விலகவே மனமில்லை.. தன் அருகே , உணர்ச்சிகளின் பிடியால் துடிக்கும் அவளது இதழை.. உடனே பொருத்திக் கொள்ள எழுந்த வேகத்தை , சில நிமிடங்கள் கட்டுக்குள் வைத்திருந்தான்.. இனி முடியவே முடியாது என்றானதுமே , மேலும் நெருங்கிய பொழுது , கதவை தட்டியவாறு சாவித்திரியின் குரல்.. கரங்கள் இரண்டும் பின்னிக் கொள்ளாமல் , இதழில் தேன்சுவையை ருசிக்காத போதும்.. இருவரின் , மூச்சுக்காற்று மட்டும் அலையென கிளம்பி ஒன்றோடு ஒன்று உரசிய நிலையில் இருக்க.. மயக்கத்தில் இருந்து வெளிவரவே முடியாமல் போனது . முதலில் , சுதாரித்தவன்.. சரணே..
" ஆங்.. இதோ வரேன் அத்தை..", என்று கழுத்தை திருப்பி சப்தமாக குரல் கொடுக்கவும் , விழியை திறக்க.. அப்பொழுதும் மலங்க மலங்க விழித்தவளாய்..
" ம்கூம்.. இப்படியே இருந்தா சரி வராது.. நீ சீக்கிரமா ட்ரஸ் சேஞ்ச் பண்ணீட்டு வா..", என்று விலகி கதவை நெருங்கி இருந்தாலும்.. "வா.. வந்து லாக் பண்ணிக்க..", என்று அசையாமல் அவள் இருந்ததை பார்த்து.. கேள்வியாக சொல்லவும்.. " ம்..", என்று அருகே வந்தவளிடம் , தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக , வேகமாக இதழோடு இதழ் பொறுத்தி தன் முத்திரையை பதித்தவன்.. அதே வேகத்தோடு வெளியேறி இருந்தான் . அவன் செய்த செயலின் மாயங்கள் தாளாமல் , தடுமாறியவளாக இருந்தது என்னவோ தாமரையாகவே இருந்தாள் .
தவிப்பாய் , நின்றிருந்த சாவித்திரியிடமும் அவள் துணி மாற்றுவதாக கூறி.. மீண்டும் உணவருந்து இடத்தில் அமர்ந்துக் கொள்ள.. பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் வராமல் இருக்கவே.. இருமுறைக்கு மேல் சரணின் பார்வை அந்த அறையின் கதவை மீண்டு வந்திருந்தது..
" தாமரை.. என்ன பண்ற..", என்று குரல் கொடுத்திருந்தார் மயூரி.. அவனை கவனித்தவராய்.. அவர் குரலுக்கே கலைந்தவள்.. " இதோ .. இதோ வந்துட்டேன் அத்தை ", என்று விரைந்து ஆடையை மாற்றிக் கொண்டு வெளி வர.. அனைவரும் அவளுக்காக காத்திருந்தார்கள் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 39
Start from the beginning