வெளிர் ப்ரௌன் நிற கருவிழிகளை அழகாக உருட்டி விழித்து.. தூங்கும் தன்னை எழுப்பாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னான் என்றதில் எழுந்த வியப்பை.. மறைக்காமல் வெளிக்காட்டியது . அந்த சிறுபிள்ளை தனத்தில் மென்னகை உதயமானவனாக.. தன் கரத்தை அவள் முன் நீட்டினான் . அவள் எழுவதற்காக.." பரவால்ல.. " என்று அழகாய் தவிர்த்து.. எழுந்து நின்றவளின் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு..
" ரொம்ப பயந்துட்டியா பாப்பூ.." என்றவன் அவள் கரத்தில் பணத்தை கொடுத்தான் .
" தாமரை.. ம்.. உன்னை சரண் தப்பா.." என்று வெளிப்படையாக தன் நண்பனை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் அதேசமயம் அவள் மேல் எழுந்த பரிவில்.. தயங்கியவாறே கேட்க முயன்றவனிடம் ,
" ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்லை.. நா.. உதவி கேட்டு தான் வந்தேன்னு தெரியும்.. " , என்று கூறுவதற்குள் குரல் உள்ளே சென்றுயிருந்தது .
விக்கிக்கு தெரியுமே.. காலையில் தன்னிடம் நடந்துக் கொண்ட முறையிலேயே... அவளிடம் எப்படி நடந்திருக்கிறான் என்பது . மறைக்க நினைக்கும் அப்பெண்ணிடம் தான் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளாமல்.. சரி என்பது போல் கேட்டுக் கொண்டான் .
சரணின் நிலையோ , படு மோசமாக இருந்தது . தன் கடமை அழைக்க தவிர்க்க முடியாமல் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டிய தொழில் சார்ந்த கூட்டத்திற்கு வந்துவிட்டான் . ஆனாலும் நினைவுகள் என்னவோ , விட்டு வந்த இடத்தை சுற்றியே இருக்க.. மிகுந்த எரிச்சல் அடைந்தான் .
ஐந்து மணிக்கு மேல் ஆகியும் அவள் துயில் கலையாமல் போகவே.. எழுப்பவும் மனம் வரவில்லை . அதேசமயம் அவளை மட்டும் விட்டுவிட்டு செல்லவும் பிடித்தம் இல்லை .
ஒருவேளை , அச்சிறு பெண்ணிடம் இனிமையாக நடந்திருந்தாலோ.. அல்ல அவள் கூறவறுவதை பொறுமையாக கேட்டிருந்தாலோ... இந்த அவதிக்கு ஆளாகியிருக்க மாட்டான் . " நீங்க ரொம்ப நல்லவங்க மித்ரன் ஸார்.." என்று தாமரையின் கூற்றே , அவனை முழு மிருகமாகி இருந்தது . அத்தோடு இல்லாமல் உன்னால் எனக்கு எதுவும் ஆகாது என்பது போலான பார்வை.. எனக்கு இது எதுவும் தேவையே இல்லை . நான் நல்லவனே கிடையாது என்று உரக்க மனதிற்குள் கத்தியவன்.. அவளிடத்தில் வேட்டையாடும் வேங்கையாய் மாறி.. கொத்திக் குதறித் திண்றான் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
வா.. வா.. என் அன்பே - 8
Start from the beginning