33

1.7K 86 6
                                    

காவலன்

அந்த White Hart Yard பகுதி, லண்டனின் மிக நவீனமான பகுதிகளில் ஒன்றாகும். சிறிய இடம் என்றாலும், அங்கே இரண்டு கல்லூரிகளும், பதினைந்து உணவகங்களும், மூன்று வங்கிகளும், ஐந்து ஷாப்பிங் மால்களும் நிறைந்திருந்தன. தேம்ஸ் நதியின் தென்கரையில் இருந்த இந்தப் பகுதியில், இளைஞர் பட்டாளம் எப்போதும் குழுமியிருக்கும்.

மஹிமாவின் கல்லூரியான London School of Commerce, (இனி LSC) அந்தப் பகுதியில் மையத்தில் வீற்றிருந்தது. கோட்டை போன்ற அக்கல்லூரியைச் சுற்றியே மற்றவை யாவும் இருந்தன.

மஹிமா கல்லூரியின் தோட்டத்தை ரசித்திருக்க, திடீரென அவளெதிரில் வந்த ஒரு ஆங்கிலேய இளைஞன்,
"Go away! You are not welcome here" என்று அவள் முகத்தில் கத்தினான். திடுக்கிட்ட மஹிமா, சிலையாய் உறைந்துபோனாள்.

அவன் மேலும்,

"You Asian mongrels... get lost" என்று திட்டிவிட்டு, மூர்க்கமாக அவளைக் கீழே தள்ளிவிட்டு எங்கோ சென்று மறைந்தான்.

கீழே விழுந்தவள் எழுந்து நிற்பதற்குள், அவளைச் சுற்றி கூட்டம் கூடியது. ஆளாளுக்கு ஏதோ பேசினரே தவிர, யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. தானாகவே எழுந்து, தன் பையையும், சிதறிய ஆவணங்களையும் திரட்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள். அவமானத்தில் கண்ணீர் வெள்ளமென வழிந்தது.

கல்லூரி வாசல் வரை மட்டுமே அவளால் நடக்க முடிந்தது. அழுகையில் தந்தையின் நினைவும், கூடவே காரணமின்றி விஷ்வாவின் நினைவும் சேர்ந்துகொள்ள, இதயம் வெடிப்பதுபோல வலித்தது. அதற்குமேல் நிற்க முடியாமல் வெளிச்சுவற்றில் சாய்ந்தாள் அவள்.

அவளது மனக்குரல் கடவுளுக்குக் கேட்டிருக்க வேண்டும். அந்த whitehart யார்டில் இருந்த இரண்டாவது கல்லூரி- கிங்ஸ் கல்லூரியேதான்.

ஓடிவந்து தன்னை அணைத்துத் தோளில் சாய்த்துக் கொள்பவனின் முகம்பார்க்கத் தேவையில்லை அவளுக்கு. அவனது அணைப்பே அவன் யாரென்று கூறியது.

மெய்மறந்து நின்றேனேحيث تعيش القصص. اكتشف الآن