45

1.8K 86 4
                                    

ஓவியமாய்

அவனது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. அவன் கேட்ட பரிசும் அவளிடமிருந்து கிடைத்ததே!

காலை எழுந்தபோது, தன் மார்போடு சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் கண்கள் பதிந்தன. அவள் சின்ன மூக்கும் சிவந்த உதடுகளும் அவனை அழைப்பதுபோல் இருந்தன. அவள் கட்டியிருந்த சேலை கட்டிலின் கீழே கிடந்தது. அவளுக்கு ஒரு தலையணையை அணைப்பாகத் தந்துவிட்டு ஓசைப்படாமல் எழுந்து அவள் சேலையை மடித்து வைத்தான் அவன். மணி ஐந்து இருபது ஆகியிருந்தது.

தன் கைபேசியைத் தேடினான் அவன். அது சத்தமாக அடித்தால் அவள் தூக்கம் கலைந்திடுமே என்ற கரிசனம் முகத்தில். அவன் நினைத்தவுடன் அவனது கைபேசி சத்தமாக அடித்தது. ஹாலில் சோஃபாவில் இருந்தது அது. சென்று அதை எடுத்தான்.

ஜோஷி.

"விஷ்வா!!! ஹேப்பி பர்த்டே! கரெக்டா 12 மணிக்கு விளிச்சேன் பாத்தியா? "

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் விஷ்வா.
"தேங்க்ஸ் ஜோஷி! எப்டி இருக்க?"

"ஞான் ஃபைன். நிங்களவிட எங்கனெயோ?"

"ம்.. நாங்க நல்லா தான் இருக்கோம் ஜோஷி. நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சா?"

"வேலையா?? ஐயடா! ஞான் B.Ed கோர்ஸ்ல சேர்ந்துட்டன்"

"ஓ... அப்ப மாறன் சாருக்கு காம்படீஷன் ரெடி ஆயிடுச்சுன்னு சொல்லு!"

"ஹாஹாஹா! ஷெரி விஷ்வா, நீங்க எப்போ திரிச்சி வருவிங்க?"

"இன்னும் நாலு மாசம்"

"ஓ..."

"ஹம்ம்."

"ஓக்கேடா மோனே.. மஹியை கேட்டதா சொல்லுடா. பின்ன விளிக்கான், பைய்"

"சரிடா வச்சிடறேன். பை"

"ம்.. டேக் கேர். பை"

அழைப்பை அணைத்துவிட்டு வாட்ஸ்ஸாப்பை ஆராய்ந்தான். நண்பர்கள் பலர் வாழ்ந்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். அதற்கு பதில்கள் அனுப்பியவாறு சோஃபாவில் சாய்ந்தான் அவன்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now